Home Blog Page 244

நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத வடிவேலு!! அதற்கான காரணத்தை சொல்ல இதுதான் சரியான நேரம்!!

0

திரையுலகில் சர்ச்சைகளின் மன்னனாக சமீப காலத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் ஆக இருந்து வந்த இவர் தேவையற்ற அரசியலால் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். அதன் பின் மாமனார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் சமீப காலமாக விஜயகாந்த் குறித்த பல விமர்சனங்களை பேசிய வண்ணம் உள்ளார். இவை ஒருபுறம் இருக்க நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு ஏன் தான் செல்லவில்லை என்பது குறித்தும் விலக்கியுள்ளார்.

நடிகர் விவேக் அவர்கள் வடிவேலுவிற்கு நண்பராக இருந்த நிலையில் அவரின் மறைவிற்கு நேரில் சென்று வடிவேலு அவர்கள் துக்கம் விசாரிக்கவில்லை என பலரும் தங்களுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக இது குறித்து எந்த வித பதிலையும் தெரிவிக்காமல் வடிவேலு அவர்கள் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் தற்பொழுது விவேக் அவர்களின் மறைவுக்கு தான் ஏன் செல்லவில்லை என்பது குறித்து கண்ணீர் சிந்திய வீடியோ ஒன்றினை வடிவேலு அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் வடிவேலு பேசியிருப்பதாவது :-

விவேக்கின் உடைய இறப்பு தாங்க முடியாத வழியாக இருந்ததாகவும் பலர் விவேக் அவர்களின் உடைய இறப்பிற்கு நான் செல்லவில்லை என கூறி வருவதாகவும் ஆனால் உண்மை என்னவென்றால் அவருடைய வீட்டிற்கு சென்ற விவேக்கின் மனைவி குழந்தைகள் அனைவரையும் சந்தித்து விவேக்கின் மரணம் குறித்த துக்கம் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விவேக் திடீரென இறந்து போவார் என நான் சற்றும் நினைக்கவில்லை என்றும் அவர் இறந்த காலகட்டத்தில் தன்னுடைய வாழ்வில் மிகவும் மோசமானதான விஷயங்களை சந்தித்ததாகவும் வடிவேலு அவர்களின் வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து கொண்டு இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் விவேக் அவர்களின் இறப்பிற்கு நேரில் செல்ல முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

0

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

காலி பணியிட விவரங்கள் :-

✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736

✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994

✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144

✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507

✓ சீனியா கிளார்க் டைப்பிஸ்ட் – 732

✓ கமர்சியல் டிக்கெட் கிளர்க் – 2022

✓ கணக்கு எழுத்தாளர் டைப்பிஸ்ட் – 361

✓ ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட் – 990

✓ ரயில்வே கிளர்க் – 72

இந்த வேலை வாய்ப்புகளுக்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மாறுபடும் என்றும் 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு களுக்கான சம்பளம் 19, 900 முதல் 35,400 வரை வேலைக்கு ஏற்றபடி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு எப்பொழுது என்று தேர்வர்கள் எதிர்பார்த்த இந்த நிலையில், இந்த தேர்வு வருகிற மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தேதி வெளியிடப்படவில்லை என்றாலும் மே அல்லது ஜூன் மாதங்களில் இது தேர்வுக்கான தேதிகள் குறிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

0

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது.

ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க கூடாது என்றும் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நீக்கப்படுகிறது என்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறுத்த முடியாது ஒப்பந்தத்தை இந்தியா மீறி விட்டது என்றும் தேசிய அளவில் சென்று இதற்கான தீர்வை காண போவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் பிரதமர் அறிவித்தபடி இன்று இரவுக்குள் இந்தியாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி பாகிஸ்தானியர்கள் குறித்து பேசி இருப்பதாவது :-

