Home Blog Page 324

இலவச ட்ரோன் பயிற்சி முகாம்!! தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டம்!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோராக மாற நினைக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நல்வழியை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி முகாம்கள் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த இலவச ட்ரோன் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலந்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு கலந்து கொள்ளக் கூடியவர்களுக்கு ட்ரோன் சம்பந்தப்பட்ட அனைத்து பயிற்சி வகுப்புகளும் மூன்று நாட்களில் கற்றுக் கொடுக்கப்படும் என்றும் இதற்கான வகுப்பு நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச ட்ரோன் பயிற்சி முகாமில் கற்றுத்தரப்படும் வகுப்புகள் :-

✓ ட்ரோன்களின் அடிப்படைகள்
✓ ட்ரோன் விதிமுறைகள் பற்றிய கண்ணோட்டம்
✓ ட்ரோன்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள்
✓ பராமரிப்பு
✓ அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
✓ சிமுலேட்டர் மற்றும் நேரடி களப் பயிற்சி
✓ ட்ரோன் பாகங்களை இணைப்பது மற்றும் பிரிப்பது
✓ விமான கட்டுப்பாட்டு சென்சார் அளவுத்திருத்தம்
✓ கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு
✓ ACT
✓ ரேடியோ டெலிபோனிக்

விண்ணப்பிக்கும் முறை :-

சுயதொழில் மேற்கொள்வதில் ஆர்வம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வந்து பயிற்சி மேற்கொள்ள கூடியவர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டியுடன் கூடிய அறைகளும் வழங்கப்படுகிறது எனவே அதற்கும் சேர்த்து விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று காணலாம். மேலும், இந்த பயிற்சியில் சேர நினைப்பவர்கள் கீழ்கண்ட முகவரியை அணுகலாம் :-

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
2 இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032

தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.

ஒரு சிரிப்பிற்காக நான் பட்ட பாடு இருக்கே!! இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!!

0

தமிழ் திரையுலகில் படையப்பா திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாது இன்று அறையில் படையப்பா திரைப்படத்திற்கு என ரசிகர் படையும் அதில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலை பின்பற்றி ரசிகர் படையும் இருந்து தான் வருகின்றன.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் இணைந்த நடிக்க 1999 ஆம் ஆண்டு ஏ எம் ரத்னம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளியானது. திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ், வடிவுக்கரசி, ராதாரவி என பல திரை பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். குறிப்பாக இத்திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை கண்டது. இப்படி ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல் ஒன்றில் சிரிப்பிற்காக தான் பட்ட பாடு என்ன என்பதை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் அழகாக விளக்கி இருக்கிறார்.

சுத்தி சுத்தி வந்தீக பாடல் வரிகளின் நடுவே தான் எதிர்பார்த்தது போன்று ஒரு சிரிப்பு வேண்டும் என்பதற்காக பலமுறை பாடகியிடம் சேர்க்கும் படி இயக்குனர் கேஸ் ரவிக்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் என்னால் முடியவில்லை என பாடகி கூறியதற்கு அழகாக பாட மட்டும் முடியும் ஆனால் சிரிக்க முடியாது என்பது என்ன நியாயம் என்பது போல விளையாட்டாக கேட்க பாடகி சிரித்துக்கொண்டே அதற்கு பதில் அளித்திருக்கிறார்.

உடனடியாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் நீங்கள் நேரடியாக பாடலை பாடுங்கள் என பாடகியிடம் கூறிவிட்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களிடம் நீங்கள் அவர்களை விடுங்கள் இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இவர்கள் பேசிய அனைத்தையும் ரெக்கார்ட் செய்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் பாடலை கனக்கச்சிதமாக தயாரித்து அதில் இயக்குனர் எதிர்பார்த்தது போலவே சிரிப்பையும் உள்ளடக்கி இருக்கிறார். அந்த பாடலை கேட்கும் பொழுது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மிகப்பெரிய மாயாஜாலக்காரர் என்றும் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காலேஜ் சேரனும்.. என்ன கோர்ஸ் எடுத்தா நல்ல வேலை கிடைக்கும்னு தெரியலையா!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்!!

