Home Blog Page 256

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா.. உடனே இதை செக் பண்ணுங்க!! மத்திய அரசு எச்சரிக்கை!!

0

சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு செல்வது நன்மைக்கு மட்டுமல்லாத இதுபோன்ற தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் கள்ள நோட்டுகளை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்குவதால் அவற்றை கண்டறிவது தற்போது மிக கடினமான ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சந்தையில் புழக்கத்தில் இருக்கக்கூடிய கள்ள நோட்டு இருக்கும் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களுக்கும் இடையே ஒரே ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதாகவும் உங்களிடம் அல்லது நீங்கள் வரக்கூடிய வருடம் இருந்து 500 ரூபாய் தாள்களை பெற வேண்டும் என்றால் அதில் இந்த சின்ன பிழை இருக்கிறதா என்பதை சரி பார்த்து வாங்கும்படியும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி, RESERVE BANK OF INDIA என அனைத்து 500 ரூபாய் தாள்களிலும் அச்சிடப்பட்டு இருப்பதில் கள்ள நோட்டுகளில் E என்ற எழுத்து இருக்கும் இடத்தில் அதற்கு மாறாக A என்ற எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் எனவே இதை வைத்து உங்களிடம் இருக்கக்கூடிய 500 ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகளா அல்லது போலியான நோட்டுகளா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். எனவே உடனடியாக உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றாலோ அல்லது கடைகளில் 500 ரூபாய் நோட்டுகள் வாங்குகிறீர்கள் என்றாலோ இதை சரிபார்த்தபின் வாங்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!! உயர்த்தப்பட்ட ஊதியம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு குறிப்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தமிழக அரசு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :-

பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் சர்வே பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வே பணியில் பயன்படுத்தக்கூடிய ஊழியர்களுக்கு நகர்ப்புற மீட்டர் ரீடிங் ஒன்றுக்கு ரூ.4 ஆகவும் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் ஒரு ரீடிங்க்கு ரூ.6 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என சர்வே பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை தற்பொழுது தமிழக அரசு ஏற்று சம்பள உயர்வு வழங்கியுள்ளது.

அதன்படி, நகர்ப்புறங்களில் எடுக்கப்படக்கூடிய ரீடிங் ஒன்றுக்கு ரூ.5 ஆகவும் கிராமம் மற்றும் மலை கிராமங்களில் எடுக்கப்படக்கூடிய ரீடிங் ஒன்றுக்கு ரூ.7 ஆகவும் தமிழக உயர்த்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இத தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக்கூடிய சர்வேயர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தர் பல்ட்டி அடித்த கங்கை அமரன்!! சொற்களால் இளையராஜாவை வறுத்தெடுத்த தருணம்!!

0

சமீபத்திய நாட்களில் இளையராஜா தன்னுடைய பாடல்களை பயன்படுத்தக்கூடிய படங்களுக்கு காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பணத்திற்காக பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது தவறு என பல கருத்துக்களும் எழுந்து வருகிறது.

இது குறித்த சமீபத்தில் கங்கை அமரன் பேசியிருப்பது :-

இசையமைப்பாளருக்கு 7 கோடி ரூபாய் பணம் கொடுத்து அந்த இசை வெற்றி பெறாமல் செல்கிறது ஆனால் எங்களுடைய பாடல் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் நிலையில் அந்த பாடலுக்கு நாங்கள் வாக்குரிமை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் எங்களுக்கு பணத்த ஆசை கிடையாது என அவர் கூறியதோடு எங்கள் பாட்டை வைத்து உங்கள் படம் ஹிட் ஆகும் பொழுது அதற்கான சம்பளத்தை எங்களுக்கு உங்களால் கொடுக்க முடியாதா என கங்கையமரம் இளையராஜாவிற்கு துணை நின்று பேசி இருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன் கங்கை அமரன் இளையராஜா குறித்து பேசி இருப்பது :-

அண்ணன் செய்வது அசிங்கம் என்றும் கேவலம் என்றும் எத்தனையோ எம் எஸ் டி பாடல்களை சுட்டு அண்ணன் பாட்டு போட்டு இருக்கிறார் என்றும் கங்கை அமரன் இளையராஜா அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு மட்டுமல்லாது தியாகராஜர் கீர்த்தனைகளை பயன்படுத்தி கூட பல பாடல்களை இயற்றியிருப்பதாகவும் இதற்கெல்லாம் அவர் பணம் கொடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக நீ சாப்பிடுவது இரண்டு இட்லி கொஞ்சம் சாப்பாடு இல்லனா ரெண்டு சப்பாத்தி. இப்படி ஒன்று கூடிய உனக்கு காப்பரிமை பெற்று காசு வாங்கி சம்பாதிக்க வேண்டுமா என பொங்கி எழுந்ததோடு நீ செய்வது முறையல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதிர்ச்சியில் விஜய் டிவி ரசிகர்கள்!! முழுவதுமாக மாற தொடங்கிய தொலைக்காட்சி!!

0

டிஆர்பி யில் முதலிடம் படித்து வரக்கூடிய சேனலாக விஜய் டிவி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது முழுவதுமாக விஜய் டிவி கைமாற்றப்பட இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய 5 முக்கிய நிகழ்ச்சிகள் அதன் விளைவாக இப்பொழுது நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் jio நிறுவனம் வாங்கியதால் ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து விஜய் டிவியையும் ஆகிவிட்டதாகவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உடன் விஜய் டிவியும் இனிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவிட்டு விஜய் டிவியில் லோகோவை பற்றி புதிய நிகழ்ச்சிகள் மூலம் புதிய புத்தாக்கம் கொடுக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட இருப்பதாகவும் இதில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முக்கிய தொகுப்பாளர்களை முழுவதுமாக வெளியேற்ற இருப்பதாகவும் வெளியான தகவல் ரசிகர்களை பெரிதளவு அதிர்ச்சடைய செய்கிறது. தங்களுடைய ரியாலிட்டி ஷோக்களின் மூலமாகவும் சீரியல்களின் மூலமாகவும் இன்றுவரை டிஆர்பி யில் முதலிடம் பிடித்திருக்கக்கூடிய விஜய் டிவிக்கு ரசிகர் பட்டாலும் ஏராளம். ஆனால் இது போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால் விஜய் டிவி ரசிகர்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது

இந்த இலையில் சட்னி செய்து சாப்பிட்டால்.. படுக்கையில் நீண்ட நேரம் என்ஜாய் பண்ணலாம்!!

0

இன்று பெரும்பாலான ஆண்களின் பிரச்சனையாக இருப்பது தங்கள் துணையை திருப்தி படுத்த முடியவில்லை என்பதுதான்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கைமுறையால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.ஆண்கள் தங்கள் விறைப்புத் தன்மையை அதிகரிக்க கொத்தமல்லி தழையில் துவையல்,சட்னி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)சின்ன வெங்காயம்
3)பூண்டு பல்
4)இஞ்சி
5)தக்காளி
6)உப்பு
7)கடலை பருப்பு
8)உளுந்து பருப்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கட்டு கொத்தமல்லி தழையை எடுத்து தண்ணீர்விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தக்காளி பழத்தை த்தம் செய்துவிட்டு இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு தோல் தோல் நீக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு மற்றும் இஞ்சி துண்டை வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து தக்காளி பழத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் போட்டு வதக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு வறுத்த கடலை பருப்பு,உளுந்து பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.கொத்தமல்லி சட்னியை சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

அதேபோல் கொத்தமல்லி தழை,இஞ்சி மற்றும் தேன் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் சூட்டை குறைக்கும் பச்சை பயறு பால்!! கோடைக்கு ஏற்ற அற்புத பானம்!!

0

இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயறு பால் செய்து சாப்பிடுங்கள்.பச்சை பயறு,தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான பால் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு – ஒரு கப்
2)ஏலக்காய் – மூன்று
3)தேங்காய் துருவல் – ஒரு கப்
4)ஊறவைத்த பாதாம் பருப்பு – 10
5)ஊறவைத்த முந்திரி பருப்பு – 10
6)ஊறவைத்த வால்நட் – 10
7)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கப் பச்சை பயறு எடுத்து வாணலி ஒன்றில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பச்சை பயறு வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.பயறு கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து பச்சை பயறை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு மூடி தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை பயறை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை அதில் கொட்டி கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு மூன்று ஏலக்காய்,ஊறவைத்த வால்நட்,ஊறவைத்த முந்திரி மற்றும் ஊறவைத்த பாதாம் பருப்பை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

**அடுத்து இனிப்பு சுவைக்காக தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பச்சை பயறு பாலை கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.டீ,காபி போன்ற பானங்களுக்கு பதில் இந்த பச்சை பயறு பால் குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

0

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சசீராக இருக்க,கழிவுகள் வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)செம்பருத்தி இதழ்
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

1.ஒரு காற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் கற்றாழை ஜெல் மற்றும் செம்பருத்தி இதழை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து இந்த சாறை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சம் பழத்தை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.இந்த ஜூஸை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற நசுக்கி கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடாகும் வரை காத்திருக்க வேண்டும்.

2.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த மஞ்சள் பானத்தை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் முழுமையாக அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)நெல்லிக்காய்
3)சீரகம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு வெள்ளரிக்காயை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு முழு நெல்லிக்காய் எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெள்ளரிக்காய் மற்றும் முழு நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.இந்த வெள்ளரிக்காய் ஜூஸை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்.இரத்தத்தில் இருக்கின்ற யூரிக் அமிலம் வெளியேற இந்த ஜூஸை செய்து குடிக்கலாம்.

வெயிலால் கருப்பான முகம் வெள்ளையாக மாற.. இதை ஒருமுறை முகத்திற்கு தடவுங்கள்!!

0

இந்த வெயில் காலத்தில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான்.வெயில் காலத்தில் வெளியில் சென்றால் சரும நிறம் மாறிவிடும்.எனவே சருமத்தை கலராக மாற்ற இங்குள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)கற்றாழை – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி தயிரை அதில் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்தால் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சென்று மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தக்காளி பழத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்டை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய் – ஒன்று
2)காட்டன் பஞ்சு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெள்ளரிக்காயை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

பிறகு வெள்ளரி ஜூஸை கிண்ணத்திற்கு பிழிந்து காட்டன் பஞ்சை அதில் வைத்து நினைத்து முகத்தில் தடவ வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.சருமத்திற்கு குளிர்ச்சி கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன்ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர்ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் முகக்கருமை நீங்கும்.

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய்.இந்த காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.வெண்டையில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வெண்டை நீர் நன்மைகள்:

1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெண்டை நீரில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.முடி ஆரோக்கியம் மேம்படும்.வெண்டையில் உள்ள வைட்டமின் சி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

3)செரிமானப் பிரச்சனை சரியாக வெண்டை நீரை தினமும் பருகலாம்.வெண்டை ஊறவைத்த நீர் குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

4)வெண்டையில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.வெண்டைக்காய் ஊறவைத்த நீர் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.வெண்டைக்காய் நீர் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெண்டைக்காய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காய் எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதன் கம்பு பகுதியை நீக்கிவிட வேண்டும்.

அடுத்து ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி வெண்டைக்காயை அதில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.காலையில் எழுந்ததும் இந்த வெண்டை நீரை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருக வேண்டும்.

ஞாபகத் திறன் அதிகரிக்க.. இரவில் பாலில் இந்த பொடியை கலந்து குடிச்சிட்டு வாங்க!!

0

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க நினைவாற்றலை பெருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பால்:

தேவைப்படும் பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 10
2)பால் – ஒரு கிளாஸ்
3)பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.பிறகு பாதாம் பருப்பை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்ற வேண்டும்.பின்னர் பாதாம் பேஸ்டை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பாதாம் பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பாதாம் பால் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பாதாம் பருப்பு பொடி சாப்பிட்டால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 10
2)வால்நட் – 10
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)கற்கண்டு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து பாதாம் பருப்பு மற்றும் வால்நட்டை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடித்து தேவையான அளவு கற்கண்டு சேர்த்து குடித்தால் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.