Home Blog Page 125

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன என்பதைக் கண்டறியும் வகையில் தகவல் திரட்டப்பட்டது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  • டெல்லி மாநிலம் 80% விகிதத்துடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதில் பெரும்பாலான மோசமான வார்த்தைகள் பெண்களைக் குறிவைத்து பயன்படுத்தப்படுகின்றன.

  • வடகிழக்கு மாநிலங்கள் 20% முதல் 30% வரை குறைவான விகிதத்தில் உள்ளன.

  • காஷ்மீர் மாநிலம் 15% விகிதத்துடன் மிகக் குறைவாகவே இருப்பதாக தெரியவந்தது.

  • ஆச்சரியமான விவரம்: பெண்கள் 30% விகிதத்தில் அவமானகரமான வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்திய மாநிலங்கள் – Top 10 பட்டியல்:

டெல்லி – 80%

துரிதமான வாழ்க்கை முறை, போக்குவரத்து நெரிசல், போட்டித் தன்மை போன்றவை மக்கள் மன அழுத்தத்தில் வாக்கியங்களை மூச்சுவிட முடியாத வார்த்தைகளால் நிரப்ப வைக்கும்.

பஞ்சாப் – 78%

பஞ்சாபியர்கள் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேசும் பழக்கமுடையவர்கள். நண்பர்கள் மத்தியில் கூட, நகைச்சுவையோ, அன்போ அடங்கிய கெட்ட வார்த்தைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

உத்தரப்பிரதேசம் – 74%

தொகுதிக் கூட்டங்கள், அரசியல் ரேலிகள், தெரு கலகங்கள் ஆகியவற்றில் அவமதிப்பு மொழி பாவனை அதிகம் உள்ளது.

பீகார் – 74%

பீகாரில், உணர்வுப் பார்வை மிகுந்த மக்கள் திறந்தவெளியில் சண்டை, விவாதங்களில் கெட்ட வார்த்தைகளை பொதுவாக பயன்படுத்துகிறார்கள்.

ராஜஸ்தான் – 68%

இங்கு சில கிராமப்புறங்கள் மற்றும் குடும்பச் சண்டைகளில், மிதமான கெட்ட வார்த்தைகள் சாதாரண உரையாடலில் கூட பாவிக்கப்படுகின்றன.

ஹரியானா – 62%

உடல், ஆண்மைத்தன்மை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக கெட்ட வார்த்தைகள் பேசப்படுகின்றன. இது மாவட்ட வழக்குகள் மற்றும் மரபு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

மஹாராஷ்டிரா – 58%

மும்பை, புனே போன்ற நகரங்களில் பெரும் போக்குவரத்து, அழுத்தம், மற்றும் திட்டவட்டமான தெருவழக்கு மொழி காரணமாக இந்த வகை வார்த்தைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குஜராத் – 55%

பொதுவாகக் கோமாளித்தனமான, மிருதுவான பழக்கவழக்கங்களுடன் இருப்பினும், இளம் தலைமுறையினர், சமூக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கலாசாரம் மூலம் பாட்டி பாணியை விரும்புகின்றனர்.

மத்திய பிரதேசம் – 48%

இங்கு உள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் குறைந்த எழுத்தறிவுள்ள பகுதிகளில், அசம்பாவித வார்த்தைகள் பகிரங்கமாக பேசப்படுகின்றன.

உத்தரகாண்ட் – 45%

அமைதியான வாழ்வியல் கொண்ட மக்கள் வாழும் மாநிலமாக இருந்தாலும், குடியேற்றம், நகரமயமாக்கல் மற்றும் அண்டை மாநிலங்களின் கெட்ட வார்த்தைப் பயன்கள் காரணமாக இதிலும் சில அளவிலான தாக்கங்கள் உள்ளன.

காஷ்மீர் – 15% (மிகக் குறைவான பயன்பாடு)

காஷ்மீரில் மக்கள் மிகவும் மிருதுவாகவும் மரியாதையுடனும் பேசுகிறார்கள். மத அடிப்படையிலான ஒழுக்கம், குடும்பமைய வாழ்க்கைமுறை மற்றும் உணர்ச்சிப் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம்.

இந்த பட்டியல் வெறும் விளம்பரப் பிரச்சனைக்காக அல்ல, மறுபக்கம் இது குடும்பங்களில் மற்றும் சமூகத்தில் மரியாதை மற்றும் மரபு மதிப்பை வலியுறுத்தும் நோக்கத்துடன் மென்மையான உரையாடலை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மென்மையாக பேசுதல் ஒரு மரியாதையும், நாகரிகத்தையும் பிரதிபலிக்கிறது!

மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்ட எடப்பாடி அதனை நிராகரித்த விஜய் வெளியான அதிரடி ட்வீட்!

0

சென்னை :இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள்  போட்டியிடுகின்றன .மேலும் அதற்க்கான சுற்றுப்பயணகள் செல்வது மற்றும் மக்களை சந்திப்பது போன்ற வேலைகளையும் வெகு விரைவாக பார்த்து வருகின்றன.இவ்வாறு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  மக்களை சந்தித்த போது திமுகவிற்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று கூறியது நாம் அறிந்தவை .

 

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு ஜீவனாம்சம் விஜயகோபால் தரவேண்டும் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மின் இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரவு நேரத்தில் முகத்தில் கருப்பு துணியை கட்டிகொண்டு வந்து ஜெர்மினை சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்நிலையில் ஜெர்மின் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்த கொலையில் விஜயகோபாலுக்கு தொடர்புள்ளது என்று சொல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் உத்தராகண்டில் உள்ள விஜயகோபாலை சாயல்குடி வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்தார். என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். சொந்தமாக நான் கட்டிய வீட்டையும் ஜெர்மனின் பெயரில் வீடு இருப்பதால் வீட்டை பிடிங்கிக்கொண்டார். அதேபோல விவாகரத்து கேட்டு மாதம் 17000 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று என் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

என் மனைவி ஜெர்மினுக்கு ஊரில் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ளது. இதை எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னுடைய குடும்பதிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஜெர்மின் ஏற்படுத்தி விட்டார். அதனால் தான் கூலிப்படையை அனுப்பி என்னுடைய மனைவியை கொலை செய்ய சொன்னேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயகோபால். சொந்த மனைவியை கணவர் கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

கள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

பின்னர் சென்னையில் ஒரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த விஷ்ரூத் தனது மனைவியை கண்டித்து சென்னையில் இருந்து குளித்தலைக்கு கூட்டி வந்துள்ளார். குளித்தலையில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக சுருதி வேலை செய்து வந்துள்ளார். இங்கும் இன்னொரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷ்ரூத் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிகிச்சை பெறுவதற்காக ஸ்ருதியை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருந்தும் தன்னுடைய ஆத்திரம் தீராத விஷ்ரூத் மருத்துவமனைக்கே சென்று மனைவி சுருதி இறக்கும் வரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தாயும் இறந்து தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் குழந்தைகள் இருவரும் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் குளித்தலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!

0

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து கலைச்செல்வி தனிமையில் வாழ்கிறார். இது சம்மந்தமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜீவனாம்சம் வேண்டும் என்று கலைச்செல்வி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் லோகராஜுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்துள்ளார். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள லோகராஜின் வீட்டுக்கு சென்று லோகராஜூவும், அவருடைய தொடர்பில் இருந்த பெண்ணும் இருந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாரை அழைத்து கூச்சல் போட்டுள்ளார்.

காதலியுடன் வீட்டில் தனிமையாக இருக்கும் நேரத்தில் மனைவி வந்து வீட்டை பூட்டியதால் லோகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த கணவரை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார் கலைச்செல்வி. என்னுடன் விவாகரத்து வாங்காமல் இவர் எப்படி வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டு கலைச்செல்வி பிரச்சனை செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைச்செல்வியை சமாதானம் செய்து அந்த இடத்தில இருந்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இஸ்லாமிய வாக்கு கிடைக்காது.. திமுக பக்கம் தாவிய அதிமுக மூத்த தலை!! திக்குமுக்காடும் எடப்பாடி!!

