Home Blog Page 233

பொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!

0

மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் சில முக்கிய நடைமுறைகள் மாற்றங்களை சந்திக்கப் போகிறது. பல வங்கிகள் குறிப்பிட்ட அப்டேட்களோடு நிதி நடவடிக்கைகளையும் பாதிக்கும். எனவே பண பரிவர்த்தனை, ஆன்லைன் பேமெண்ட் உரைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது அதிக அளவு கவனம் தேவை.

 

மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் :-

 

✓ UPI பரிவர்த்தனைகளில் 5000 ரூபாய்க்கு மேல் செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 0.5% வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் பொழுது எந்தவிதமான சேவை கட்டணமும் கேட்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ வங்கி வேலை நேரமானது காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும் என்றும் மதிய உணவு இடைவேளை 1.30 மணி முதல் 2 மணி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நாட்களில் அரைநாள் வங்கிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய காசோலைகள் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் 500 முதல் 1500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இது பயனர்களுடைய கிரெடிட் ஸ்கோரை சேதப்படுத்துவதோடு இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வங்கிகள் பயனர்களின் உடைய கணக்குகளை மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ 20000 வரையிலான சிறிய தனிநபர் கடன் களை பெறுவதற்கு ஒப்புதல் நேரம் தற்பொழுது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டையின் உடைய otp சரிபார்ப்பு அடிப்படையில் சிறிய தனிநபர் கடன்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிர்ச்சி!! திடீரென தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வின் போது துவரம் பருப்பில் கலப்படம் இருப்பதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்தவர் அடுத்து அங்கு வேலை பார்க்கக்கூடிய இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படக்கூடிய துவரம் பருப்பில் கலப்படம் உள்ளதா என்பதை சோதனை செய்யுமாறு தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது.

 

ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டின் கீழ் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கான ரேஷன் அட்டைகளில் மானிய விலையில் சர்க்கரை பாமாயில் துவரம் பருப்பு அரிசி கோதுமை மாவு என வழங்கப்பட்டு வரும் நிலையில் இவற்றில் கலப்படம் உள்ளது என்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த துவரம் பருப்பு அரிசி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு அரசு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட பின் அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் அருணாச்சலா எஸ் கே எஸ் இண்டஸ்ட்ரீஸ் பெஸ்ட் போன்ற தனியா நிறுவனங்களிடமிருந்து இது போன்ற பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அங்கிருந்துதான் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வேடந்தூரில் இருக்கக்கூடிய ரேஷன் பொருட்கள் கிடங்கில் ஆர்வம் மேற்கொண்ட பொழுது துவரம் பருப்பு கலப்படம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு பணியிலிருந்து இருவரை உடனடியாகவே சஸ்பெண்ட் செய்துள்ளார்.இது மிகப்பெரிய பேச்சுப் பொருளானது அடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் வைத்திருக்கக் கூடிய குடும்பங்களின் தரத்தை ஆய்வு செய்யும் படி உணவுத்துறைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

0

தோல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக வெற்றிலை,துளசி இலை,சிறியாநங்கை போன்றவற்றை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை – ஒன்று
சிறியாநங்கை அல்லது வேப்பிலை – பத்து
மிளகு – ஐந்து
ஏல அரிசி – கால் தேக்கரண்டி
துளசி இலை – பத்து

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் பத்து வேப்பிலை அல்லது சிறியாநங்கை இலையை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் ஐந்து கருப்பு மிளகை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து ஏலக்காய் விதை கால் தேக்கரண்டி அளவு சேகரித்து அதில் வைக்க வேண்டும்.அடுத்து பத்து துளசி இலைகளை அதில் வைத்து மடக்கி காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும்.இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் தோல் அரிப்பு,தோல் தடிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை – ஒன்று
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வேப்பிலை – பத்து
ஏல அரிசி – கால் தேக்கரண்டி
துளசி இலை – பத்து

செய்முறை விளக்கம்:-

வெற்றிலை,துளசி மற்றும் வேப்பிலையை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீரவிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் கால் தேக்கரண்டி ஏல அரிசியை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சருமம் முழுவதும் அப்ளை செய்து குளித்தால் தோல் தடிப்பு,தோல் அலர்ஜி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

வேப்பிலை – கால் கைப்பிடி
மஞ்சள் கிழங்கு – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் கால் கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகுஒரு துண்டு மஞ்சள் கிழங்கை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

இந்த பேஸ்டை சருமத்தில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் தோல் தடிப்பு,தோல் எரிச்சல் பாதிப்பு குணமாகும்.

