Home Blog Page 359

மனோஜுக்கு அஞ்சலி செலுத்த நடந்தே போன விஜய்!.. பின்னணி இதுதான்!…

0

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை.

தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் நடித்தார். துவக்கத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்த மனோஜ் ஒரு கட்டத்தில் கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார்.

அப்பா பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தையும் மனோஜ் இயக்கினார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த சில வருடங்களில் சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் மனோஜ் பார்த்து வந்தார். அதேநேரம், 2022ம் வருடத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

manoj

அந்நிலையில்தான், நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக சொல்லப்படும் நிலையில், அவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனோஜின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை சூர்யா உள்ளிட்ட சிலர் சென்றதையடுத்து விஜய் அங்கே சென்றார். மனோஜின் வீடு நீலாங்கரையில் விஜய் தங்கியுள்ள வீட்டின் அருகேதான் இருக்கிறது. எனவே, நடந்து சென்றே அஞ்சலி செலுத்திய விஜய் அங்கு சோகமாக அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

என்னை தூக்க எல்லா சதியும் நடக்குது: சவுக்கு சங்கர் சம்பவத்தில் செல்வப்பெருந்தகை ஸ்டேட்மென்ட்!

0

சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு வசித்து வந்த யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு, மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. வீட்டு உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி, குறிப்பாக டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளனர். அப்போது வீட்டில் சங்கரின் 68 வயதான தாய் கமலா மட்டுமே இருந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு சங்கரின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், இந்தியாவில் இல்லாத ஒரு அற்புதமான திட்டம். இதில் தவறு இருந்தால், உரிய அதிகாரியிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்துக் கொண்டு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம். ஆனால், பயனாளிகளை அவமதிக்கும் விதமாக பேச முடியாது.

யு-டியூபர் சவுக்கு சங்கர், அந்த பயனாளிகளை ‘குடித்து விட்டு படுத்துக் கொள்கின்றனர்’, ‘இவர்கள் தகுதியற்றவர்கள்’, ‘மலம் அள்ளுபவர்கள்’ என அவமதித்து பேசியுள்ளார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தப்பிக்க முடியாது. மேலும், அவரது வீட்டில் மலத்தைக் கரைத்த தெளித்தது தொடர்பாக, இதில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தொடர்பு இருந்ததா என கேட்டுக் கொள்ளலாம்.

சங்கரின் வீட்டில் நடந்த செயலுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் ஆதரவு தரவில்லை. இது திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தத் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதற்காகவே சவுக்கு சங்கர், திட்டமிட்டு இந்த பரப்புரையை மேற்கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி இப்படியான செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

0

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது.

‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் அமித்ஷாவின் வீட்டிற்கு சென்றார் பழனிச்சாமி. அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

eps

டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிமுக அலுவகத்திற்கு செல்ல இன்னோவா கார், அமித்ஷாவை சந்திக்க செல்லும்போது ஆடி கார், இரண்டு மணி நேர சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பெண்ட்லி காரை பயன்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு சீக்ரெட்டாக எதற்காக சந்திப்பை நடத்தினார் என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இந்த முறை பாஜகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த கஞ்சி குடித்தால்.. உடலில் படிந்த கெட்ட கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

0

சம்பா கோதுமை ரவையில் கஞ்சி செய்து காலை நேர உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள்,கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும்.

உடலில் கெட்ட கொழுப்பு குவிய காரணங்கள்:

**கொழுப்பு உணவுகள்
**ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
**சோம்பல் வாழ்க்கை முறை
**உடல் நலக் கோளாறு

தேவையான பொருட்கள்:-

1)சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)நெய் – இரண்டு தேக்கரண்டி
5)கடுகு – ஒரு தேக்கரண்டி
6)வெங்காயம் – ஒன்று
7)பச்சை மிளகாய் – இரண்டு
8)தக்காளி – ஒன்று
9)கேரட் – ஒன்று
10)பீன்ஸ் – ஐந்து
11)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
13)பச்சை பட்டாணி – இரண்டு தேக்கரண்டி’
14)உப்பு – தேவையான அளவு
15)தண்ணீர் – 6 கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அடுப்பில் குக்கர் ஒன்றை வைக்க வேண்டும்.அதில் சிறிது நெய் ஊற்றி கோதுமை சம்பா ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு அதே குக்கரில் நெய் ஊற்றி கடலை பருப்பு,சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.

