செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் சம்பந்தப்பட்ட மாதிரி தேர்வுகள் கடந்த 19ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்களின் தேர்வுகளை எழுதி உள்ளனர். சிலரின் பெயர் ஆன்லைன் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்வில், இயற்பியல் பாட பரீட்சையின் போது 38 மதிப்பெண்களுக்கு வேதியியல் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்  பரீட்சையின் போது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாளர்கள் இந்த  … Read more

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடக்கு சட்டீஸ்கர் ,ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் ,அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரியில் 11 சென்டி … Read more

நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் பழனிசாமி,நான் ஒரு விவசாயி என்றும் மு.க.ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,நான் ஒரு விவசாயி என்பதால் ஏழை விவசாய … Read more

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து முழுமையாக நிரம்பி , உபரிநீர் தமிழகத்தை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக … Read more

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more

இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

இனி வீட்டு வாசலிலேயே மின்சார நுகர்வு கட்டணத்தை வசூலிக்கும் புதிய திட்டத்தை தமிழக மின்சார வாரியம் விரைவில் அறிமுகப்படுத்தயுள்ளது. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின் கட்டண மையங்களில், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், மொபைல் செயலி உள்ளிட்ட முறைகளின் மூலம் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் “பாயின் ஆப் சேல்” என்ற டிஜிட்டல் வாயிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக நுகர்வு … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரூர் அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வேளாங்கண்ணி (36) என்பவருக்கு 2 மகன்களும், ஒரு மகளுடன் வசித்து வந்தார் .இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அந்த பெண் வந்து, திடீரென … Read more

கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

சிவகாசி அருகே வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து சிறிய காடுகளையும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த கண்மாய்கள் தூர்வாரி பராமரித்து வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அந்த கிராமத்தில் உள்ள இயற்கையை மிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதில் முதல் கட்டமாக 60 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருந்த கண்மாய்களை தூர்வாரும் பணியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியுள்ளனர்.மேலும் அவர்கள் காடுகளை உருவாக்கும் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்: 1,053 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்: 1,053 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,62,483 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 88,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,01,468 … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேர் பாதிப்பு; 60 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேர் பாதிப்பு; 60 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,334 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 60 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,492 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more