0

ADMK DMK: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் தான் அன்வர் ராஜா. எம்ஜிஆர் இறந்த காலத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறும் வரை அதிமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் கட்சிக்கு பக்கபலகமாக இருந்துள்ளார். இவர் பாஜகவின் மத வேறுபாடு காரணமாக அதன் கூட்டணியை முழுமையாக எதிர்த்தார். இதனால் 2021 ஆம் ஆண்டு இவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர். மேலும் எடப்பாடி தவிர்த்து சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக பாஜக இணைந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியை விட்டு விலகிவிட்டார். பாஜகவின் மதப் பிரிவினை மையப்படுத்தி பல இஸ்லாமியர்கள் எதிர்ப்புதான் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அன்வர் ராஜா அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவுடன் இணைந்து கொண்டார்.

இவ்வாறு அவர் எதிர்க்கட்சியை நோக்கி பச்சை கொடி அசைத்து உள்ளது எடப்பாடிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இவருக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைப்பதில் சற்று சந்தேகம் தான். இதனை சரி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொடுத்த குல்லாவை வாங்கி அணிந்து கொண்டார். ஆனால் இப்படி ஒப்பேத்தி கொடுப்பதால் எதுவும் மாறப் போவதில்லை.

முன்னதாகவே பாஜக, கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதை கட்சி நிர்வாகிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேறுவது அதிமுகவை அதுல பாதாளத்திற்கு கொண்டு செல்லும்.

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கா? ரஜினியின் உடன்பிறப்பு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் தன்னுடைய கடைசி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இனி தீவிர அரசியலில் விஜய் இறங்கப்போவதாக அறிவித்து தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்திற்குள் புகுந்துவிட்டார்.

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன். இவர் ஆன்மீகத்தில் ரஜினிகாந்தை போலவே அதிக நாட்டம் கொண்டவர். பாஜக கட்சியின் விசுவாசியும் கூட. இவரை வைத்து எப்படியாவது ரஜினியை அரசியலில் இறக்கி பாஜகவிற்கு ஆதரவான சூழலை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என்று ஆஎஸ்எஸ் முயற்சி செய்தது.

ஆனால் எப்பவும் போல ரஜினிகாந்த் எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம், என்னை விட்டுருங்க என்று ஒதுங்கிக்கொண்டார். சத்தியநாராயணன் பெங்களூரில் வசிக்கிறார். அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சத்யநாராயணனிடம் நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பு இருக்கா என்று கேள்வி கேட்டனர்.

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிப்பது ரொம்ப கஷ்டம் என்றும், தமிழகத்தில் அண்ணாமலை அரசியலில் ஜொலிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் பேட்டி கொடுத்தார். அதேபோல உங்கள் சகோதரர் ரஜினிகாந்திற்கு எம்.பி. பதவி பாஜக சார்பில் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவியை கொடுக்க முயன்றார்கள், எனக்கு அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கி விட்டார் என்று பேட்டி கொடுத்துள்ளார் சத்தியநாராயணன்.

அரசியலுக்கு வருவேன் என கடைசி வரை சொல்லி தன்னுடைய ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றிய ரஜினியின் சகோதரர் பேச்செல்லாம் இங்க நம்ம தமிழ் நாட்டில் எடுபடாது என தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்தின் சகோதரரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்த அதிமுக பிரபலம்! அதிமுக எடுத்த அதிரடி ஆக்சன்!

0

அதிமுக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற எம்.பி பதவி வகித்தவர் அன்வர் ராஜா. இவர் ஆரம்பம் முதலே பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் அதிமுக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என்று பேட்டி கொடுத்தார்.

பாஜவுடன் இணைவது மிகப்பெரிய தோல்வியில் போய் முடியும் என்கிற மாதிரியான கருத்துக்களை அண்மையில் அன்வர் ராஜா தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவை விட்டு திமுகவில் இணைகிறார் அன்வர் ராஜா என்னும் செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அன்வர் ராஜாவை அதிமுகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி உள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியையும் பழனிசாமி பறித்துவிட்டார். இதனால் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி என்பது புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மூலக் கட்டத்தில் உறங்கிக் கிடக்கும் புற்றுநோய் செல்களை விழித்தெழச் செய்து, நோயை உடலின் பிற பாகங்களுக்கு பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, பல மார்பக புற்றுநோயாளிகள் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கூட மறுமுறையாக நுண் பாகங்களில் புற்று பரவல் ஏற்படக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

ஆய்வுப் படிப்பு மற்றும் முக்கியமான விவரங்கள்:

இந்த ஆய்வுத் தகவல்கள், ஜூலை 3ஆம் தேதி வெளியான Cancer Cell என்ற உயர்மட்ட மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கிமோதெரபி மருந்துகளான டாக்ஸோரோபிசின் மற்றும் சிஸ்பிளாடின் போன்றவை, உறங்கிக்கிடக்கும் மார்பக புற்று செல்களை (Dormant Cells) தூண்டி lung metastasis (மூளை, நுரையீரல் போன்ற பகுதிகளுக்குப் பரவல்) ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

அறிந்துகொள்ள வேண்டியவை:

Dormant Cancer Cells என்பது உடலின் பிற பகுதிகளில் அடக்கம் ஆகி, வளர்ச்சி நிறைந்து நிதானமாயிருக்கும் புற்று செல்களாகும்.

இவை புதிய வளர்ச்சியோ, பரவலோ இல்லாமல் அமைதியாக இருக்கலாம். ஆனால் கிமோதெரபி போன்ற சிகிச்சை இதனை மீண்டும் செயல்பட வைக்கும் அபாயத்தை உருவாக்கும்.

புற்றுநோயின் முதன்மை கட்டத்தில் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தாலும், இந்த உறங்கிய செல்கள் மீண்டும் செயல்பட்டு பக்கத்துப் பகுதிகளில் புற்று பரவலை உருவாக்கும்.

மூளைக்கழி மற்றும் நுரையீரலில் தாக்கங்கள்:

சீனாவின் Shanghai Institute of Nutrition and Health மற்றும் Fudan பல்கலைக்கழகம், Shandong பல்கலைக்கழகத்தின் Qilu மருத்துவமனை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். Hu Guohong தலைமையிலான குழு, சோதனை எலி மாதிரியில் இந்த நிகழ்வுகளை உறுதி செய்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மூலம், மார்பக புற்றுநோய் செல்கள் எப்படி உறங்கி கிடந்த நிலையிலிருந்து விழித்து, நுரையீரலுக்கு பரவுகின்றன என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய சிகிச்சை நோக்கங்கள்:

இந்த கிமோதெரபி செல்கள், உடலில் உள்ள ஃபைப்ரோபிளாஸ்ட் எனும் தொடர்பு திசுக்களில் மூப்பு (Senescence) நிலையை உருவாக்குகிறது. இந்த மூப்புப் பாதிக்கப்பட்ட செல்கள், சுற்றுச்சூழலை மாற்றும் புரதங்களை வெளியிடுகின்றன, இது நியூட்ரோபில்கள் எனும் நோய் எதிர்ப்பு அணுக்களில் வலைவடிவ அமைப்புகளை உருவாக்க வைக்கின்றன. இதுவே உறங்கிய புற்று செல்களின் வளர்ச்சியை மீண்டும் தூண்டும் சூழலை உருவாக்கும்.

இந்த தாக்கங்களைத் தடுக்க, senolytic drugs எனும் மூப்பு செல்களை அழிக்கும் மருந்துகளையும் கிமோதெரபியுடன் சேர்த்து பயன்படுத்தியுள்ளனர். இது டாக்ஸோரோபிசினுடன் பயன்படுத்தும் போது மூப்புசார்ந்த செல்களின் எண்ணிக்கையை குறைத்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை தொடக்கம்:

இக்கண்டுபிடிப்பின் அடிப்படையில், தற்போது மார்பக புற்றுநோயின் ‘Triple Negative’ வகையினரை நோக்கமாகக் கொண்டு, Dasatinib மற்றும் Quercetin எனும் senolytic மருந்துகளுடன் கிமோதெரபியை இணைத்துப் பயன்படுத்தும் மருத்துவ பரிசோதனை (Phase 2 trial) நடைபெற்று வருகிறது.

Triple Negative வகை என்பது மரபணு ஹார்மோன் சிகிச்சைக்கு பதிலளிக்காத, தீவிரமான புற்றுநோயின் ஒரு வகை.

சுருக்கமாக:

கிமோதெரபி புற்றுநோயைத் தடுக்கிறது என்றாலும், தவறான பக்கவிளைவாக உறங்கிய செல்களை விழிப்பித்து நோயை பரப்பக்கூடும்.

இது எதிர்பாராத மாற்றான விளைவுகள் உருவாக்கலாம், குறிப்பாக பிற உறுப்புகளில் மறுசுழற்சி பரவலை தூண்டும்.

இதற்கான தீர்வாக, மூப்பு செல்களை அழிக்கும் மருந்துகளுடன் சேர்த்து கிமோதெரபியை வழங்கும் சோதனை பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன.

இது எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் ஒரு புதிய வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

இது புற்றுநோய் சிகிச்சை நோக்கில் புதிய புரிதலை உருவாக்கும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

 

அதிமுக பாஜக கூட்டணிக்குள் விழும் விரிசல்.. சைலன்ட் மோடில் தாக்கும் அண்ணாமலை!!

0

ADMK BJP: தமிழக அரசியல் களமானது நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்தவகையில் ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை அனைவரது கூட்டணியும் ஒரு வித குழப்பத்திலேயே உள்ளது. முதலில் ஆளும் கட்சி தங்களது கூட்டணி பலமாக உள்ளது என கூறி வருகின்றனர். ஆனால் தற்போது காங்கிரசுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.மேலும் பாஜவுடன் கூட்டணியிலிருக்கும் அதிமுக-வும் சரியான தெளிவான முடிவில் இல்லை.

பாஜக வின் அமித்ஷா உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். அவரைப் போலவே சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையும், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை கூறி விட்டார். இனிநான் என்ன கூறுவது, அவர் சொன்னதை என்னால் மாற்றி கூற முடியாது. அதிமுக வேண்டுமானால் அவரிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும். இரு தலைவர்களும் தான் பேசி முடிவு பன்ன வேண்டும்.

அதாவது ஆட்சிக்கு முன் மற்றும் பின் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெல்லாம் என்ற கருத்தை அண்ணாமலை வைத்தார். இவ்வாறு அவர் கூறியது, அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியதுடன் இந்த கூட்டணி ஒத்துவராது என்ற முடிவையும் எடுக்க வைத்துள்ளது. இதனால் கூடிய விரைவிலேயே அதிமுக பாஜக கூட்டணியை கை கழுவி விடும்.

அண்ணாமளையால் தான் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு வர போகிறது. இதனால் அண்ணாமலைக்கு பழைய தலைவர் பதவியும் கிடைக்குமாம். நயினார் ஓர் பொது நிகழ்ச்சியில் தனக்கு கட்சிக்குள் மரியாதையே இல்லை என்பதை கூறியிருந்தார். இவையனைத்தும் அண்ணாமலை இல்லை என்ற வெறுப்பின் உச்சக்கட்டம் தான். இதனை சரிசெய்யும் வகையில் அவரையே மீண்டும் தலைவராக நியமிக்கலாம்.