Home Blog Page 124

முதல்வர் ஏன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? சுகாதார துறை அமைச்சர் கொடுத்த விளக்கத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!

0

கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அன்றைய தினம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் தனது அண்ணன் இறந்த துயரத்தில் ஆழ்ந்தார். பின்னர் இறப்பு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

அடுத்த நாள் எப்பவும் போல் முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக முதல்வரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் மக்கள் பணி செய்துவருவதால் அவர் சிறிது நாட்கள் வீட்டில் இருந்து மருந்து எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டே அரசு பணிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகின. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது ஏன் முதல்வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது அரசு சார்பில் அதிக பாதுகாப்புகள் வழங்கப்படும். இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொதுமக்களின் சேவை பாதிக்கப்படும். மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக தான் முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று பதிலளித்தார். சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த பதில் மக்கள் நம்பும்படி இல்லை என்றும், அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருத்துவம் தரமாக இருக்காது என்று தான் முதல்வரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் எனவும் மக்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதலமைச்சர்ன்னு கிளம்புறான்.. திருமா ஆவேசம்!

0

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சி 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொல்.திருமாவளவன் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவுடன் இணைந்ததில் இருந்தே திமுகவிற்கு கூஜா தூக்கும் வேலையை தான் அதிகம் செய்து வருகிறார்.

விசிக கட்சியின் ஓட்டுகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருப்பதால் திமுக, அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் எப்படியாவது தங்கள் கூட்டணியில் விசிகவை இணைத்து விடவேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆனால் திருமாவளவனோ தன்னுடைய பலம் என்ன என்று தெரியாமல் திமுகவுக்கு தான் துணை நிற்பேன் என்கிற தோனியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் திருமா அளித்த பேட்டி ஒன்றில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறேன் என்று சொல்லியும் நீங்க ஏன் அந்த கூட்டணிக்கு போக மறுக்கிறீர்கள் என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் திருமாவளவனிடம் கேட்டனர். துணை முதலமைச்சர் பதவி கொடுத்தா நான் அந்த கூட்டணிக்கு போகணுமா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதல்வர்ன்னு சொல்லிக்கிட்டு பிரச்சாரம் பண்ணுறாங்க. நான் பொதுவாழ்க்கையில் அரசியலில் 35 வருடங்களாக இருக்கிறேன்.

எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நானும் தான் ரௌடின்னு சொல்லிட்டு என்னை வந்து முதலமைச்சர் ஆக்குங்கன்னு என்கிட்ட வந்து கேக்குறாங்க. எனக்கு இருக்க அனுபவத்துக்கு நான் முதலமைச்சர் பதவிக்கே தகுதியானவன். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் இப்படி துணை முதல்வர் பதவி எனக்கு தரேன்னு மற்ற கட்சிகள் சொல்கிறார்கள் என பதில் கொடுத்துள்ளார் திருமாவளவன். திருமாவின் இந்த பேச்சு விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக வின் முக்கிய புள்ளியை தூக்க பார்க்கும் திமுக.. எடப்பாடியை நிற்கதியாக்க பலே திட்டம்!!

0

ADMK DMK: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக அதிமுகவிற்கு போட்டியாக தற்பொழுது தவெக இறங்கியுள்ளது. இதனால் வாக்கு சதவீதமானது பெருமளவில் மாறுபடும், அரசியலுக்கு புதிய கட்சி என்றாலும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் தற்போது வரை திமுக அதிமுக தவெக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை.

அதிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் கூட்டணி ஆட்சி முறைதான் எனக் கூறி வருகின்றனர். அதற்கு எடப்பாடி முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என கூறிய எடப்பாடி தற்பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் இவர்களுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனால் அதிமுகவின் கூட்டணியிலிருந்த எஸ்டிபிஐ கட்சி முதலில் விலகியது அனைவருக்கும் தெரிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவிரோத மசோதாவை தாக்கல் செய்த பாஜகவை முழுமையாக கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜாவும் கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைந்துவிட்டார். இதனால் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவருவது என்பது சந்தேகம்தான். அந்த வரிசையில் அடுத்தடுத்து பல தலைகள் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரிடமும் திமுக முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம். ஆனால் இவர் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை, மேற்கொண்டு அதிமுக தான் முழுமூச்சு என்று உள்ளாராம். இது ரீதியான தகவலை ஜெயக்குமாரின் நம்பிக்கைகுறிய நபர் வெளியிட்டுள்ளதால் சற்று அதிருப்தியில் உள்ளார்.

கட்சிக் கூட்டணி குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தற்போது ஜெயக்குமார் திமுகவில் இணைய போகிறாரா என்ற செய்தி மேலும் குளறுபடியை ஏற்படுத்தும் என்கின்றனர்.

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

0

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.

அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து வந்துள்ளார். தனிமை அவரை வாட்டி வதைத்துள்ளது. அந்த மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி அந்த மாணவன் லேப்பிற்கு வரும்போது சந்தித்து நட்பாக பழகியுள்ளனர்.

இந்த நட்பு சிறிது நாட்களில் காதலாக மாறியுள்ளது. பின்னர் அந்த கல்லூரி மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த மாணவர் நான் பெங்களூரு படிப்பு விசயத்திற்காக செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

பெங்களூரு சென்ற மாணவன் நீண்ட நாட்களாக தனது பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் பெற்றோரை புறக்கணித்து வந்துள்ளான்.

இதனால் மாணவனின் பெற்றோருக்கு மகனின் நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது. பின்னர் எங்களது மகன் பெங்களூரு படிப்பு விஷயமாக செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன் இதுவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவனின் செல் போன் எண்ணை ட்ராக் செய்தபோது அந்த மாணவர் லேப் டெக்னீசியன் பெண்ணுடன் 2 மாதங்களாக ஹோட்டலில் ரூம் எடுத்து கணவர் மனைவி போல வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று மாணவரை தனியே அழைத்து புத்திமதி சொல்லியுள்ளனர். அதேபோல அந்த பெண்ணுக்கும் புத்திமதி சொல்லி இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவனை கல்லூரி ஆசிரியை காதலித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்தை கதிகலங்க வைத்துள்ளது.

நான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

0

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர அனுதினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை ரத்தினக்கம்பளம் கொண்டு வரவேற்போம் என்றும் அனுதினமும் எடப்பாடி ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வந்தால் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தருவேன் என்றும், நீங்கள் நினைப்பதை விட அதிக தொகுதிகள் கொடுப்போம் என்றும் எடப்பாடி சொன்னதாக திருமா அண்மையில் பேட்டி கொடுத்தார்.

ஆனால் இதுவரை விசிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை செய்யவில்லை என்றும், துணை முதல்வர் பதவி அதிக சீட்டுகள் தருகிறேன் என்று நான் சொல்லவில்லை எனவும் எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி சொல்லாத ஒருவிஷயத்தை ஏன் சொன்னதாக இப்படி திருமா பொது இடங்களில் பொய் பேசி திரிகிறார் என மக்கள் சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

0

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள்

பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமை மீட்பு பயணம்:

அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபயணமாக உரிமை மீட்பு பயணம் மூலமாக மக்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 முக்கிய அடிப்படை உரிமைகள் — சமூக நீதி, வேலை, கல்வி, நலவாழ்வு, நல்லாட்சி, விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, சீரான நகர வளர்ச்சி, போதை எதிர்ப்பு உரிமை மற்றும் சுற்றுசூழல் ஆகியவை திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே பயணம் மேற்கொள்கிறேன்” என சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார் அன்புமணி.

ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு!

இது ஒரு புறம் இருக்க, அப்பா-மகன் இடையேயான அதிகார மோதல் சார்ந்த முரண்பாடுகள் தற்போது உச்ச கட்டத்திற்கு வந்துள்ளன. பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான ராமதாஸ், இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபியிடம் நேரில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

  • கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.

  • பாமக கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை இந்த பயணத்தில் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.

  • பொதுமக்களை சந்தித்து கருத்து பரப்பும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

குழப்பத்தில் தொண்டர்கள்

இந்த உரிமை மீட்பு பயணம் மற்றும் அதிகாரப்பூர்வ எதிர்ப்புகள், பாமகவின் உள்கட்சிப் பிரச்சனை மற்றும் இரட்டை தலைமையைப் பற்றிய வதந்திகளை மேலும் வலுப்படுத்துகின்றன. கட்சித் தொண்டர்களிடையே இது மேலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டியானது, பாமக கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலையில் உள்ளது.

அன்புமணியின் “உரிமை மீட்பு பயணம்” அதிகாரபூர்வமான கட்சி நடவடிக்கையா? இல்லையா? அதற்கு அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் எதிர்ப்பது ஒரு அரசியல் முடிவா அல்லது குடும்ப ரீதியான பிளவா? என்பது தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

மக்கள் உரிமைக்கான போராட்டமா? அல்லது பாமகவின் பிளவுக்கான தொடக்கமா?
அடுத்த சில நாட்களில் இதற்கான தெளிவான பதில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அன்புமணியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

திமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 

தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது:

“திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சி பெறக்கூடாது என்ற எண்ணம் பொதுமக்களில் தெளிவாக தெரிகிறது.”

அதனைத் தொடர்ந்து, திமுக எடுத்த கருத்துக் கணிப்பு (Survey) பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

“20 இடங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கே இருக்கிற கட்சி சர்வே எதற்காக எடுக்கிறது? மக்கள் உணர்வுகள் மாற்றம் அடைந்துள்ளன. திமுகவின் தோல்வி இந்த முறை உறுதி.” என அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் சகோதரர் மற்றும் விஜய் குறித்து பதில்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் சத்தியநாராயணராவ், விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், அண்ணாமலை புத்திசாலி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது

“ரஜினியின் சகோதரர் என்னுடைய திறமையை பாராட்டினாலும், விஜய் குறித்து அவர் கூறிய கருத்துகள் அவருக்கே உரியது. விஜய் ஒரு கட்சி தொடங்கி உள்ளார். அவர் களத்திற்கு வந்து உழைத்தால் அதனால் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு அல்லது தோல்வி அவருடையதே” என்று குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் பிளவு

அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் நோக்கத்தில் பேசினார்.

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே மக்கள் விருப்பம். புதிய கட்சிகள் வரவேண்டும், ஒவ்வொரு கூட்டணியும் தெளிவாக ஒரு வடிவம் பெறவேண்டும். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விரைவில் விலகும் சூழ்நிலை உருவாகும்.”

TNPSC தேர்வில் பாடத்திட்ட மீறல் குற்றச்சாட்டு

அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை கூறியதாவது:

“TNPSC தேர்வில் பல கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியே கேட்கப்பட்டுள்ளன. இது மாணவர்களின் திறனை சோதிக்கும் நேர்மையான முறையாக இல்லை. இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாக இது இருக்கிறது.”என்று கூறினார்.

தமிழக அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அண்ணாமலையின் கூற்றுகள், தேர்தல் முன் அரசியல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன. திமுக வெற்றி பெறும் தொகுதிகள் வெறும் 20 என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ள அவர், விஜய், ரஜினி, TNPSC, மற்றும் கூட்டணிக் விவகாரங்களை ஒட்டுமொத்தமாக தீவிரமாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி-யுடன் கை கோர்ப்பாரா சீமான்.. நாதக நிர்வாகி பரபர பேச்சு!!

