Home Blog Page 234

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

0

நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் கொழுப்பு கழிவுகளை அகற்ற இலவங்கப்பட்டை,பூண்டு,இஞ்சி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு பானம் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கபட்டை
2)பூண்டு
3)இஞ்சி
4)எலுமிச்சை சாறு
5)தேன்
6)மஞ்சள் தூள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு பட்டை எடுத்து பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு துண்டு இஞ்சையும் தோல் நீக்கிவிட்டு பட்டை தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவை நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பிறகு இளஞ்சூடு பக்குவம் வந்த பின்னர் இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்ட வேண்டும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்தால் கல்லீரல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
3)இஞ்சி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி பானம் கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

0

உடலில் பித்தம் குறைய மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.உடலில் சூடு அதிகரித்துவிட்டால் பித்தமும் அதிகரித்துவிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கல்லடைப்பு பாதிப்பை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்:

**சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம்
**சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
**இடுப்பு ஓரத்தில் வலி

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் பித்தம் குறையும்.சிறுநீரக கல் பாதிப்பு குணமாக தினமும் ஒரு கிளாஸ்
நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – ஒன்று
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து நெல்லிக்காய் ஜூஸில் கலந்து குடித்தால் கல்லடைப்பு பாதிப்பு குணமாகும்.

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

0

குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும்.

எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். இதுபோன்ற சாபம் மற்றும் தோஷங்களில் இருந்து விலக வேண்டும் என்றால் குலதெய்வத்தின் அனுக்கிரகம் நமக்கு மிகவும் அவசியம்.

அந்த குலதெய்வத்தின் ஒளி மற்றும் அதன் சக்தி ஏழு விதமான மங்களகரமான செடிகளில் மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், வாழ்க்கை ஒரு நெடுநடையை போல் தன்னம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி நகரும்.
எனவேதான் செடிகள் என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு விதமான மங்களத்தன்மை மற்றும் அதிர்வுகளை கொண்டிருக்கும். அதனால்தான் கோவிலில் ஸ்தல விருட்சம் என்பதை கொடுத்தார்கள்.

கோவில்கள் மூன்று சக்திகளை கொண்டவை. ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவை ஆகும். இவை மூன்றுமே நமது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை.ஸ்தலவிருட்சம் என்றால் வெறும் மரம் அல்ல. அது தெய்வீக சக்தியின் வெளிபாடு. இந்த மாதிரியான செடிகளை உங்கள் வீடுகள் மட்டும் தோட்டங்களில் வளர்த்து வந்தீர்கள் என்றால் காற்று சுத்தமாகும். அதிர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தும்.

அந்த அதிர்வுகள் நம்மை மாற்றும். இந்த செடிகள் அனைத்தும் நமது பாட்டன், முப்பாட்டன் வணங்கிய செடிகள்.
இந்த செடிகள் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்ததற்கான நோக்கத்தை நாம் உணர்ந்தாலே போதும் அது நம்மை வழி நடத்தும். இந்த செடிகள் அனைத்தும் தெய்வீக அதிர்வுகளை நமக்கு கொடுக்கக்கூடிய ஒன்று.

1. சங்குப்பூ செடி:

இந்த செடியில் இருக்கும் பூவின் நீல நிறம், அதன் மென்மை, அதன் தெய்வீக அசைவுகள் ஆகிய அனைத்தும் நம்மை ஈர்க்கும். இந்தச் செடியில் நிறைய தெய்வங்கள் குடியிருக்கிறார்கள். குறிப்பாக நமது குலதெய்வம் வாசம் செய்யக்கூடிய செடியாகும்.
இந்தச் செடியில் தான் ஸ்ரீ விஷ்ணு, சிவன், சனிபகவான் மிகவும் பிடித்தமான செடியும் இதுதான். இந்தச் செடி இருக்கக்கூடிய வீடுகளில் பஞ்சம் என்பதே இருக்காது. பண வரவு அதிகரிக்கும்.

2. பிரம்ம கமலம்:

பிரம்ம கமலம் பூவினை வணங்கும்பொழுது குலதெய்வம் எது என்று தெரியாதவர்களுக்கு கூட குலதெய்வத்தை அடையாளம் காட்டி கொடுத்து விடும். இந்த பூவினை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும், பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வத்தின் கடாட்சம் உண்டாகும். தெய்வங்களின் ஆசிர்வாதம் நமது வீட்டில் நிலை நிற்கும்.

