Home Blog Page 279

அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

0

நெல்லிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கனியாகும்.நெல்லிக்காயில் சிறிய நெல்லி,பெரிய நெல்லி என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் சிறு நெல்லி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டது.பெரிய நெல்லி துவர்ப்பு,புளிப்பு,சிறிது இனிப்பு சுவை கொண்டது.இரண்டு நெல்லியும் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது.

வைட்டமின் சி சத்து நிறைந்த காய்களில் இதுவும் ஒன்றாகும்.பெரிய நெல்லி தலை முதல் பாதாம் வரையிலான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.மற்ற கனிகளை ஒப்பிடுகையில் இந்த காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.நெல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளன்னு மாறும்.

நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடலில் தேங்கிய கழிவுகள் வெளியேற நெல்லிக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.தினமும் நெல்லி ஜூஸ் சாப்பிட்டு வந்தால் முடி கருமையாக வளரும்.

உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.எவ்வளவு நன்மைகளை நமக்கு தரும் நெல்லியின் மறுப்பக்கம் தெரிந்தால் அதிர்ந்துபோயிடுவீங்க.நெல்லிக்காயை காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.சிலருக்கு பெரிய நெல்லிக்காய் ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு சைனஸ் பிரச்சனை ஏற்படும்.

நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணப் பிரச்சனை உண்டாகும்.நெல்லிக்காயின் புளிப்பு சுவை பல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உண்டாகும்.நெல்லி ஜூஸ் அலர்ஜி இருப்பவர்கள் தேனில் நெல்லிக்காய் ஊறவைத்து சாப்பிடலாம்.நெல்லிக்காயை பொடித்து தண்ணீர் அல்லது தேனில் மிக்ஸ் செய்து சாப்பிடலாம்.

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

0

சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. அவர்களை பிடிக்கும் காலம் வந்த பொழுது தனது கடமையிலிருந்து தவறாமல் அவர்களை ஏழரை ஆண்டுகள் தனது பிடியில் வைத்திருந்தார்.

இவ்வாறு சனிபகவான் தனது கடமையில் இருந்து தவறாமல் சிவனையே ஆட்டம் காண வைத்ததனால் தான் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்று “சனீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார்.

தெய்வங்களையே ஆட்டி படைத்த இவர் மனிதர்களாகிய நம்மை விட்டு வைப்பாரா? அவரவர் காலம் வரும் பொழுது சனிபகவான் கண்டிப்பாக மனிதர்களை பிடித்துக் கொள்வார்.

இதனைப் போன்று தான் ஐயப்பன் பக்தனாக இருந்த ஒருவரை பிடிக்கின்ற காலம் வந்த பொழுது, அந்த மனிதனை பிடிக்க சனி பகவான் சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஐயப்பன் “எனது பக்தனை ஏன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு சனிபகவான் “ஏழரை சனி வரும் காலத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பிடிப்பேன். அதுதான் எனது கடமையும் கூட” என்று கூறினார். மேலும் அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கவும் செய்வேன் என்றும் கூறினார்.

அதற்கு ஐயப்பன், எனது பக்தர்களாக இருக்கக்கூடிய காலத்தில் நீங்கள் அவர்களை தண்டிக்க வேண்டாம். என்ன தண்டனையை கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள், ஒரு மண்டல (48 நாட்கள்) காலத்திற்குள் அவர்கள் அனைத்து தண்டனைகளையும் அனுபவிக்கும் படி, விரத முறைகளாக வகுத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

அப்பொழுது சனிபகவான் “நான் கொடுக்கும் தண்டனைகளை ஒரு மண்டல காலத்திற்குள் எப்படி அவர்களை அனுபவிக்க செய்ய முடியும்?” என்று கேட்டார். அதனைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

1.எனது பக்தர்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே உண்டு திருப்தி கொள்வார்கள்.

2. கட்டில், மெத்தைகளை தவிர்த்து வெறும் தரையிலேயே படுத்து உறங்குவார்கள்.

3. எனது பக்தர்கள் அவர்களது மனைவியிடம் பேசாமல் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிப்பார்கள்.

4. வெறும் காலில் காடு, மலைகளைத் தாண்டி வந்து என்னை தரிசிக்கவும் செய்வேன். மேலும் ஒரு மண்டல காலம் முழுவதும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்னும் எனது நாமத்தையே கூற வைப்பேன்.

5. உனக்கு பிடித்த கருப்பு நிற ஆடையையே எனது பக்தர்களை அணியச் செய்வேன்.

