பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!

0
79
BJP Union Minister Narayana Rane arrested Disappointment caused by speaking in a controversial way in the first place!
BJP Union Minister Narayana Rane arrested Disappointment caused by speaking in a controversial way in the first place!

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!

சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ராணே மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் கலந்து கொண்டார். அப்பொழுது சுதந்திர தின உரையின்போது மகராச முதலில் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்து விட்டதாக கூறினார்.

அவர் அந்த நேரத்தில் நான் அங்கு இருந்திருந்தால் உத்தவ் தாக்கரே அடைந்திருப்பேன் என பாஜக கூட்டத்தில் கடுமையாக பேசினார். இவர் பேசியதற்கு சிவசேனா கட்சியினர் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் நாராயணன் மீது புகார் அளித்தனர். அதனால் மத்திய அமைச்சர் நாராயண ராணே மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். அவரை கைது செய்வதற்கு முன்னதாகவே சிவசேனா கட்சி தொண்டர்கள் அவர் மீது அதிகம் கோபமுற்று மகாராஷ்டிரா முக்கிய பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர் நாராயணன் கோழி திருடன் என்ற விமர்சித்து அச்சகங்களை ஒட்டி வருகின்றனர்.

ஏனென்றால் மத்திய அமைச்சர் நாராயண ராணே இளைய வயதில்  கோழி கடை நடத்தி வந்ததால் அவரை விமர்சித்து இவ்வாறு அச்சகங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் சிவசேனா தொண்டர்கள் மத்திய அமைச்சர் நாராயண வீட்டிற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்பொழுது சிவசேனா தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். எனும் மற்றொரு இடமான தானே விழும் பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். அமைச்சர் நாராயணன் அவ்வாறு பேசியதால் தற்போது வரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கலவரமானது தொடங்க அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதனையொட்டி தற்போது பாஜக மத்திய அமைச்சர் நாராயணன் ராணே  கைது செய்யப்பட உள்ளார்.