3. நாயுருவி செடி:

இந்த நாயுருவி செடியானது புதனை குறிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. இது ஒரு தேவ மூலிகையும் கூட. குலதெய்வத்தின் சக்தியை நேராக ஈர்க்கக் கூடிய செடியும் இந்த செடிதான். இந்த செடியானது பண வரவையும் ஈர்க்கும். இந்தச் செடியின் இலைகளை காய வைத்து சாம்பிராணி தூபம் போட்டால் வீடு, மனம், உடல் ஆகிய அனைத்தும் தூய்மை அடையும்.
இந்த செடியானது குலதெய்வ வசியத்தை உண்டாக்கும்.

4. மாதுளை செடி:

மாதுளை செடியானது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய செடி. இவர் வசிக்கக் கூடிய இடத்தில் எப்பொழுதும் செல்வம் நிறைந்திருக்கும். மாதுளை பழ தோலை காய வைத்து சாம்பிராணி தூபத்தில் போட்டு காண்பித்தால், மகாலட்சுமியின் அம்சம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இந்த செடியானது குலதெய்வத்தின் அருள், அதிஷ்டம், பணம் ஆகிய அனைத்தையும் ஈர்க்கக் கூடிய ஒரு செடி ஆகும்.

5. வெற்றிலை கொடி:

வெற்றிலைக் கொடி என்பது வெறும் இலை அல்ல, அது நமது வாழ்க்கையில் வெற்றிகளை கூட்டி, தோல்விகளை துரத்தும் ஒரு தெய்வீக சக்தியாகும். வெற்றிலை கொடியை தனியாக வளர்க்க கூடாது அதனுடன் வேறொரு செடியையும் உடன் சேர்த்து வளர்த்தால் மட்டுமே அது பயன் தரும்.

ஒரு சில வீடுகளில் வெற்றிலை செடியை எத்தனை முறை வைத்தாலும் வளரவில்லை என்று கூறுவார்கள். அவ்வாறு இருப்பவர்கள் சாம்பிராணி தூபம் காட்டி, சிறிதளவு மஞ்சளை செடியின் மேல் தூவி விட வேண்டும். வெற்றிலை செடி வீட்டில் இருந்தால் தொட்டது அனைத்தும் வெற்றியில் முடியும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

0

ராகு கேது பெயர்ச்சி ஆனது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அவர்களது கல்லா கட்டி, பணத்தை மூட்டையாக கட்டப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம். அதேபோன்று இந்த ராகு கேது பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவர் ராகு பகவான். இந்த ராகு பகவான் கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளார். இந்த ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. ராகுகான பரிகார ஸ்தலமாக விளங்கக் கூடியதும் இந்த கோவில்தான்.

1. மேஷம்:

மேஷம் ராசியில் ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உள்ளார். இதனால் பொருளாதாரம் மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பதவி உயர்வு உண்டாகும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிறைய உண்டாகும்.

2. கன்னி:

கன்னி ராசிக்கு ஏழாவது இடத்தில் இருந்த ராகு பகவான் ஆறாவது இடத்திற்கு வந்துள்ளார். எனவே வாழ்க்கை சிறப்பானதாக மாறும். ஆறில் ராகு இருந்து கேந்திரத்தில் குரு இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். இந்த யோகமானது குரு பெயர்ச்சிக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு செயல்படும். அதே சமயம் கேது பகவான் 12 வது இடத்தில் சஞ்சரித்து உள்ளார். இதனால் விரயம் அதிகரிக்கும்.

எனவே இதனை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. பொருளாதார நிலையில் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

3. தனுசு:

தனுசு ராசிக்கு ராகு வெற்றி ஸ்தானம் என்கின்ற மூன்றாவது இடத்தில் சஞ்சரித்து உள்ளார். அதே சமயம் கேது பகவான் ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளார். சுமார் ஒன்றரை வருடத்திற்கு ராகுவும் கேதுவும் இதே இடத்தில் இருந்து பலன்களை தரவிருக்கிறார். மேலும் ராகு பகவான் முன்னேற்றத்தை வாரி வழங்க போகிறார். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இதேபோன்று கடக ராசிக்கு அஷ்டம ராகு, கும்ப ராசிக்கு ஜென்ம ராகு, மகரம் ராசிக்கு அஷ்டம கேது, சிம்ம ராசிக்கு ஜென்ம கேது என இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்து கொள்வது நல்லது.

