ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் கொரோனா

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் கொரோனா

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று ஆக அதிகமாக 41 பேர் கிருமித்தொற்றால் இறந்தனர். இருப்பினும் புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் ஆகக் குறைவாகப் பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில், 73 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. சென்ற மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான எண்ணிக்கை அது. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் (Melbourne) 6 வாரக் கடுமையான முடக்கம் இன்னும் நடப்பில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 26,000பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 650 … Read more

அரசுக்கு எதிராக மொரீஷியஸில் வெடிக்கும் போராட்டம்

அரசுக்கு எதிராக மொரீஷியஸில் வெடிக்கும் போராட்டம்

மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கப்பல் விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் சம்பவத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கப்பல் விபத்தை கையாள்வதில் … Read more

டிரம்பினால் நிகழ போகும் வரலாற்று நிகழ்வு?

டிரம்பினால் நிகழ போகும் வரலாற்று நிகழ்வு?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இஸ்ரேலை தனி நாடகவும் ஏற்றுக்கொண்டது. ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான். இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு … Read more

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி; 5956 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 91 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,008 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

விமான நிலையத்தில் வெடித்த ராக்கெட் குண்டுகள்

விமான நிலையத்தில் வெடித்த ராக்கெட் குண்டுகள்

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்தன. தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பசுமை மண்டல பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் உருவானது. காலியான இடத்தில் ராக்கெட் விழுந்து வெடித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இது என்றும் ராணுவம் கூறி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த … Read more

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

தனது சொத்துகள் முழுவதையும் செலவழித்து  மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர … Read more

டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார். மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் … Read more

#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று மாலை காலமானார். முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84), கடந்த 10-ம் தேதி மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல … Read more

தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன. குறிப்பாக திராவிட கட்சிகளும், பாஜக காங்கிரஸ் போன்றவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2011 இல் எதிர்க்கட்சி அவையில் இருந்த தேமுதிக அதன்பின்பு வலுவிழந்து காணப்பட்டது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தனது முழு பலத்தையும் பிரயோகிக்க இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.   ராமநாதபுரம் … Read more

இந்திய – ரஷ்ய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய - ரஷ்ய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா – ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் … Read more