Home Blog Page 218

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல வேலைகளை குறிப்பிட்ட அதில் முன்னு அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய நாட்டிற்கு பணிக்கு தேவை என சார்ஜா நாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெரிவித்து இருக்கிறது.

 

அதன்படி அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பணி விவரங்கள் :-

 

✓ எஃகு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள்

✓ சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர்

✓ போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆப்பரேட்டர்

✓ ஹெவி பஸ் டிரைவர்

✓ பிர்ஸ்டோல் & ஷூட் மெட்டல் டை தயாரிப்பாளர்

✓ சிஎம்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர்

✓ மார்க்கெட்டிங் பொறியாளர்

✓ உற்பத்தி பொறியாளர்

✓ கியூ ஏ / க்யூ சி ஆவண கட்டுப்படுத்தி

✓ தொழில்துறை மின் எலக்ட்ரீசியன்

✓ கருவி தொழில்நுட்ப வல்லுனர்

✓ டீசல் இன்ஜின்கள் மற்றும் பட்டறை இயந்திர பராமரிப்பு

✓ ஸ்பிலிட் ஏசி/விண்டோ ஏசி/சென்ட்ரல் ஏசி தொழில்நுட்ப வல்லுநர்

✓ ஸ்டோர் கீப்பர்

 

மேலே கூறப்பட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக தமிழ்நாடு அயல்நாட்டு வேலை நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த பணிகளுக்கான நேர்காணல் இன்று மற்றும் நாளை காலை 9 மணி முதல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு வரக்கூடியவர்கள் பயோடேட்டா பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் அதனுடைய காபி போட்டோ ஆகியவற்றுடன் அயல் நாட்டு வேலை நிறுவனம் முகவரிக்கு நேரில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகவரி :-

 

அயல் நாட்டு வேலை நிறுவனம் தமிழ்நாடு அரசு நிறுவனம்,

ஒருங்கிணைந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வளாகம்,

42 ஆலந்தூர் ரோடு,

திருவிக தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை – 32

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

நமது கண்னுக்கு தெரியாத அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகிறது.இவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது.இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள்:

1)இந்த துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)மைக்ரோ பிளாஸ்டிக் துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

3)மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பொருட்களை உட்கொண்டால் மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.

4)தற்பொழுது பெரும்பாலான உணவுப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.இந்த உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு கருத்தரிக்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

5)நுரையீரல் ஆரோக்கியத்தை மைக்ரோ பிளாஸ்டிக் பாதித்துவிடும்.இதனால் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

6)தொடர்ந்து மைக்ரோ பிளாஸ்டிக் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் அபாயத்தில் இருந்து மீள உணவுப் பொருட்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.சர்க்கரை,டூத் பேஸ்ட் போன்ற பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.எனவே இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

இன்று பெரும்பாலானோர் குறட்டை பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்களே குறட்டைவிட்டு உறங்குகின்றனர்.உடல் பருமன்,நுரையீரல் பிரச்சனை,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரும்.

குறட்டை தீவிர பிரச்சனை இல்லையென்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை பாதிப்பால் மாரடைப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே குறட்டை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.

குறட்டையை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம்:-

1)ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி
2)தேன் – கால் தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் குறட்டை வருவது கட்டுப்படும்.

1)யூகலிப்டஸ் எண்ணெய்
2)தண்ணீர்

பாத்திரத்தில் சூடு நீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு யூக்கலிப்டஸ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதை ஆவிபிடித்தால் குறட்டை வருவது கட்டுப்படும்.

1)நெய் – சிறிதளவு

தாளிப்பு கரண்டி ஒன்றில் சிறிதளவு நெய் ஊற்றி லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.இந்த நெய்யை மூக்கு துவாரத்தில் விட்டால் குறட்டை வருவது கண்ட்ரோல் ஆகும்.

1)ஏலக்காய் பொடி – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – சிறிதளவு

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பின்னர் இதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து லேசாக சூடானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த நீரை பருகினால் குறட்டை வருவது கட்டுப்படும்.

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

நம் நாட்டு மருத்துவத்தில் வெட்டு காயங்களை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.இதில் கசப்பு சுவை நிறைந்த கிரந்தி நாயகம் அதாவது வெட்டுக்காய் செடி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

இந்த செடிக்கு சிலந்தி நாயகம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.இந்த செடியின் இலை நீள் வட்டத்தில் இருக்கும்.இதன் பூக்கள் ஊதா நிறத்தில் சிறியதாக இருக்கும்.இந்த வெட்டுக்காய் செடியின் பூக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கிரந்தி நாயகத்தின் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.தழும்புகள் மீது இந்த இலையை அரைத்து பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

சொறி சிரங்கு போன்ற பாதிப்பில் இருந்து மீள வெட்டுக்காய் இலையை அரைத்து பூசலாம்.அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள வெட்டுக்காய் இலையை பயன்படுத்தலாம்.இந்த இலையை அரைத்து சிறிதளவு வெண்ணெய் கலந்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தோல் எரிச்சல்,அரிப்பு இருப்பவர்கள் கிரந்தி நாயகம் இலையை தண்ணீர் விட்டு அரைத்து பூசி குளித்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.இந்த கிரந்தி நாயகம் இலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி தயிரில் கலந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் நீங்கிவிடும்.குடலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகள் அகல இந்த இலையை அரைத்து சாப்பிடலாம்.