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

0

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். “அட்சய” என்பதற்கு ‘அல்ல அல்ல குறையாதது’ என்று அர்த்தம். அட்சய பாத்திரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் தீர்ந்து விடாமல் இருந்து கொண்டே இருக்கும்.

அத்தகைய அட்சய பாத்திரத்திற்கு நிகரான ஒரு நாள் தான் இந்த அட்சய திருதியை. எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இந்த அட்சய திருதியை உருவானதற்கு பின்பு ஒரு பெரிய கதையே இருக்கிறது. இதனை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஏனென்றால் இதனை தெரிந்து கொண்டால் தான் இந்த அட்சய திருதியை நாளில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.

கிருஷ்ணரும் குசேலனும் சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கிருஷ்ணர் கோகுலத்தை பிரிந்து துவாரகையின் மன்னர் ஆனார். ஆனால் குசேலனோ உன்ன உணவும் இன்றி பரம ஏழையாக மிகுந்த துன்பத்தில் கோகுலத்தில் வாழ்ந்து வந்தார். கிருஷ்ணரின் கொடை தன்மையை அறிந்த குசேலன், அவரிடம் உதவி கேட்க அவரது வீட்டில் இருந்த அவல்பொறியை எடுத்துக்கொண்டு அவரது நண்பரான கிருஷ்ணரை காண செல்கிறார்.

துவாரகையை அடைந்த குசேலன் அவரது நண்பர் கிருஷ்ணரை பார்க்க அரண்மனையின் உள்ளே நுழைகிறார், ஆனால் அங்கு இருந்த காவலர்கள் அவரது அழுக்கு உடையை பார்த்து அரண்மனைக்கு உள்ளே நுழைய விடாமல் வெளியேயே நிறுத்தி விடுகிறார்கள். அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணர் குசேலனை கண்டதும் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும் கிருஷ்ணர் அவரை நன்றாக உபசரித்தார். அதன் பிறகு குசேலன் கொண்டு வந்த அவல்பொறியை சிறிதளவு வாயில் எடுத்துப் போட்ட பின்னர் “அட்சயம்” என்ற வார்த்தையை கூறுகிறார். இந்த வார்த்தையை கிருஷ்ணர் கூறியவுடன் குசேலனது வீட்டில் தங்கமும், வெள்ளியும் குவிந்து விடுகிறது. அதன் பிறகு வீடு திரும்பிய குசேலன் அவரது வீட்டில் தங்கமும், வெள்ளியும் குவிந்து இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

இவ்வளவு தங்கம், வெள்ளியை வைத்து நாம் என்ன செய்வது?! என்று எண்ணிய குசேலன் அங்கு இருந்த ஏழை எளியவர்களுக்கு தானமாக அதனை கொடுத்து விட்டார். ஆனால் அவர் எவ்வளவு தானம் செய்தாலும் அங்கு இருந்த தங்கமும், வெள்ளியும் குறையாமல் பெருகி கொண்டே இருந்தது.

இப்படி கிருஷ்ணரிடம் இருந்து குசேலன் செல்வத்தைப் பெற்ற இந்த நாளை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடி வருகிறோம். இந்த அட்சய திருநாள் அன்று தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் அது இரட்டிப்பாகாது. தங்கத்தை மற்றவர்களுக்கு தானம் செய்தால் மட்டுமே இரட்டிப்பாகும். தங்கத்தை தானம் செய்ய இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இதனால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.

ஏனென்றால் இந்த நாளில் தான் அன்னபூரணி தேவி பிறந்தார். அட்சய திருதியை என்பது தங்கம் வாங்குவதற்கு மட்டும் உரிய நாள் கிடையாது. ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்கக்கூடிய நாளாகும். ஏழை எளியவர்களுக்கு அன்றைய நாளில் தானம் வழங்கினால் மட்டுமே செல்வம் பெருகும்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

0

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கமான கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ் (CAIT) பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, 2025 ஏப்ரல் 27 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற CAIT இன் இரண்டு நாள் தேசிய ஆட்சி மன்றக் கூட்டத்தில், 26 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்களின் பங்கேற்புடன் எடுக்கப்பட்டது.