இந்த கஞ்சி குடித்தால்.. தொப்பை கொழுப்பு 7 நாளில் மெழுகு போல் உருகிவிடும்!!

0

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கத்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து எடை அதிகரித்துவிடுகிறது.குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குவிந்து தொப்பை உருவாகிவிடுகிறது.இந்த கொழுப்பை கரைத்து தள்ள சாமை எனும் சிறு தானியத்தை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம்.

சாமையின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:

**புரதம்
**கால்சியம்
**இரும்பு
**கொழுப்பு அமிலம்
**நார்ச்சத்து
**தயமின்

உடல் எடையை குறைக்கும் சாமை கஞ்சி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)சாமை அரிசி
2)பூண்டு
3)சீரகம்
4)எண்ணெய்
5)கறிவேப்பிலை
6)உப்பு
7)பச்சை மிளகாய்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் சாமை அரிசி எடுத்து பாத்திரத்தில் கொட்டி குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை தட்டில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதேபோல் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.

பின்னர் நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து சாமை அரிசியை அதில் கொட்டி கிளற வேண்டும்.

அதற்கு அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.இந்த சாமை கஞ்சி தயார் ஆனதும் அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த சாமை கஞ்சியை குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.சாமையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சாமையின் பிற பயன்கள்:

1.சர்க்கரை நோய் கட்டுப்பட சாமை அரிசி சாப்பிடலாம்.

2.மாதவிடாய் கால பாதிப்புகள் குணமாக சாமை அரிசி உணவு எடுத்துக் கொள்ளலாம்.

3.ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மேம்பட சாமை அரிசி உணவு எடுத்துக் கொள்ளலாம்.

4.கால்சியம் நிறைந்த சாமையை அடிக்கடி சாப்பிட்டால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

5.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சாமை உணவு சாப்பிட்டால் உரிய பலன் கிடைக்கும்.

6.சாமையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

7.சாமை மற்றும் கருப்பு உளுந்து ஆகிய இரண்டையும் வைத்து இட்லி,தோசை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

நரம்பில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை வெளியேற்ற.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

நமது உடல் நரம்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம்.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை,சோம்பல் வாழ்க்கை போன்ற காரணங்களால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதேபோல் நரம்புகளில் அதிக அழுக்குகள் குவிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.நரம்பு அழுக்குகள் நீங்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – நான்கு
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் நான்கு அல்லது ஐந்து கரு மிளகை லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கருமிளகு மஞ்சள் பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நரம்புகளில் குவிந்து கிடக்கும் அழுக்குகள் மற்றும் கொழுப்புகள் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)கருந்துளசி இலை – கால் கைப்பிடி
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் கால் கைப்பிடி கருந்துளசி இலைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கருந்துளசி சாறை கிளாஸ் ஒன்றில் வடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் அதில் கருந்துளசி சாறை ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் நரம்பு அழுக்குகள் நீங்கும்.நரம்பு அடைப்பு,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

இந்த எண்ணையை தொப்புளில் ஊற்றி தடவினால் ஒரே நாளில் மலச்சிக்கல் மாயமாகும்!!

0

இன்று மலச்சிக்கல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)நல்லெண்ணெய்
2)விளக்கெண்ணெய்

செய்முறை விளக்கம்:-

சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து தொப்புள் பகுதியில் ஊற்றி தடவ வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு இரவில் தூங்க வேண்டும்.இப்படி செய்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் முக்கால் பாகம் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் இரண்டு அல்லது மூன்று துளிகள் விளக்கெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த விளக்கெண்ணெய் கலந்த நீரை குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தண்ணீர்
2)எலுமிச்சை சாறு
3)கல் உப்பு

செய்முறை விளக்கம்:-

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

0

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக குப்பைமேனி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.தேமல்,மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி போன்ற பாதிப்புகள் குணமாக குப்பைமேனி இலையை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – ஒரு கப் கப்
2)காஸ்டிக் சோடா – 50 கிராம்
3)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
4)சோப் பேஸ் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் ஒரு கப் அளவிற்கு குப்பைமேனி இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.இந்த குப்பைமேனி இலை சாறை கிண்ணம் ஒன்றிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் காஸ்டிக் சோடா 50 கிராம் அளவிற்கு சேர்த்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தடில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அரைத்த குப்பைமேனி சாறை அதில் ஊற்றி கலந்துவிட வேண்டும்.பின்னர் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை சோப் பேஸில் ஊற்றி நிழல் பகுதியில் 8 முதல் 10 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.பின்னர் இந்த சோப்பை 30 நாட்கள் கழித்து பயன்படுத்த வேண்டும்.