2.அதன் பிறகு 6 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் சிறிது கொதித்து வந்ததும் வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறிவிட வேண்டும்.

3.பிறகு குக்கர் மூடிவிட்டு இரண்டு விசில் வரும் வரும் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.விசில் நின்ற பின்னர் ரவையை கிளறிவிட வேண்டும்.

4.அடுத்து கேரட்,பீன்ஸ்,தக்காளி,பச்சை மிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிட வேண்டும்.

5.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.

6.அதன் பிறகு உப்பு,மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள ரவையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

7.பிறகு வாசனைக்காக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.இந்த சம்பா கோதுமை ரவை கஞ்சியை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள் இந்த கஞ்சியை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வரலாம்.

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

0

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புச்சத்து அவசியமானதாக இருக்கிறது.உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை கொழுப்பு கொடுக்கிறது.இருப்பினும் இந்த கொழுப்பின் அளவு அதிகரித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த கெட்ட கொலஸ்ட்ரால் கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது.கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி – 50 கிராம்
2)தண்ணீர் – ஒன்றரை கப்
3)கேரட் – ஒன்று
4)பூண்டு பல் – நான்கு
5)சீரகம் – ஒரு தேக்கரண்டி
6)இஞ்சி – ஒரு துண்டு
7)மிளகு – கால் தேக்கரண்டி
8)எண்ணெய் – தேவையான அளவு
9)வெங்காயம் – ஒன்று
10)பீன்ஸ் – நான்கு
11)கொத்தமல்லி தழை – சிறிதளவு
12)உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 50 கிராம் அளவிற்கு பார்லி அரிசி போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம்,அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

2.இவற்றை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கேரட்,நான்கு பீன்ஸ்,ஒரு வெங்காயம்,ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கு பல் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

3.அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு வதக்க வேண்டும்.

4.அதன் பிறகு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு அரைத்த பார்லியை அதில் கொட்டி கிளறிவிட வேண்டும்.

5.அதன் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த பார்லி கஞ்சி குடிப்பதால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த பார்லி கஞ்சி குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரி பிஞ்சு – ஒரு கப்
2)கொத்தமல்லி தழை – சிறிதளவு
3)மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் வெள்ளரி பிஞ்சுகளை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

2.அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டு தொடர்ந்த 48 நாட்கள் சாப்பிட்டால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.

சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!

0

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்,சரும பிரச்சனைகளை தவிர்க்கவும் இங்கு தரப்பட்டுள்ள தீர்வை பின்பற்றுங்கள்.

டிப்ஸ் 01:

இளநீர்

கோடை காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

டிப்ஸ் 02:

எலுமிச்சை பானம்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து தேன் கலந்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

டிப்ஸ் 03:

கற்றாழை ஜூஸ்

குளிர்ச்சி நிறைந்த கற்றாழையின் ஜெல்லை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கற்றாழை ஜூஸ் சரி செய்யும்.

டிப்ஸ் 04:

மோர்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மோரை தினமும் பருகி வந்தால் உடலில் நீரிழப்பு அபாயம் குறையும்.கோடை வெயிலை தணிக்க மோர் சிறந்த பானமாக திகழ்கிறது.

டிப்ஸ் 05:

மூலிகை ட்ரிங்க்

புதினா,துளசி போன்ற குளிர்ச்சி நிறைந்த மூலிகை இலைகளை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து தேன் கலந்து பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

டிப்ஸ் 06:

வெள்ளரி ஜூஸ்

பழுத்த வெள்ளரியில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடல் வறட்சியாவது குறையும்.இந்த வெள்ளரி ஜூஸ் சருமப் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.