0

NTK ADMK: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து பல ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்த மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி என பலவற்றை இழந்து வருகிறார். அதிலும் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவருடன் கூட்டணி வைக்கலாம் என்று திட்டம் தீட்டிய பெரும்பாலானோர் அதனை கை விட்டுவிட்டனர். தற்போது திமுக-விற்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்த சுற்றுப்பயணத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக சிபிஎம் உள்ளிட்டவைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஏனென்றால் இவர்கள் திமுகவுடன் கூட்டணியிலிருந்தாலும் மறைமுகமாக அவர்களை பற்றி சாடி பேசுவதுண்டு. அதனால் எடப்பாடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் கலந்துக்கொள்ள வில்லை. இதற்கு அடுத்ததாக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும். அதில் தமிழக வெற்றிக் கழகம் அடங்கும் என கூறியிருந்தார். மேலும் நாம் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது இது ரீதியாகத் தான் இடும்பாவனம் கார்த்திக் பேசியுள்ளார். அதில், அதிமுக கடந்த மக்களவை தேர்தலின் போதே இதேபோல அழைப்பு விடுத்தனர். ஆனால் அதனை ஏற்கவில்லை, திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இவை இரண்டும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனக் கூறினார். நாதக தனித்து தான் போட்டியிடும். அதேபோல விஜய்க்கும் பாஜக அல்லது அதிமுக வுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.

இதில் தமிழகத்திற்கு அதிமுக திமுக என இரு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு தேவையில்லை. மேலும் நாதக தனித்து தான் போட்டியிடும். அதனால் எடப்பாடி அழைப்புக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என நேரடியாகவே கூறியுள்ளார்.

வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாஞ்சில் சம்பத் சொன்ன செய்தியை கண்டு அதிர்ந்த அரசியல் களம்!

0

1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி.

அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை போய்விட்டார் என்றும், அவருடைய மகனுக்கு அமைச்சர் பதவி, 12 சீட்டுகள் பேசி முடிவெடுத்துவிட்டார் என்றும் பேட்டி கொடுள்ளார்.

தன்னுடைய மகன் துரை வைகோவிற்காக மதிமுகவை பாஜகவிடம் வைகோ அடகு வைத்துவிட்டார். மகனின் மந்திரி பதவி தான் முக்கியம் என்று வைகோ யோசித்துவிட்டார். வைகோவிடம் 10000 கோடி சொத்துக்கள் இருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்களை விட மகன் தான் முக்கியம் என்கிற முடிவை வைகோ எடுத்துவிட்டார்.

வைகோவின் சுயநலத்தால் எல்லோரும் மதிமுகவை விட்டு விலகிவிட்டார்கள். மதிமுகவில் இருக்கும் உறுப்பினர்களை வெறும் ரெண்டு மினி பஸ்ஸில் ஏற்றிவிடலாம். மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார், வைகோ மதிமுக கட்சிக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் மதிமுகவில் உள்ள எல்லா உறுப்பினர்களும் தங்களை திமுக கட்சியில் இணைத்துக்கொள்வார்கள். அது தான் இங்க நடந்துகிட்டு இருக்கு என்று வைகோவையும், அவருடைய மகன் துரை வைகோவையும் வெளுத்துவிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்! எடப்பாடி அழைப்புக்கு சீமான், விஜய் கொடுத்த reaction இதுதான்!

0

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார்.

தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், விஜய், சீமான் போன்றோர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் நேரடியாகவே கூட்டணிக்கு அழைப்பு கொடுத்தார்.

இந்நிலையில் சீமான் நாங்கள் எப்பவும் போல தனித்தே போட்டியிடுகிறோம் என்கிற தொனியில் பேட்டி கொடுள்ளார். அதேபோல தவெக கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அதிமுக கட்சியை சேர்ந்த நபர்கள் நிறைய பேர் எங்கள் கட்சியில் தங்களை ஏற்கனவே இணைத்துக்கொண்டார்கள். அதிமுக கட்சியில் ஆட்களே இல்லை. அதனால் தான் நாங்க எப்பவும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதில்லை என்று பேட்டி கொடுள்ளார்.

குரான் மீது ஆணையாக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றும், பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தவெகவின் அதிமுக நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விலகிவிட்டார் ஆதவ் அர்ஜுனா. எடப்பாடி பழனிசாமி இப்படி வாய்விட்டு கூட்டணிக்கு அழைத்தும் இவர்கள் முரண்டு பிடிப்பது அதிமுகவினரை கடுப்பாக்கியுள்ளது.