6. காலணியை அணிந்து கொள்ளாமலும், முடியை திருத்திக் கொள்ளாமலும், எந்தவித சுப துக்க செயல்களில் கலந்து கொள்ளாமலும் “சுவாமி” என்று அனைவராலும் அழைக்க செய்வேன்.

7. தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரால் குளிர்விக்க செய்வேன்.

இதுபோன்று நீங்கள் கொடுக்கக் கூடிய தண்டனைகளை விரத முறைகளாக வகுத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். எனவே நீங்கள் உங்களது கொடூர பார்வையில் இருந்து சற்று விலகி, மனம் மகிழ்ந்து, எனது பக்தர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று ஐயப்பன் கூறினார்.

இவ்வாறு சனி பகவானுக்கு ஐயப்பன் கொடுத்த வாக்கின் காரணமாகத்தான், ஐயப்ப பக்தர்கள் இதுபோன்ற கடுமையான விரத முறைகளையும், கருப்பு நிற ஆடையையும் அணிந்து கொள்கின்றனர். ஐயப்பன் பக்தனாக இருக்கின்ற சமயத்தில் சனி பகவான் ஒருபோதும் அவர்களை பிடிக்க மாட்டார். மேலும் ஐயப்பன் பக்தர்களுக்கு சனி பகவான் பரிபூரணமான அருளையும் வழங்குவார்.

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

0

சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார்.

சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி கிரகம் தான். சனிபகவானை பார்த்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரே அவர் தான். எனவே அவரைப் பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. சரியாக நமது கடமையை செய்து வந்தோம் என்றால் எந்தவித பயமும் தேவையில்லை.அதேபோன்றுதான் சனி பகவானிடம் நாம் நேர்மையாக இருந்தால் போதும், அவர் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்.

“சனியைப் போல் கொடுப்பாறும், சனியைப் போல் கெடுப்பாறும் எவருமில்லை” என்பது பழமொழி. இதிலிருந்து தெரிகிறது சனீஸ்வரர் கொடுப்பதில் மிகச் சிறந்த வல்லவர் என்று. அதே போன்று சனிபகவான் தனது கடமையிலிருந்து சிறிதும் தவறாதவர் ஆவார். இத்தகைய சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மற்றும் பிடிக்காத செயல்களை ஒருவர் செய்யும் பொழுது, அவர் அந்த மனிதனை உடனே பிடித்துக் கொள்வார்.

1. சனிபகவானுக்கு விளக்கு ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்து இருக்கக்கூடிய இடங்களையும், எப்பொழுதும் அமங்கல சொற்களை பேசும் நபர்களையும் சனிக்கு பிடிக்காது. தனது தீய பார்வையால் அவர்களை திரும்பிப் பார்ப்பார்.

2. பொய், களவு, சூது, வாது இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு தண்டனை தர சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும்.

3. சுத்தம் இல்லாத இடத்தில் சூனியம் குடி இருக்குமே தவிர, திருமகள் குடியிருக்க மாட்டாள். ஆனால் சனி பகவானுக்கு அந்த இடங்கள் தான் மிகவும் பிடிக்கும். இதுபோன்ற சுத்தம் இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு தீராத துன்பத்தை சனி பகவான் தருவார்.

4. மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை கொண்டு மற்றவர்களை வஞ்சித்து வாழ்பவர்களை கூட, சனி பகவான் வாழ விடாமல் செய்வார்.

5. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினமும் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனிபகவான் நீங்காமல் நிரந்தரமாக குடி கொள்வார்.

6. தாய்க்கு அடங்காத பெண்களும், தகப்பனுக்கு அடங்காத ஆண்களும், உடன் பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகிகள் போன்றோரை சனிபகவான் கால நேரம் பார்த்து கண்டிப்பாக தண்டிப்பார்.

7. ஈரமான துணிகளை உடுத்துபவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். உடனே அவர்களைப் பற்றிக் கொள்வார். ஈரம் சொட்ட சொட்ட ஒருவர் வீட்டின் உள்ளே சென்றால் அவர்களின் மீது சனி பகவானுக்கு பாசம் அதிகரிக்கும், இதனால் அவர்களை உடனே பிடித்துக் கொள்வார்.

8. முதல் நாள் உடுத்திய உடையை மறுநாளும் பயன்படுத்துபவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோன்று குளிக்காமல் அசுத்தமாக இருந்தாலும், தலைவாரி கொள்ளாமல் இருந்தாலும் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும்.

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

0

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

“இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகவே நடத்தப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், சமூகவிநியோகத்தை சரிசெய்யும் நோக்கத்தில் நடத்தப்படும் இது போன்ற மாநாடுகள், மிக முக்கியமான மையமாக அமையும்.”

மேலும், அவர் வட தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார துறைகள், தெற்கு தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளன என்றும், அரசு இவை குறித்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் கூறிய முக்கியக் கருத்துகள்:

69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பது சமூக நியாயத்தின் அடிப்படை.

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது எண்ணிக்கையைத் தழுவி உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் வன்னியர் இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து,

“இந்த மாநாடு என்பது ஒரு சமூக நீதிப் போர். தமிழ் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடைபெறுகிறது. சமுதாய வளர்ச்சியில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என அவர் சுய நம்பிக்கையுடன் கூறினார்.

இவ்வாறு, பந்தல் கால் நடும் விழா வெகு உற்சாகத்துடன் நடைபெற்றதோடு, அன்புமணி ராமதாஸின் உரை சமூக நீதிக்கான அடுத்த கட்ட போராட்டத்திற்கு தொடக்கமாக அமைந்தது.

 

டிகிரி முடித்தவர்களுக்கு நற்செய்தி!!தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சி!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக ஓராண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தியில் தெரிவித்திருப்பதாவது :-

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனங்கள் இணைந்து நடத்தக்கூடிய ஓராண்ட சான்றிதழ் பயிற்சி வகுப்பானது வருகிற ஜூன் 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த வகுப்புகளுக்கு பயிற்சி கட்டணமாக 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓராண்டு பயிற்சி வகுப்புகள் சேரணிக்கக் கூடிய மாணவர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பட்டய படிப்பு இந்த ஓராண்டு பயிற்சி வகுப்புகள் சேரணிக்கக் கூடிய மாணவர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பட்டய படிப்பு , ஐ டி ஐ அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேல் கூறப்பட்ட அனைத்தும் இருக்கக்கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.editn.in/Web.OneYearCourse என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக விண்ணப்பிக்க ,

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தின் மாவட்ட திட்டம் மேலாளர்,
திருப்பத்தூர்.

தொலைபேசி எண் – 8668101638/8668107552

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க திட்டத்தின் கீழ் இணையக்கூடிய மாணவர்களில் 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான செலவு முழுவதையும் அரசை ஏற்கும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

0

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது எல்லோராலும் 100 சதவீதம் யூகிக்க முடிந்த ஒன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட அதிமுக வாஷ் அவுட் என்ற நிலையை அனைவரும் எதிர்பார்த்தனர். கூடவே பாஜக கூட்டணியும் அதிமுகவிற்கு மிகப்பெரிய சுமையாக கருதப்பட்டது.

திமுக அமோக வெற்றி, அதிமுக வரலாறு காணாத தோல்வி என்ற முடிவுகளை எதிர்பார்த்திருந்த பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஒன்று காத்திருந்தது. அதிமுகவிற்கு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என்ற யூகங்கள் பொய்த்துப் போயின.

eps

2021-ல் திமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்றது, கட்சி பெற்ற வாக்குகள் 1,74,30,179, அதாவது 37.70 சதவீதம். ஆனால் அவ்வளவு எதிர்ப்புகளுக்குமிடையே பாஜக-வுடன் கூட்டணி வைத்தும் அதிமுக 2021-ல் 191 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளை வென்றது. அந்த கட்சி பெற்ற மொத்த வாக்குகள் முறையே 1,53,91,055, அதாவது 33.3 சதவீதம். அதிமுக-பாஜக கூட்டணி பலவீனம், திமுக எளிதான வெற்றி என்ற கண்ணோட்டம் இருந்த 2021 தேர்தலில் திமுக-விற்கும் அதிமுக-விற்கும் இடையே இருந்த வாக்குகளின் வித்தியாசம் வெறும் 20 லட்சம்தான்.

அந்த நம்பிக்கைதான் 2023 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு போட்டியிடலாம் என்கிற நம்பிக்கையை எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்தது. ஆனால், இந்தமுறை மத்தியில் பாஜக தோற்கும் என்றே பழனிச்சாமி கணக்கு போட்டார். ஆனால், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துவிட்டது. இதை பழனிச்சாமியே எதிர்பார்க்கவில்லை. அதோடு, மகராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. எனவே, இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற நம்பிக்கை பழனிச்சாமிக்கு வந்திருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? - ஒரு அலசல்!....

விஜய், சீமான் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்கலாம் என கணக்குப் போட்டார் பழனிச்சாமி, ஆனால், அதிக இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்றவற்றை விஜய் கேட்க அது நடக்கவில்லை. சீமானோ தனித்துபோட்டி என சொல்லிவிட்டார். எனவேதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பழனிச்சாமி. இதில் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் பிரிக்கும்.

இது அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா இல்லை திமுகவிற்கு சாதகமாக அமையுமே என்பதே தேர்தல் முடிவில்தான் தெரியவரும்!..

கேரள முதல்வர் சிவகார்த்திகேயனுக்கு செய்த சம்பவம்!! இப்படி ஒரு அதிர்ஷ்டமா!!

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி தன்னுடைய திறமையால் சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதில் பெரிதளவு இடம் பெற்று அதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் அஜித் அளவிற்கு பேசப்படக்கூடிய நடிகராக உருவெடுக்க தொடங்கியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமல்லாது கேரள மாநிலத்திலும் அதிக அளவு ரசிகர்களை பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் விளங்கி வருகிறார்.

குறிப்பாக அமரன் திரைப்படத்தில் கேரள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை கதையை திரைப்படமாக நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததோடு அது சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் போற்றக்கூடியதாகவே அமைந்திருந்தது. இதே காரணத்தால் தான் கேரள மாநிலத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் பிரபலமாக இருக்கிறார். பிரபலமானது மட்டுமல்லாது கேரள மாநிலத்தின் முதல்வர் பிரனாயி அவர்களுடன் அவருடைய வீட்டில் தடபுடலான விருந்து உணவை சிவகார்த்திகேயன் சாப்பிட்டு இருப்பது தற்பொழுது பேச்சுப் பொருளாகி இருக்கிறது.

காரணம், தமிழக முதல்வரோடு நெருங்கிய உறவில் இருந்தாலும் இதுவரை தமிழக முதல்வர் வீட்டிற்கு கூட விருந்திற்காக சிவகார்த்திகேயன் செல்லாத நிலையில் கேரள முதல்வர் அவருடைய இல்லத்திற்கு அழைத்து சிவகார்த்திகேயனருக்கு விருந்து வைத்திருப்பது ரசிகர்களிடையே மட்டுமல்லாது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள முதல்வரின் வீட்டில் உணவு விருந்து சாப்பிடக்கூடிய இரண்டாவது தமிழ் நடிகராக சிவகார்த்திகேயன் தற்பொழுது அறியப்படுகிறார். அதற்கு முன்னதாக உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே கேரள முதல்வர் திறனாய் வீட்டில் அதற்கு முன்னதாக உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே கேரள முதல்வர் பிரனாயி வீட்டில் உணவு அருந்தி இருந்த நிலையில் தற்பொழுது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 ரூபா கூட வசூல் செய்யாது!! நடிகர் சிவாஜி படத்தை பழித்த ரஜினிகாந்த்!!

0

நடிகர் சிவாஜி கணேசனும் இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து வேலை பார்த்த ஒரே திரைப்படம் முதல் மரியாதை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு படத்திற்கும் வெளியாகும் முன்பாக வரக்கூடிய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இந்த திரைப்படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படம் சுத்தமாக ஓடவே ஓடாது என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது :-

முதலில் முதல் மரியாதை திரைப்படமானது தயாரிக்கப்பட்டு அனைவரின் பார்வையிலும் பார்த்த பொழுது ரஜினி அவர்கள் இந்த படம் குருட்டு அதிஷ்டத்தில் கூட ஓடாது என சொல்லி இருக்கிறார். ஆனால் பாரதிராஜாவோ தன்னிடம் தைரியமாக இரு ஐயா இந்த படம் கண்டிப்பா வெற்றி பெறும் என தெரிவித்ததாக செல்வராஜ் கூறியிருக்கிறார். அதன்பின் இந்த திரைப்படத்தை திருச்சி மாய்ஸ் தியேட்டர் ஓனர் ராமசாமி பார்த்த பின்பு திருச்சி மற்றும் தஞ்சாவூர் இரண்டுக்கும் விநியோக உரிமையை வாங்கிக் கொண்டதாகவும் அதன் பின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எந்த நம்பிக்கையில் இந்த திரைப்படம் குருட்டு அதிர்ஷ்டத்தில் கூட ஓடாது என கூறினார் என்பது தனக்கு புரியவில்லை என்றும் ஆரம்பத்தில் பாரதிராஜா அவர்கள் சிவாஜிகணேசனுக்கு ஷார்ட் வைக்கும் பொழுது இங்கு நில்லுங்க இப்படி பாருங்க என்று மட்டுமே தெரிவித்ததாகவும் அதனை மறக்காமல் சிவாஜி கணேசன் அவர்களும் செய்ததாகவும் கூறியிருக்கிறார். அதன்பின் திரைப்படத்தை பார்க்கும் பொழுது தான் சிவாஜிகணேசன் அவர்கள் எதற்காக தன்னை பார்பி ராஜா இவ்வாறு செய்ய சொன்னார் என்பது புரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

வாழ்வையே மொத்தமாக மாற்றும் சூப்பர் திட்டம்!!சில ஆண்டுகளில் பல கோடி வருமானம்!!

0

பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம்.

நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது அவசியம். அப்படித்தான் இன்று எல்ஐசி ஜீவன் ஷிரோமணி என்ற உயர் நிகர மதிப்புள்ள திட்டம் குறித்த பார்க்கப் போகிறோம்.

LIC ஜீவன் ஷிரோமணி துக்கத்தின் முக்கிய அம்சங்கள் :-

✓ குறைந்தபட்ச அடிப்படைத் தொகை – 1 கோடி ரூபாய்

✓ காப்பீட்டு காலங்கள் – 14,16,18,20 ஆண்டுகள்

✓ ப்ரீமியம் செலுத்தும் காலம் – 4 ஆண்டுகள்

✓ ப்ரீமியம் செலுத்தும் முறை – மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு

✓ முதிர்வு வயது – 69

காப்பீட்டு காலத்தில் சாப்பிட்டாளர்கள் இறக்க நேர்ந்தால் காப்பீட்டில் குறிப்பிடப்பட்டவருக்கு 125% வரை அடிப்படைத் தொகை அல்லது வருடாந்திர பிரீமியம் × 7 என்ற முறைப்படி இதில் எது அதிகமோ அதற்கான தொகை வழங்கப்படும்.

குறிப்பிட்ட வருடங்களின் அடிப்படையில் தொகையின் ஒரு பகுதியானது காப்பீட்டு நபர் உயிருடன் இருக்கும் பொழுது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,

✓ 14 ஆண்டு திட்டம் என்றால் 10 வது மற்றும் 12 வது ஆண்டுகளில் 30% தொகை வழங்கப்படுகிறது

✓ 16 ஆண்டு திட்டம் என்றால் 12வது மற்றும் 14வது ஆண்டுகளில் 35 சதவீதம் வழங்கப்படுகிறது.

✓ 18 ஆண்டு திட்டம் என்றால் 14வது மற்றும் 16வது ஆண்டுகளில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது.

✓ 20 ஆண்டு திட்டம் என்றால் 16வது மற்றும் 18வது ஆண்டுகளில் 45% தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படக்கூடிய தொகையின் முதுர்கானது முழுவதுமாக கிடைக்கும் காலகட்டத்தில் காப்பீட்டாளர் உயிருடன் இருந்தால் அடிப்படைத் தொகையோடு உறுதியான சேர்க்கைகள் மற்றும் லாயல்டி சேர்க்கைகளும் இணைந்து வழங்கப்படும். ஒருவேளை காப்பீடாலருக்கு கேன்சர் இதய நோய் சிறுநீரகத் தோல்வி போன்ற காப்பீட்டில் குறிப்பிடப்பட்ட 15 நோய்களுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர தான் இவர் கரெக்ட்!!CSKவின் முக்கிய வீரர் குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்!!

0

ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெறாதது குறித்து கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரவிச்சந்தர் அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்தது. எப்பொழுதும் தமிழ்நாட்டு வீரர்களுக்காக நின்று பேசக்கூடிய கிருஷ்ணமாச்சாரி தற்பொழுது இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியில் இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை என்பது போல பேசியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக, ரவிச்சந்தர் அஸ்வினி சென்னை சூப்பர் கிங்ஸ் அணையிலிருந்து எடுத்துவிட்டால் பரவாயில்லை என்றும் அப்பொழுதுதான் அவருக்கு எந்த நிலையில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பது புரியும் என்றும் தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக 2 போட்டிகளுக்கு அஸ்வினை பிளேயிங் 11 இல் இருந்து வெளியே அமர வைத்தால் தான் நன்றாக விளையாடுவார் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் சங்கர் குறித்து ரசிகர் ஒருவர் இவர் நமக்கு தேவையா ? என்பது போல கேட்ட கேள்விக்கு எதையும் யோசிக்காதவராக, ஆம் மற்ற வீரர்களுக்கு பானங்களை எடுத்துச் செல்வதற்கு அவர் தேவை என நக்கலாக பதில் அளித்து இருக்கிறார். இது தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.