0

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல கனவுகளோடு கல்லூரியில் சேரும் பொழுது தாங்கள் சேரக்கூடிய பிரிவுகளில் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என முடிவு செய்து தான் சேருகின்றனர். ஆனால் படித்து முடிக்கும் பொழுது தான் அந்த பட்டப்படிப்புகளுக்கு எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இப்பொழுது 12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்கள் எந்த பிரிவுகளில் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை இங்கு காண்போம்.

அறிவியல் பாடப் பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் :-

✓ M.Sc. டேட்டா சயின்ஸ்
✓ B.Tech/M.Tech in AI
✓ மெஷின் லேர்னிங்
✓ ரோபோட்டிக்ஸ்
✓ பயோடெக்னாலஜி
✓ ஜெனடிக் இன்ஜினியரிங்
✓ கிரீன் எனர்ஜி
✓ சோலார் மற்றும் விண்ட் எனர்ஜி இன்ஜினியரிங்

வணிகவியல் பாடப்பிரிவினை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் :-

✓ CA
✓ CFA
✓ MBA (Finance)
✓ பிளாக்செயின்
✓ கிரிப்டோகரன்சி
✓ மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறைகளில் MBA
✓ சர்வதேச வணிகம்
✓ ஸ்டார்ட்அப்கள்

கலை பாடப்பிரிவினை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் :-

✓ ஃபில்ம் மேக்கிங்
✓ எடிட்டிங்
✓ VFX
✓ AR/VR
✓ கன்டென்ட் கிரியேஷன்
✓ M.A Psychology
✓ HR
✓ கவுன்சிலிங்
✓ சமூகவியல்
✓ கிரியேட்டிவ்
✓ டிஜிட்டல் மீடியா

இந்த துறைகளில் சேர்ந்த தங்களுடைய பட்டப்படிப்புகளை மாணவர்கள் படித்து முடிக்கும் பொழுது அவர்களுக்கான நல்ல எதிர்காலம் அமைய அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. அதிலும் தற்பொழுது AI தொழில் நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மாணவர்கள் அது சார்ந்த துறைகளில் தங்களுடைய கற்றலை செலுத்தும் பொழுது அதற்கான நல்ல பலன் அமையும்.

அதிகரிக்கும் எதிராளிகள்.. எதிர்த்து நிற்கும் திரையுலகம்!! விஜயின் அடுத்த முடிவு என்ன!!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் எம் ஜி ஆர் ஐ தொடர்ந்து விஜயகாந்த அவர்களை தொடர்ந்து தன்னுடைய பெயரையும் அரசியல் பயணத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகிறார். இது அவருக்கான ஆரம்ப கால வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்பது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் தெளிவாக போகிறது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடியவர்கள் சினிமாவில் உள்ள ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு ஓட்டுக்களை அள்ளி குவித்து தங்களுடைய தொண்டர்களாக மாறி விடுவார்கள் என நினைப்பது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இப்படித்தான் எம்ஜிஆரில் தொடங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் சரத்குமார் கமல்ஹாசன் மன்சூர் அலிகான் கர்ணாஸ் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் விஜயகாந்த் என அனைவரும் அரசியலில் நுழைந்தனர். ஆனால் இதில் அனைவராலும் தங்களுடைய பெயரை நிலைநாட்டிச் செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

விஜய் அவர்களுக்கும் தற்பொழுது அப்படித்தான் இருக்கிறது. காரணம், அரசியலில் இவர் நுழைந்ததிலிருந்து எந்த ஒரு கட்சியினரும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக எதிர்த்து குரல் கொடுத்த வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சினிமாவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் கூட பகிரங்கமாக நான் இவருக்குத்தான் துணை நிற்பேன் என வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இங்கேயும் அதற்கு மாறாக நடிகர் வடிவேலு கமலஹாசன் என பலரும் விஜய் அவர்களை எதிர்த்தே வருகின்றனர்.

