நூதன முறையில் மோசடி செய்யும் ஹேக்கர்கள்! பொதுமக்களே உஷார்!

0
203

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வங்கியில் அபரிவிதமான முன்னேற்றமடைந்து வருகின்றன. இன்ஸ்டன்ட் பேமெண்ட். பணப்பரிமாற்றங்கள் முதல் உடனடி கடன் ஒப்புதல் வரையில் பல்வேறு விதத்திலான சேவைகள் வழங்கப்படுகின்றன அதே நேரம் மற்றொரு புறம் மோசடியும் அதிகரித்து வருகின்றன.

வங்கியின் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களை நிதி மோசடி குறித்து அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகின்றன சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி கூட புதிய வகை நிதி மோசடி தொடர்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது. வங்கி மோசடி செய்பவர்கள் பொதுமக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை whatsapp மூலமாக ஏமாற்றி மோசடி செய்வது தற்போது தெரியவந்திருக்கிறது.

வாட்சப் மற்றும் பேஸ்புக் மூலமாக மோசடிகள்

மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் கணக்கை அணுகி வாடிக்கையாளர்களின் தொடர்பு பட்டியலிலிருக்கின்ற தொடர்புகளுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்புகிறார்கள்.

ஐசிஐசிஐ வங்கி கூற்றினடிப்படையில் இந்த அவநம்பிக்கையான காலங்களில் நிதிக்கான பல உண்மையான கோரிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகவே தெரிந்த தொடர்புகளின் கோரிக்கை வழக்கத்திற்கு மாறானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

சிலர் நம்பகமான நபர்களின் தொடர்புகளிலிருந்து நிதி தொடர்பான கோரிக்கைகள் வருவதால் உதவி கோரிய நபர்களை தொடர்பு கொள்ளாமலேயே பணத்தை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இது போல பல நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு எப்போதும் உறுதி வெடித்துக் கொள்ள வேண்டும், ஐசிஐசிஐ வங்கி இவ்வாறு எச்சரிக்கை செய்திருக்கிறது.

உங்களுடைய வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால் அதனை உடனடியாக சைபர் கிரைம் போன்றவர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

2,ஃபிஷிங்

கணக்கு எண்கள், லாகின் ஐடிகள், உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்கள், கைபேசி எண்கள், முகவரிகள், டெபிட் கார்டு, கட்ட மதிப்புகள், கிரெடிட் கார்டு எண்கள், சிவிவி எண்கள், பான் எண்கள், பிறந்த தேதிகள், தாய்மார்களின் உண்மையான பெயர்கள், பாஸ்போர்ட் எண்கள், உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் தகவல்களை பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்ஃபிஷிங், குரல் ஃபிஷிங் மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றின் கலவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிஷர்கள் இணையதள வங்கியின் யூசர்களை ஏமாற்றுவதற்காக அதிநவீன சமூக பொறியியல் நுட்பங்களை பயன்படுத்தி சிக்கலான தாக்குதல்களை மேற்கொள்ள தங்களுடைய தொழில்நுட்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

3.விஷிங்

விஷிங் என்பது தொலைபேசி மூலமாக உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்கான ஒரு கான் ஆர்டிஸ்டின் முயற்சியை குறிக்கிறது. யூசர் ஐடி லாகின் மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்கள், ஒன் டைம் பாஸ்வேர்ட், பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட பதிவு எண்கள், கார்டு பின்கள், CVVக்கள் அல்லது பிறந்த தேதி அல்லது தாயின் இயற்பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற மோசடி கும்பல்கள் இந்த முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.

மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை சொல்லி தங்களை வங்கியிலிருந்து பேசுவதைப் போல காட்டிக் கொள்வார்கள். அதன்பிறகு உங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து வங்கி கணக்கிலிருக்கின்ற பணங்களை எடுப்பதற்கு முயற்சி செய்வார்கள்.

ஸ்மசிங்

இது குறுஞ்செய்தி மூலமாக செய்யப்படும் மோசடியாகும் நாடு முழுவதுமிருக்கின்ற கைபேசி பயனர்கள் தங்களுடைய கணக்கு காலாவதி ஆகிவிட்டது, புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது புதிய திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கும் செய்திகளை பெறுகிறார்கள்.

இந்த செய்தியில் கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணைப்புகள் உள்ளிட்டவை இருக்கின்றன அதனை தொடர்பு கொள்ளும் நபர்களின் வங்கி கணக்குகளை ஹேக்கர்கள் அல்லது மோசடி கும்பல்கள் பணத்தை திருடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleஷங்கர் இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன்… வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்ட படம்
Next articleவட சென்னையில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here