இந்த குப்பைமேனி சோப்பை சருமத்தில் பயன்படுத்தி குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.தேமல்,வெண்புள்ளி,படர்தாமரை பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனி சோப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
3)வேப்பிலை – கால் கைப்பிடி
4)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி இலை மற்றும் வேப்பிலையை எடுத்து தண்ணீர் விட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து சருமம் முழுவதும் அப்ளை செய்து குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

0

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போன்று உப்பு என்பதும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருள் என்பதையும் நாம் அறிந்திருப்போம். எனவே மகாலட்சுமிக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வந்தோம் என்றால் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

உப்பு என்பது வீட்டில் இருக்கும் தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய ஒரு பொருள். உப்பினை வைத்து தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் ஈர்க்கப்பட்டு வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல்களை பரவ செய்யும்.

இதனால்தான் பரிகாரம் செய்வதற்காகவும், வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டுவதற்காகவும், கண் திருஷ்டிகளை நீக்கவும் கல் உப்பினை பயன்படுத்துவார்கள். ஏனென்றால் கல் உப்பிற்கு அவ்வளவு சக்திகள் உண்டு. எனவே இந்தக் கல் உப்பினை வைத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகி குடும்பம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

இந்தக் கல் உப்பு தீபம் ஏற்றுவதற்கு முதலில் ஒரு சிறிய தட்டினை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து, சிறிதளவு மஞ்சள் கலந்த அட்சதையை (அரிசி) பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சற்று பெரிய மண் அகல் விளக்கினை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பினை போட்டுக்கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்ததாக இந்த உப்பின் மேல் சிறிது மஞ்சள் குங்குமத்தை தூவி விட்டு, அதன் மேல் ஒரு சிறிய மண் அகல் விளக்கினை வைத்து அதிலும் சிறிது மஞ்சள் கலந்த அட்சதையை போட்டுக் கொள்ள வேண்டும். இறுதியாக அந்த அட்சதை விளக்கின் மேல் இன்னொரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இவ்வாறு தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த உப்பானது வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வுகளை இழுத்துக்கொண்டு நல்ல அதிர்வுகளையும், நேர்மறை ஆற்றல்களையும் வீடு முழுவதும் பரவச் செய்யும். மேலும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண பற்றாக்குறை நீங்கி நல்ல வருமானம் உண்டாகும்.

இந்த தீபத்திற்கு பயன்படுத்திய உப்பு மற்றும் அச்சதையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மறுநாள் இந்த உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். மேலும் இந்த தீபம் ஏற்றும் பொழுது அனைத்து விளக்குகளிலும் மஞ்சள், குங்குமம் வைத்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த ஒரு உப்பு தீபத்தை மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை உங்களால் கண்கூடாக மிக விரைவில் உணர முடியும்.

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

0

நமது குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சௌ சௌ கொண்டு சுவையான ஜூஸ் செய்து குடிங்க.

சௌ சௌ அத்தியாவசிய சத்துக்கள்:

**வைட்டமின் சி,கே
**மெக்னீசியம்
**மாங்கனீசு
**நார்ச்சத்து
**பொட்டாசியம்
**இரும்பு
**துத்தநாகம்
**சோடியம்

சௌ சௌ ஊட்டச்சத்துக்கள்:

*உடல் எடை குறைய அடிக்கடி சௌ சௌ சாப்பிடலாம்.

*உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக சௌ சௌ சாப்பிடலாம்.

*இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாக சௌ சௌ உட்கொள்ளலாம்.

*சிறுநீரக கற்களை கரைக்க சௌ சௌ சாப்பிடலாம்.

*சரும ஆரோக்கியம் மேம்பட சௌ சௌ உட்கொள்ளலாம்.

*கெட்ட கொழுப்பை கரைக்க சௌ சௌ சாப்பிடலாம்.