தீக்காயங்கள் மீது இந்த கிரந்தி நாயகம் இலை விழுதை பூசினால் அவை சீக்கிரமாக குணமாகிவிடும்.கண் நோய் குணமாக தினமும் ஐந்து மில்லி கிரந்தி நாயகம் இலை சாறு பருகலாம்.

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு சிறந்த தீர்வாக பிரண்டை எண்ணெய் திகழ்கிறது.பிரண்டை மற்றும் தேங்காய் எண்ணையை வைத்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பிரண்டை எண்ணெய் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை – ஒரு கப்
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் பிரண்டை துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிரண்டை நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இந்த எண்ணையை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடித்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணைய் மூட்டு வலி முதல் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் மருந்தாக திகழ்கிறது.

பிரண்டை எண்ணெய் நன்மைகள்:-

1)மூட்டுகளில் வலி உள்ள இடத்தில் இந்த பிரண்டை எண்ணையை அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

2)எலும்பு முறிவு,எலும்பில் காயம் இருந்தால் இந்த பிரண்டை எண்ணெய் அப்ளை செய்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

3)தினமும் சில துளிகள் பிரண்டை எண்ணையை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் குடித்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

4)இடுப்பு வலி பிரச்சனை இருப்பவர்கள் பிரண்டை எண்ணையை அவ்விடத்தில் ஊற்றி தடவலாம்.

5)உடல் வலி இருந்தால் பிரண்டை எண்ணையை கொண்டு மசாஜ் செய்யுங்கள்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.நன்றாக உறங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இனி நன்றாக உறங்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
3)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.இந்த பாலை இரவில் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருக வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் இந்த பாலை பருகினால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

இந்த பால் நன்றாக கொதித்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பருப்பு – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பாதாம் பருப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பேரீச்சம் பழத்தில் இரும்பு,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் குணமாகும்.
பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெற முடியும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
2)இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட தினமும் இரண்டு பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
3)மூளை ஆரோக்கியம் மேம்பட பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரீச்சம் பழம் உட்கொள்ளலாம்.
4)சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாக பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.முடி வளர்ச்சியை அதிகரிக்க பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
5)செரிமான ஆரோக்கியம் மேம்பட பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க தினமும் பேரிச்சை சாப்பிடலாம்.
6)எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்க தேனில் ஊறவைத்த பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.
பேரீச்சை தீமைகள்:
1)அளவிற்கு அதிகமாக பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.
2)ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்க்க வேண்டும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்ப்பது நல்லது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் அதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதை முயற்சி செய்யுங்கள்.

பார்லி அரிசி – ஒரு தேக்கரண்டி
முள்ளங்கி துண்டுகள் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – இரண்டு கப்

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு பார்லி அரிசியை தண்ணீர் ஈர்த்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு முள்ளங்கி எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த பார்லி அரிசியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரண்டு கப் தண்ணீர் சுண்டி ஒரு கப் அளவிற்கு வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை கிண்ணத்திற்கு வடிகட்டி பருக வேண்டும்.இப்படி செய்தால் உடலில் யூரிக் அமில அளவு குறையும்.

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து இடித்த இஞ்சியில் இருந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறில் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு குறையும்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் நாம் பெறும் 10 ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

அதிக இனிப்பு மற்றும் சிறிது புளிப்பு சுவை நிறைந்த வாசனை பழம் அன்னாசி.இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியய நன்மைகள்:

1)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2)அடிக்கடி அன்னாசி பழம் உட்கொண்டால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் மேம்பட அன்னாசி பழம் சாப்பிடலாம்.

3)அன்னாசியில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

4)அடிக்கடி அன்னாசிப்பழம் சாப்பிட்டால் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உயரும்.கீல்வாத பாதிப்பில் இருந்து மீள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.

5)அன்னாசி பழத்தை உடல் எடை குறையும்.டயட் இருப்பவர்கள் அன்னாசி பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

6)தலைவலி,விக்கல் போன்ற பாதிப்பில் இருந்து மீள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.வயிற்று கொழுப்பு கரைய அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.

7)வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

8)இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக அன்னாசி பழத்தை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு கீற்று அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் குறையும்.

9)மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்றவற்றை சரி செய்கிறது.

10)சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாக அன்னாசி பழத்தை உட்கொள்ளலாம்.

பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் ரெட்ரோ! – 2 நாளில் எவ்வளவு வசூல் பாருங்க!…

உழைப்பாளர் மே 1ம் தேதியை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் நேற்று வெளியானது. அதில் ஒன்றுதான் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 46 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

retro

நாளை சனி மற்றும் ஞாயிறு கிழமை கிழமை வருவதால் இந்த 2 நாட்களில் இந்த படம் இன்னும் அதிக வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது.