ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

பனிப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு முன்பைவிட அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக சுற்றுலா சென்று வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் பகுதியில், பனிப் பொழிவில் நனைந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக மலைகளின் அரசியான மூசோரியில் எங்கும் பனி சூழ்ந்தது. இதனிடையே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பணி சூழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ரஜோரி, பூஞ்ச், … Read more

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்”- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்"- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தை சேர்ந்தவர் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அருவிக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு, தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ,வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மாணவரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு … Read more

கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்றைய வணிக நேர தொடக்கத்திலேயே 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் கொரனோ தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .இன்றைய வணிக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. முற்பகல் 10 மணியளவில், மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து, 58 ஆயிரத்து 487 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி … Read more

சமூக பரவலானது ஒமைக்ரான்”- மரபனு ஆய்வகம் திடீர் அறிக்கை!

சமூக பரவலானது ஒமைக்ரான்"- மரபனு ஆய்வகம் திடீர் அறிக்கை!

ஒமைக்ரான் தொற்று குறித்து, மரபனு பகுப்பாய்வு ஆய்வகம் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான, தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறி அற்றதாக இருந்தாலும், தற்போது மருத்துவமனை அறையில் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சுறுத்தல் அதே நிலையில் தான் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட B1.640.2 வகை பிரிவைப் பொறுத்தவரை அது கவனமாக … Read more

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா, முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60% பேரை பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அது முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால், உலகின் பல நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களுக்கு … Read more

ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஹிந்துக்களுக்கு, எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்; என கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனுத்தாக்கல் செய்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஹிந்தி சேனா … Read more

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

தமிழகத் தொல்லியல் துறையின் பிதாமகன் என போற்றப்படுபவர் அறிஞர் நாகசாமி. இவர் நேற்று முதுமை காரணமாக காலமானார் .அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவி ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் நேற்று மதியம் காலமானார். மறைந்த நாகசாமி தமிழின் சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம் ,வேதங்கள், இதிகாசங்கள், … Read more

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 2650 இடங்களும், என 6999 எம்பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் மருத்துவ படிப்பில் 1930 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு; … Read more

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

பாமக மாநில இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தர்மபுரி மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே, … Read more

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள், என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தல். திருத்தம் செய்ய உள்ள முடிவு இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. நிர்வாக கூட்டமைப்பின் தன்மை, பணியாற்றும் செயல்திறனை பாதிக்கும் வகையில் உள்ளது. 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.