CAIT இன் பொதுச் செயலாளர் மற்றும் சந்தினி சௌக் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பிரவீன் கந்தேல்வால், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இந்த தீர்மானம், பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

மேலும், CAIT ஆனது இந்தியாவில் உள்ள முக்கியமான ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் “ஒழுங்கற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகள்” மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அரசு தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. CAIT இன் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் வர்த்தக ஒழுங்குமுறைகளை மீறி செயல்படுகின்றன, எனவே அவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

இந்த முடிவுகள், இந்திய வர்த்தக சமூகத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.

தவெக கட்சி சுத்தமான அரசாக அமையும்!. தவெக தலைவர் விஜய் பேச்சு!…

0

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது.

அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசினார்.

முகவர்கள் கருத்தரங்கு இன்றும் நடந்தது. இன்று முகவர்கள் முன் பேசிய விஜய் ‘அண்ணா சொன்னதை நினைவில் வைத்து எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக மக்களை சந்தியுங்கள். மக்களிடம் செல். மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ் என அண்ணா கூறினார். சிறுவாணி நீர் போல சுத்தமான ஆட்சி அமையும். தெளிவான உண்மையான வெளிப்படையானது தவெக.

வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. வெற்றியை அடைவதற்கு உங்களின் செயல்பாடுகள் முக்கியம், நீங்கள்தான் முதுகெலும்பு. நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக இல்லை என சொன்னேன். சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார். தவெக ஆட்சி சுத்தமான அரசாக இருக்கும். ஊழல், மோசடி பேர்வழிகள் இருக்கமாட்டார்கள்.

மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…

0

இசைஞானி இளையராஜா இசையமைப்பதை தவிர வேறு எதிலும் எனக்கு கவனம் இல்லை என சொல்லுவார். என்னை யார் திட்டினாலும், விமர்சனம் செய்தாலும் அது என் கவனத்துக்கே வராது என்பார். நான் அவ்வளவு சாதனை செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். நீ என்ன சாதிச்சிருக்க?’ என கேட்பார்.

இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடித்து ஒன்று. அதிலும், 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். அவர்களின் பயணங்களிலும், தனிமையிலும், இரவில் உறக்கத்திற்கு முன்பும் துணையாக இருப்பது ராஜாவின் பாடல்களைத்தான். அவர் ஆன்மிகத்தில் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால், அரசியல்ரீதியாக கருத்து தெரிவித்தால் அது கண்டிப்பாக எதிர் கருத்துக்கள் எழுவே செய்யும்.

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போடுவார்கள். அதனால்தான் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஒருகட்டத்தில் இளையராஜா பாஜகவுக்கு ஆதவாக கருத்து கூற துவங்கினார். ராமரின் மறு உருவம் மோடி என்றார். உடனே அவருக்கு மேல் சபை எம்.பி. பதவியும் கொடுத்தார்கள்.

ilayaraja

இப்போது ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘மவுண்ட் பேட்டன் காலத்திலிருந்து இந்தியாவில் பிரதமராக இருந்த எல்லோரையும் மோடியோடு ஒப்பிடுங்கள். இந்தியாவுக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்றும் பாருங்கள். அப்போது உங்களுக்கு வித்தியாசம் புரியும். நான் 1988ல் காசிக்கு போயிருக்கிறேன். அப்போது அந்த இடம் எல்லோரும் சிறுநீர் கழிக்கும் இடம் போல இருக்கும். மோடிதான் அதை மாற்றியிருக்கிறார்.

கங்கையை சுத்தம் செய்திருக்கிறார். நாட்டுப்பற்று இல்லாவிட்டால் இதை செய்ய முடியாது. மற்ற பிரதமர்கள் மோடியை போல செய்யவில்லை. சரி.. மோடி வேண்டாம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்வது போல ஒரு தலைவனை நீங்கள் காட்ட முடியுமா?.. இது என்னுடைய தாழ்மையான கருத்து’ என பேசியிருக்கிறார். இதையடுத்து மோடியை பிடிக்காதவர்களும், திமுகவினரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

0

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

தமிழக அரசியலில் கட்சிகளில் பாமகவுக்கு என எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவர். அந்த வகையில் பாமகவுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இருக்கும். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை சிறப்பாக நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் பாமகவின் உட்கட்சி விவகாரங்களில் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. அது சமீபத்திய நிகழ்வுகளில் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. இது அப்பா மகன் பிரச்சனையாகவே வெளியில் தெரிந்தாலும் இதற்கு பின்புலத்தில் ஜி.கே மணி இருப்பதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாமக உட்கட்சி பிரச்சனை சில மாதங்களாக தான் வெளியில் தெரிய வந்துள்ளது என பலர் நினைப்பர் ஆனால் இவை கடந்த 3 ஆண்டுகளாகவே பாமகவில் நீடித்து வருகிறது என்று கட்சியினர் சிலர் கூறுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களை சொன்னாலும், ஜி.கே மணியை வெளிப்படையாக விமர்சிக்க அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு இப்போது தான் சரியான நேரம் அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் கருணாநிதி அவர்கள் பெயரில் பல்கலை கழகம் வேண்டும் என்று அவர் பேசியதே இதற்கு ஆரம்ப புள்ளியை வைத்துள்ளது.