மருத்துவ அவசர நிலை தொடர்பாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்களை தவிர மற்ற அனைவரையும் இன்று இந்தியாவை விட்டு திருப்பி அனுப்ப இருப்பதாகவும் மருத்துவ சாதனை திருப்பவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருக்கக் கூடியவர்களுக்கு உடனடியாக திரும்பிச் செல்வதற்கான விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானியர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவதற்கான காரணம் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தான் என்றும் உயர் மருத்துவ சிகிச்சை சென்னை மற்றும் வேலூரில் இருக்கக்கூடிய முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல்களை வைத்திருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வந்திருப்பவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் கையாள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்லா ஒப்பந்தத்தில் கை வைத்த பாகிஸ்தான்!! இதனை சிறிதும் எதிர்பார்க்காத மோடி.. இதனால் நிகழும் பேராபத்து!!

0

இந்தியாவின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனால் நேற்று முதல் பாகிஸ்தான் இருக்கு நீ குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனை எதற்கு தற்பொழுது பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணி :-

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்தேஷ் நாட்டின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த போரில் பாகிஸ்தான் படைகள் தோல்வியடைந்து சுமார் 90 ஆயிரம் பாகிஸ்தான் படை வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தன. அதன் பின் இரு நாடுகளும் எதிர்கால அமைதிக்காக சிம்லாவில் சந்தித்தனர். ஜூலை 2 1972 அன்று இந்த சிம்லா ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது. இது இரு தரப்பு கூட்டு தேவையான ஒப்பந்தமாக செயல்பட்டு வருகிறது.

சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் :-

✓ இரு நாடுகளும் மீண்டும் போர் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும்

✓ அனைத்து பிரச்சனைகளும் இருதரப்பு கலந்துரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்

✓ 1971 போரின்போது கைப்பற்றப்பட்ட நிலங்களை மீண்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் திருப்பிக் கொடுக்க வேண்டும்

✓ பாகிஸ்தான் கைதியாக இருந்த இந்திய ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் மற்றும் இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும்

✓ காஷ்மீர் பகுதியில் நிலையை மாற்றக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.

சிம்லா ஒப்பந்தத்தை மீறினால் ஏற்படும் ஆபத்துக்கள் :-

சிம்லா ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் அவையும் தீர்மானங்களை தாண்டி இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைகள் அந்த இரு நாடுகளுக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையை நிலைநாட்டி இருக்கக்கூடிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானியர்கள் நிறுத்தி வைப்பதால் மூன்றாம் தரப்பு நாடாக மற்றொரு நாடு இந்தியா பாகிஸ்தான் இடையே நுழைந்து இந்த பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேசுவதோ அல்லது போரிடுவதோ போன்ற செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்.

இதய ஆரோக்கிய பாதுகாக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

0

நம் இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியம்.நமது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் உடலின் மற்ற உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்படும்.

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளும் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதயத்திற்கு நல்லது பண்ணும் 5 உணவுகள்:

1)மீன்

சால்மன்,நெத்திலி,ஜிலேபி,வஞ்சரம் போன்ற கடல் மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

2)பழங்கள்

ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.நீர்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

3)கீரைகள் மற்றும் காய்கறிகள்

அனைத்து வகை கீரைகள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.கீரை உணவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் பச்சை காய்கறிகள் இதயத்தை வலுப்படுத்துகிறது.

4)உலர் விதைகள்

தினமும் ஒரு உலர் விதை வகையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.பாதாம் பருப்பு,வால்நட் போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5)டார்க் சிக்லெட்

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.இந்த சாக்லேட் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

இதயத்திற்கு கெடுதல் தரும் 5 உணவுகள்:

1)பதப்படுத்தப்பட உணவுகள்

பெரும்பாலும் அசைவ உணவுகள் பதப்படுத்தி சாப்பிடப்படுகிறது.இப்படி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)பேக்கரி உணவுகள்

பப்ஸ்,தின்பண்டங்கள் இதய ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை உண்டாக்கிவிடும்.

3)பொரித்த உணவுகள்

எண்ணையில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கி மாரடைப்பு பாதிப்பை உணடாக்கிவிடும்.