நடிகர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மக்களை நேரில் சந்தித்து பேசி இருக்கும் நிலையில் எங்கெல்லாம் அவர் சென்று மக்களை சந்திக்கிறாரோ அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடிகர் கமலஹாசன் அவர்களும் செல்வார் என முடிவு செய்யப்பட்டு அதற்கு அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் தன் செயலால் பதிலடி கொடுப்பாரா அல்லது மக்களே பதிலடி கொடுக்கட்டும் என பொறுமையோடு காத்திருப்பாரா? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

0

சிறுதானிய உணவான ராகி அதாவது கேழ்வரகு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த ராகியில் கஞ்சி செய்து குடித்தால் உடல் எடை சீக்கிரமாக குறைந்துவிடும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை கொண்டு சுவையான கஞ்சி செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – ஒரு கப்
2)இந்துப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ராகி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.

**பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு ராகியை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வைக்க வேண்டும்.அதன் பிறகு இதை பரப்பி நன்றாக காய வைக்க வேண்டும்.பின்னர் இதனை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

**அதன் பிறகு ராகியை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இதனை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த ராகி மாவு மூன்று தேக்கரண்டி போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.

**பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து கரைத்த ராகியை அதில் ஊற்றி குறைவான தீயில் கஞ்சி காய்ச்ச வேண்டும்.

**பிறகு அதில் சிட்டிகை அளவு இந்துப்பு போட்டு கலந்து காலை நேரத்தில் குடித்தால் உடலில் தேங்கிய தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

**ராகியில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.உடலுக்கு தேவையான கால்சியம் சத்து,இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் ராகியில் நிறைந்திருக்கிறது.

அடடே இது தெரியுமா? மோர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

0

வெயில் காலத்தில் உடல் சூடு பிரச்சனை ஏற்படுவது இயல்பான விஷயமாக உள்ளது.கடுமையான வெயிலால் உடல் சூடாகி தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிறு எரிச்சல்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் அதிகாமாக ஏற்படுகிறது.

இந்த வெயில் கால பாதிப்பை ஒரு கப் மோர் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.இந்த மோரில் கால்சியம்,நல்ல கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த மோரில் வெந்தயம்,கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து குடித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மோர் – ஒரு கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் அரை கப் கெட்டி தயிர் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த மோரை கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த வெந்தயப் பொடியை மோரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.மோரில் இருக்கின்ற குளிர்ச்சி உடல் சூட்டை குறைக்கின்றது.மோரில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தினமும் மோர் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.மோர் குடிப்பதால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல்,வாயுத் தொல்லை குணமாக மோரில் பெருங்காயத் தூள் சேர்த்து குடிக்கலாம்.

வெயில் காலத்தில் உடலில் நீரிழப்பு குறையாமல் இருக்க மோரில் வெந்தயம் போட்டு சாப்பிடலாம்.மோரில் கற்றாழை ஜெல் கலந்து குடித்தால் அல்சர் புண்கள் குணமாகும்.உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க தினமும் ஒரு கிளாஸ் மோர் சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

0

[4:04 pm, 4/4/2025] 🖊️: உலர் பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பேரிச்சம் பழம்தான்.இது பாலைவன பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.இந்த பேரிச்சம் பழத்தில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரிச்சம் பழம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு உலர் பழமாகும்.

இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகமாக நாம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டுவிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கி இரத்தம் தூய்மையாக பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.மூளையின் செயல்திறன் மேம்பட தினமும் பேரிச்சம் பழ பால் பருகலாம்.

கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைக்க பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.பேரிச்சம் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் கே குழந்தைகளின் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.பேரிச்சம் பழத்தை அரைத்து சூடான பசும் பாலில் கலந்து குடித்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ளலாம்.