இதில் ஆரம்பித்த அன்புமணி கோஷ்டி தேர்தலில் ஜி கே மணி சரியாக செயல்படவில்லை, தருமபுரியில் சௌமியா அன்புமணி சிறு வித்தியாசத்தில் தோற்றது இவரால் தான். அவர் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என வித விதமாக காரணங்களை அடுக்கி வருகின்றனர்.

ஆனால் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளதாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. அதாவது வழக்கமாக கட்சி தலைவர் பதவி தான் அதிகாரம் மிக்கதாக இருந்தாலும் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களிடமே அனைத்து அதிகாரங்களும் இருந்து வந்தன. ஜி.கே மணி தலைவராக இருந்த வரை அவர் பெயரளவில் மட்டுமே தலைவராக இருந்தார். பெரும்பாலான முடிவுகளை நிறுவனர் மட்டுமே எடுத்து வந்தார்.

இந்நிலையில் ஜி கே மணி வகித்து வந்த தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்த பின்னர் அந்த பதவிக்கான உண்மையான அதிகாரத்தை பெற அவர் எதிர் பார்த்துள்ளார். ஆனால் சாதாரண நிர்வாகிகள் நியமனம் முதல் கூட்டணி விவகாரம் வரை அனைத்திலும் மீண்டும் நிறுவனரான ராமதாஸ் கையே ஓங்கியுள்ளது. அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்த ஜி கே மணி செயல்பட்டு வருகிறார். இது அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதே போல தான் தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தது போல தன்னுடைய மகன் தமிழ் குமரனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ஜி.கே மணி கேட்டு வாங்கினார். ஆனால் அப்போதும் அன்புமணி கோஷ்டியினர் இந்த பதவியை எப்படி அவருக்கு தரலாம் என எதிர்ப்பு தெரிவித்து அப்பதவியிலிருந்து விலக வைத்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் மீது ஜி.கே மணிக்கு கோபம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை அப்போது நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில் அவர் வெளிப்படுத்தினர். அன்புமணி பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தான் சட்டசபைக்கு செல்ல வேண்டும் சீக்கிரம் முடியுங்கள் என ஜி கே மணி கூற இதை விட சட்டசபை முக்கியமாக என அன்புமணி காட்டமாக கூற அப்போதும் இருவருக்கும் இடையேயான முரண்பாடு வெளிப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஆதரவான ஒருவரை இளைஞர் அணி தலைவர் பதவிக்கு கொண்டு வர அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டார்.ஆனால் ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமன் அவர்களை அப்பதவிக்கு நியமித்தது அன்புமணி தரப்பை மேலும் கோபமடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு பின்புலமாக ஜி கே மணி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அன்புமணி கோஷ்டி வைத்துள்ளது. இந்நேரத்தில் அவர் கருணாநிதி பெயரில் பல்கலை கழகம் கேட்க அது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொருவரும் கட்சியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் வெறுப்பை காட்டி இப்படி விமர்சித்து கொள்வது எங்கே போய் முடியுமோ என அடிமட்ட பாட்டாளிகள் புலம்பி வருகின்றனர்.

ரத்தம் கொதிக்கிறது!. பஹல்கம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்!. பிரதமர் மோடி ஆவேசம்!…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக இந்தியா மக்களிடம் பேசி பிரதமர் மோடி ‘பஹல்காம் தாக்குதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்தையும் உலுக்கியிருக்கிறது. தாக்குக்தல் தொடர்பான புகைப்படங்களை பார்த்து குடிமக்களாகிய நீங்கள் கோபத்தில் கொதிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பஹல்காமில் நடந்த இந்த தாக்குதல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களிம்ன் விக்ரதியை பிரதிபலிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் ஒறுமைதான் நமது மிகப்பெரிய பலம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.