*குடல் கழிவுகளை அகற்றும் சௌ சௌ பானம்:

தேவையான பொருட்கள்:-

1)ஒரு சௌ சௌ
2)ஒரு தேக்கரண்டி சீரகம்
3)ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சௌ சௌவை தண்ணீரில் கழுவிவிட்டு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.பின்னர் இந்த சௌ சௌ ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இவை இரண்டையும் உரலில் போட்டு தட்டி சௌ சௌ ஜூஸில் கலந்து குடித்தால் குடல் சுத்தமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு சௌ சௌ
2)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
3)ஒரு கிளாஸ் தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

சௌ சௌவை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

0

“கல்லடி பட்டாலும் படலாமே தவிர, கண்ணடி மட்டும் படக்கூடாது” என்பது பழமொழி. கண் திருஷ்டி என்பது வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. கண் திருஷ்டி என்பது ஒருவரை பார்த்து பிறர் பொறாமை பட்டாலும், ஆச்சரியப்பட்டாலும் அல்லது பெருமூச்சு விட்டாலும் அவர்களது எதிர்மறை ஆற்றல் அந்த மனிதனுடைய ஆராவை தாக்கி விடும்.

ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவருடைய ஆரா தூய்மையாக இருக்க வேண்டும். ஆரா என்பது ஒரு மனிதனுடைய உயிர் சக்தியின் வெளிப்பாடு. இது உடலில் இருந்து சுமார் 5 சென்டிமீட்டர் வரை பரவி இருக்கும். எதிர்மறை ஆற்றல்கள் ஒருவரின் உடலில் இருக்கும் ஆராவின் உள் நுழைந்து விட்டால் அதுவே கண் திருஷ்டி எனப்படும்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல வீடு, கடை போன்ற அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். வீடு மற்றும் கடைகளில் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாலும் கண் திருஷ்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கண் திருஷ்டியின் அறிகுறிகள்:

ஒருவர் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடல் சோர்வு, மன அழுத்தம், தொடர் உடல் நிலை பாதிப்பு, வேலை மற்றும் வணிகத்தில் தோல்விகள், குழந்தைகளை சரிவர பார்த்துக் கொள்ள முடியாமை, வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி கீழே விழுந்து உடைதல், வீட்டில் இருக்கும் பூனைகள் வினோதமாக சத்தம் இடுதல் போன்றவை அவர்களது வீட்டில் ஏற்படும்.

கண் திருஷ்டி ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது:

1.குழந்தைகளுக்கு கருப்பு நிற மை கொண்டு திருஷ்டி புள்ளி வைக்கலாம்.

2. வெளியில் செல்லும் பொழுது கருப்பு நிற கயிற்றை கழுத்தில், கை மணிக்கட்டில் அல்லது காலில் கட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கண் திருஷ்டிகள் தடுக்கப்படும்.

3. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைத்துக் கொண்டால் பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

4. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் முன்பு கை, கால்களை கழுவி விட்டு உள்ளே நுழைய வேண்டும்.

5. வீடு மற்றும் கடைகளுக்கு பூசணிக்காய் சுற்றி உடைப்பது. வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை பூசணிக்காய் சுற்றி உடைக்கலாம். இதனால் திருஷ்டிகள் விலகும்.

6. ஒரு கைப்பிடி கல் உப்பு, கடுகு, மிளகாய் ஆகியவற்றை கொண்டு வீட்டு உறுப்பினர்களை அமரச் செய்து அவர்களது தலையை சுற்றி வெளியில் எரித்து விட வேண்டும். உப்பு, கடுகு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். மிளகாய் அந்த எதிர்மறை ஆற்றலை அழிக்கும்.

7. பச்சைக் கற்பூரத்தை பற்ற வைத்து உடல் முழுவதும் சுற்றுவது ஆராவை தூய்மைப்படுத்தும். அதாவது கண் திருஷ்டிகள் விலகும்.

8. இது போன்ற முறைகளை நம்பாதவர்கள், விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மூன்று அல்லது ஐந்து ஏழைகளுக்கு தயிர்சாதம் வழங்கலாம்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? என பலர் கேட்கலாம். இது பலரின் நம்பிக்கை. இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராயப்படா விட்டாலும், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மன அமைதிக்காக இந்த முறைகளை பின்பற்றலாம்.