4)கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள்

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

5)இட்லி,தோசை

கார்போ ஹேட்ரேட் நிறைந்த இட்லி,தோசை உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் பாக்கெட் சிப்ஸ்,குளிர் பானங்கள்,ஜங்க் புட்ஸ்,வறுத்த உணவுகள் மற்றும் டின்னில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

இனி முட்டை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை!! இந்த 4 பொருட்களில் புரதம் கொட்டிகிடக்கு!!

0

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு முட்டை பிடித்த உணவாக இருக்கிறது.முட்டையில் புரதம்,கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளது.முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றாலும் சிலர் விரும்புவதில்லைபுரதச்சத்து கிடைக்க முட்டை மட்டும்தான் சாப்பிட வேண்டுமென்று இல்லை.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலும் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

முட்டைக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவுகள்:

1)வறுத்த கொண்டைக்கடலை

இதில் உயர்தர புரதம் நிறைந்து காணப்படுகிறது.50 கிராம் கொண்டைக்கடலையில் 8 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்து காணப்படுகிறது.இது தவிர நார்ச்சத்தும் இதில் நிறைந்து காணப்படுகிறது.தினமும் வறுத்த கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.கொண்டைக்கடலையை அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.

2)பாதாம் பருப்பு

இதில் நார்ச்சத்து,புரதம்,மெக்னீசியம்,வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.

3)பச்சை பட்டாணி

அதிக புரதம் நிறைந்த பொருட்களில் ஒன்று பச்சை பட்டாணி.இதை வேகவைத்து சுண்டல் போன்று சாப்பிடலாம்.முட்டைக்கு இணையான புரதம் இதில் இருந்து கிடைக்கிறது.

4)கருப்பு உளுந்து

கால்சியம்,புரதம் போன்றவை கருப்பு உளுந்தில் நிறைந்து காணப்படுகிறது.இந்த உளுந்தை ஊறவைத்து அரைத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

4)வேர்க்கடலை

அதிக சுவை நிறைந்த வேர்க்கடலையை அவித்து அல்லது வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.இது தவிர பன்னீர்,பூசணி விதை போன்றவற்றிலும் புரதம் நிறைந்திருக்கிறது.

கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

0

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆனால் இன்று நாம் யாரும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதில்லை.உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து வருகிறது.நம் உடல் உறுப்புகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஆரோக்கியத்தை பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்:

**மஞ்சள்
**இஞ்சி
**எலுமிச்சை
**பூண்டு

தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.இஞ்சியை இடித்து பானம் செய்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் அகலும்.

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரல் கழிவுகள் நீங்கும்.தினமும் ஒரு பச்சை பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் கொழுப்பு படியாமல் இருக்கும்.

நுரையீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்

**எலுமிச்சை
**ஆரஞ்சு
**இஞ்சி

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நுரையீரலில் சளி,நச்சுக் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.அதேபோல் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நுரையீரல் கழிவுகள் நீங்கும்.இஞ்சி டீ செய்து குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

சருமம் பளபளக்க இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

**பீட்ரூட்
**கேரட்
**ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.பீட்ரூட்,கேரட் ஆகியவற்றை ஜூஸாக செய்து குடித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.ஆரஞ்சு பழம்,பப்பாளி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட சாப்பிட வேண்டிய உணவுகள்:

**வெள்ளரி
**எலுமிச்சை
**தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும்.தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் வெள்ளரி மற்றும் எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்து வந்தால் சிறுநீர்கத்தில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.

இரத்தக் கழிவுகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்:

**மாதுளை
**ஆரஞ்சு
**இஞ்சி
**கறிவேப்பிலை

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

0

தினந்தோறும் நாம் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.இந்த பாதிப்பு நமது வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.

தலையில் கல் அழுத்துவது போன்ற உணர்வு,தலைபாரம்,தலையில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.தலைவலி வந்தால் அவை குணமாவதற்குள் பாடாய் படுத்திவிடும்.