மூட்டு பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்க பேரிச்சம் பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிக்கலாம்.தசைகள் வலிமைபெற பேரிச்சம் பழத்தை அரைத்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

முதுகு வலி,இடுப்பு வலி,கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு பேரிச்சம் பழம் சிறந்த தீர்வாக இருக்கிறது.இரத்த சோகை குணமாக பேரிச்சம் பழம் சாப்பிடலாம்.

உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

0

நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இரத்தம் இருக்கின்றது.இந்த இரத்தம் குறைந்தால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைதல்,உடல் சோர்வு,மயக்கம்,உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே உடலில் இரத்தம் அதிகரிக்க உலர் திராட்சை,தேன் போன்றவற்றை கொண்டு பானம் செய்து குடிக்கலாம்.

இரத்தம் ஊற குடிக்க வேண்டிய பானங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உலர் திராட்சை – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் பத்து கருப்பு உலர் திராட்சை பழத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.

2.அடுத்து மிக்சர் ஜாரில் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை போட்டு ஊறவைத்த தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த உலர் திராட்சை பேஸ்ட்டில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)கருப்பு உலர் திராட்சை – 10
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு கிண்ணத்தில் பத்து கருப்பு உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி மண் தூசி இன்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு மிக்சர் ஜாரில் பீட்ரூட் துண்டுகள் மற்றும் உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் சேர்த்து பருகினால் இரத்தம் ஊறும்.

அதேபோல் ஆப்பிள்,பீட்ரூட் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால் உடலில் வேகமாக இரத்தம் ஊறும்.இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஊரும்.

மாதுளம் பழச்சாறு,அத்திப்பழ சாறு செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

0

உங்களில் பலர் குடல் புண் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த குடல் புண் பிரச்சனை குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள அற்புத வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)ஓமத் தூள் – ஒரு தேக்கரண்டி
4)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

ஒரு கண்ணாடி கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இந்த இரண்டு பொடியையும் மோரில் மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர் – ஒரு கிளாஸ்
2)சுண்டைக்காய் வற்றல் – ஒரு தேக்கரண்டி
3)மணத்தக்காளி வற்றல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பசுந்தயிரில் மோர் தயாரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சுண்டைகாய்வற்றல் மற்றும் ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி வற்றலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பவுடரை அரைத்த மோரில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.இந்த மோரை தினமும் குடித்து வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர் – ஒரு கிளாஸ்
2)மணத்தக்காளி இலை பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு மணத்தக்காளி இலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த மோரை தினமும் குடித்து வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

0

உங்களுக்கு நரம்பு பிரச்சனைகள் இருந்தால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.நரம்புகளில் அடிபடுதல்,வயது மூப்பு,குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வை பின்பற்றலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கேழ்வரகு – 50 கிராம்
2)வெந்தயம் – 20 கிராம்
3)பச்சை பயறு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் கேழ்வரகு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன்
பிறகு 20 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் பச்சை பயறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இவை மூன்றையும் கிண்ணத்தில் போட்டு ஊறவைத்து காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வேண்டும்.பின்னர் இதை நிழலில் காய வைத்து பவுடராக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பவுடர் 10 கிராம் அளவிற்கு போட்டு சிறிது நேரம் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடித்து குடித்து வந்தால் நரம்புகள் பலம் அதிகரிக்கும்.நரம்பு இரும்பு போன்று வலிமைபெற,நரம்பு தளர்ச்சி,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பானத்தை பருக வேண்டும்.கேழ்வரகிற்கு பதில் கம்பு,சோளம் போன்ற சிறு தானியங்களை பயன்படுத்தலாம்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை அதில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இந்த இஞ்சி பானத்தை பருக வேண்டும்.இந்த பானம் நரம்பு வலிமையை அதிகரிக்க செய்யும்.