செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்!

0
155
Beauties ready to go on sex tours! Cost-bearing customers! Caught cops!
Beauties ready to go on sex tours! Cost-bearing customers! Caught cops!

செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்!

பல வருடங்களாகவே ஆண் பிறவிகளை திருப்திபடுத்த என பாலியல் தொழில்கள் நடந்துதான் வருகின்றன. ஒவ்வொரு காலத்திற்கு தகுந்தாற்போல் அவர்களும் பல மாறுதல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்களாம். பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவர்களும் தொழில் செய்கிறார்கள்.

ஆனால் மகிழ்ச்சிக்கென தனியாக அவர்கள் இருந்தாலும், சமூகம் சீரழிந்து வருவது ஒரு புரம் நடந்துதான் வருகிறது. பெற்ற தாயில் இருந்து பிஞ்சு குழந்தை வரை பெண்கள் என்றாலே ஒரு விதமாக தான் ஆண்கள் பார்க்கிறார்கள். நாமாக அவர்களை தேடி போய் பார்த்த காலம் போய் தற்போது உணவு வகைகளை போல் கைபேசியிலும், அதன் மூலம் உள்ள பல தொழில் நுட்பங்களினால் அவர்களை பயன்படுத்தும் முறைகளும் பல அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

தற்போது அதை விட அடுத்த கட்ட வளர்ச்சியாக, புதுவரவாக  வாடிக்கையாளர்களுடன் அழகிகளை சுற்றுலா தலங்களுக்கு அனுப்பி ஹை-டெக் முறையில் செக்ஸ் சுற்றுலா நடத்த இருந்த நிலையில் 2 பெண்களை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், சிலர் சபல புத்தி உடையவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி சுலபமாக பணத்தை சம்பாதிக்க இப்படி செக்ஸ் தொழிலில் காலத்திற்கு ஏற்றார்போல் புதிய யுக்திகள் சிலவற்றை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த முறையில் புது ஹை-டெக் முயற்சியாக செக்ஸ் சுற்றுலா ஒன்றை நடத்தி பணம் குவித்து வந்ததாக 2 பெண்களை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இது பற்றிய சுவாரசியமான தகவலை போலீசார் வெளியிட்டனர். அதன்படி அவர்கள் இவ்வாறு இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளனர். மும்பையில் கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர், செக்ஸ் சுற்றுலா என்ற பெயரில் விபசார தொழில் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசியமான தகவல் ஒன்று கிடைத்தது.

அதாவது அவர்கள் வாடிக்கையாளர்களை தங்களது வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தங்கள் கைவசம் உள்ள விபசார அழகிகளை, நாட்டின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு உல்லாசத்திற்காக அனுப்பி வைப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இதில் தொடர்புடையவர்களை கையோடு பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். அந்த திட்டப்படி செக்ஸ் சுற்றுலா நடத்தி வரும் முக்கிய குற்றவாளியான பெண்ணிடம் போலி வாடிக்கையாளர்கள் மூலம் அணுகினர். இந்த போலி வாடிக்கையாளர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார்.

போலிசார் போட்ட திட்டப்படி அங்கு வந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் இருவரும் கோவாவுக்கு செக்ஸ் சுற்றுலா செல்ல விரும்புவதாக விருப்பம் தெரிவித்தனர். அப்போது அவரிடம் தலா ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று அப்பெண் கூறியுள்ளார். தொடர்ந்து நடந்த இந்த பேரத்தில் ஒருவருக்கு ரூ.45 ஆயிரமும், மற்றொருவருக்கு ரூ.40 ஆயிரமும் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி அந்த தொகை பெண்ணிடம் கைமாறியது.

ஆனால் இதெல்லாம் தன்னை பிடிக்க போலீசாரின் சதி வலை என தெரியாத விபசார தொழில் செய்யும் அந்த பெண், அவர் சொன்னபடி 2 அழகிகளை அழைத்து கொண்டு மும்பை விமான நிலையம் வந்திருந்தார். அங்கு போலீசார் அனுப்பிய போலி வாடிக்கையாளர்களும் வந்தனர். வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்க 2 அழகிகளுடன் வந்த அந்த பெண் விமான நிலையத்தில்  விமானம் புறப்படும் நுழைவு வாயிலுக்கு சென்றார்கள்.

இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் 2 விபசார அழகிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலையிலேயே நடந்துள்ளது. மேலும் அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் மேலும் அவரது விபசார தொழில் கூட்டாளியான மற்றொரு பெண்ணையும் போலீசார் பிடித்துள்ளனர். 2 பெண்களையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களை நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்துள்ளனர். மேலும் பிடிபட்ட அழகிகள் இருவரையும் பெண்கள் காப்பகத்திலும் ஒப்படைத்தனர். இதற்கிடையே செக்ஸ் சுற்றுலா பெயரில் விபசாரம் தொழில் நடத்திய 2 பெண்களிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்களும் வெளியானது.

இவர்களது செக்ஸ் சுற்றுலா திட்டத்தின் படி, நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு 2 நாள் உல்லாச பயணமாக வாடிக்கையாளருடன் அழகிகளை அனுப்பி வைப்பார்கள். இதற்காக வாடிக்கையாளருக்கு அழகிகளின் படங்களை செல்போன் மூலம் அனுப்பி வைப்பார்கள். அதில் ஒரு அழகியை வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் செக்ஸ் சுற்றுலா செல்லும் இடத்தையும் வாடிக்கையாளரே முடிவு செய்ய வேண்டும் என்பதும் இவர்களது கட்டளையாம்.

இதன் அடிப்படையிலேயே பேரம் பேசப்பட்டு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்து கொள்வார்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவருக்கும், அவருடன் வரும் அழகிக்கும் விமான டிக்கெட் எடுக்க வேண்டும். 2 நாள் உல்லாச சுற்றுலாவிற்கு ஆகும் மற்ற அனைத்து செலவுகளையும் வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தான் 2 பெண்கள் நடத்தி வந்த செக்ஸ் சுற்றுலாவின் சிறப்புகள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.வாடிக்கையாளர்கள் பலரும் தாங்கள் உல்லாசம் அனுபவிக்க கோவாவை விருப்ப இடமாக தேர்வு செய்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இந்த செக்ஸ் சுற்றுலாவில் விழுந்தவர்கள் பிரபல தொழில் அதிபர்களும், உயர் பதவி வகிப்பவர்களும் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செக்ஸ் சுற்றுலா நடத்தி கைதாகி உள்ள 2 பெண்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். விசாரணையில் மேலும் பல புதுமையான தகவல்கள் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை போலீசார் ரகசிய வேட்டையாடி செக்ஸ் சுற்றுலாவை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.