இந்த தலைவலி பாதிப்பை மருந்து,மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

1)பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சூடு பொறுக்கும் அளவிற்கு வந்த பின்னர் கால்களை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குணமாகும்.

2)தலைவலி குணமாக வெது வெதுப்பான தண்ணீரில் சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிக்கலாம்.தலைவலி குறைய சூடான நீர் கொண்டு ஆவி பிடிக்கலாம்.

3)தினமும் 8 முதல் 10 மணி நேர தூக்கத்தை அனுபவித்தால் தலைவலி பாதிப்பு வராது.மூலிகை பானம் குடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

4)தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீர் குளியல் போட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

5)தலைவலி பாதிப்பு குணமாக உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் பருகலாம். தலைக்கு பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

6)கொத்தமல்லி,சுக்கு போன்றவற்றை இடித்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி குணமாகும்.

7)எண்ணையை லேசாக சூடாக்கி தலை மற்றும் நெற்றி பகுதியில் ஊற்றி மசாஜ் செய்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

8)ஆப்பிள் சீடர் வினிகரை சூடான நீரில் கலந்து காட்டன் துணையை அதில் போட்டு நினைத்து நெற்றி மீது பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

0

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.கீரையில் போலிக் ஆசிட்,இரும்பு,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் உடலில் பல நோய்களுக்கு கீரை உணவு மருந்தாக பயன்படுகிறது.

நோய் தீர்க்கும் கீரைகள்:

1)வாதம்

தொய்யக் கீரையில் கடையல் செய்து சப்பிட்டு வந்தால் வாத நோய் பாதிப்பு குணமாகும்.

2)இரத்தக் கொதிப்பு

பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும்.

3)இரத்த சோகை

முருங்கை கீரையில் பொறியல்,சூப் செய்து சாப்பிட்டால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.

4)பித்தம்

சிறுகீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.மூக்கிரட்டை கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

5)மூட்டு வலி

உங்களுக்கு மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறைய முடக்கத்தான் கீரையை உணவாக சாப்பிடலாம்.முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

6)ஞாபக சக்தி

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த,ஞாபக திறனை அதிகரிக்க வல்லாரை கீரையை உட்கொள்ளலாம்.

7)உடல் சூடு

உங்கள் உடல் சூடு தணிய வயிற்றுப் பிரச்சனைகள் குணமாக வெந்தயக் கீரையை உட்கொள்ளலாம்.

8)குடல் புண்

வயிற்றுப்புண்,அல்சர் புண்கள் குணமாக அகத்தி கீரையை உட்கொள்ளலாம்.இரைப்பை புண்களை குணப்படுத்த அகத்தி கீரையை சாப்பிடலாம்.

9)மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்த பசலை கீரையை சாப்பிட்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை குணமாகும்.

10)இரைப்புண் வாய்ப்புண்

வாய்ப்புண்,குடல்புண் பிரச்சனை இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம்.

வெள்ளைப்படுதல் முதல் தோல் நோய்கள் வரை.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்!!

0

உடல் நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

தொட்டால் சிணுங்கி
பசும் பால்

சிறிது தொட்டால் சிணுங்கி இலையை பறித்து தண்ணீர் விட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தொட்டால் சிணுங்கி இலை
மிளகு
உப்பு

சிறிதளவு தொட்டால் சிணுங்கி இலையை பறித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து 10 கருப்பு மிளகை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

அரச மரப்பட்டை
தண்ணீர்
தேன்

முதலில் 50 கிராம் அரச மரப்பட்டையை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அரச மரப்பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

கருஞ்சீரகம்
உப்பு
தண்ணீர்

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகப் பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இதை கிளாஸிற்கு வடிகட்டி சிறிது உப்பு கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

வேப்பிலை
தண்ணீர்

பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வேப்பிலை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வேப்பிலையை குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த நீரில் குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.வேப்பிலை பேஸ்டை சருமத்தில் பூசி குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.