டிப்ஸ் 07:

தர்பூசணி ஜூஸ்

தினமும் ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் செய்து பருகி வந்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.உடலில் ஈரப்பதம் அதிகரிக்க இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.அதேபோல் பாதாம் பிசின்,நன்னாரி எசன்ஸ் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வந்தால் கோடை காலத்தில் சருமப் பிரச்சனைகள் வராது.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் சருமத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.முலாம் பழம் சாறு,நுங்கு சர்பத்,தேங்காய் நீர் போன்றவற்றை பருகினால் கோடை கால சருமப் பிரச்சனைகள் குணமாகும்.

இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!

0

நறுமணம் நிறைந்த புதினாவில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.பசட்னி,துவையல்,சாதம் என்று புதினாவின் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் ருசியாக இருக்கும்.புதினாவில் டீ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

இயற்கையாக குளிர்ச்சி நிறைந்து காணப்படும் புதினா தலை முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.புதினா இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

தினமும் காலை நேரத்தில் புதினா இலைகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புதினா கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

**மெக்னீசியம் **போலேட் **இரும்புச்சத்து **வைட்டமின் சி **ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் **வைட்டமின் ஏ

புதினா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1)வாய் துர்நாற்றப் பிரச்சனை சரியாக வெறும் வயிற்றில் புதினா சாப்பிடலாம்.புதினாவை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் சொத்தை துர்நாற்றம் கட்டுப்படும்.

2)அஜீரணக் கோளாறு நீங்க காலையில் வெறும் வயிற்றில் இரண்டு புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.

3)ஆஸ்துமா பிரச்சனை சரியாக புதினா இலைகளை கொதிக்க வைத்து பருகலாம்.தோல் அலர்ஜி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

4)உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க புதினா இலையை சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புதினா டீ செய்து பருகலாம்.

5)காய்ச்சல்,தொண்டை பிரச்சனை நீங்க புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.ஜலதோஷ பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இது திகழ்கின்றது.

6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க புதினா பானம் செய்து பருகலாம்.புதினா இலைகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும்.

7)தலைவலியை போக்க புதினா இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள்.உடல் சூட்டை தணிக்க புதினா ஜூஸ் செய்து குடிக்கலாம்.

8)மன அழுத்தம் குறைய புதினா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.புதினா இலைகளை சாப்பிடுவதால் மன அமைதி பெருகும்.

9)குமட்டல் பிரச்சனை சரியாக புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.வாந்தியை கட்டுப்படுத்த புதினா லெமன் கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

10)உடல் சோர்வு பிரச்சனை உள்ளவர்கள் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள புதினா ஜூஸ் செய்து பருகலாம்.

அடிக்கடி வயிறு வலிக்குதா? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை ஊற்றி குடித்தால் வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

0

இந்த உலகில் தேனை காட்டிலும் சிறந்த மருந்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இயற்கை வழங்கும் பொருட்களில் ஒன்றான இனிப்பு சுவை மிகுந்த தேன் வயிற்றுப் பிரச்சனைகளை காக்கும் நண்பனாக திகழ்கிறது.

தேனில் புரக்டோஸ்,நீர்,குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த தேன் சித்தா,ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

தேன் மகத்துவம்:

வயிற்று வலி

ஒரு கிளாஸ் வெது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி பிரச்சனை சரியாகும்.

குடல் புண்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேன் பருகினால் குடல்புண் பிரச்சனை சரியாகும்.

செரிமானப் பிரச்சனை

ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு நறுக்கி வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

வயிறு பிரச்சனை

மிளகு விதைகளை வறுத்து பொடித்து தேன் கலந்து காலை,மாலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

வறட்டு இருமல்

பெரிய நெல்லிக்காயை நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.

நரம்பு தளர்ச்சி

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

வயிற்றுப்போக்கு

அகத்தி கீரையை ஆவியில் வேகவைத்து அரைத்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,அல்சர் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

சளி பிரச்சனை

துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் சளி பிரச்சனை நீங்கும்.

“உன் வாயில் வசம்பு வச்சி தேய்க்க”… என்ற சொல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா!!

0

கிராமப்புறங்களில் பல்வேறு விஷயங்களை பழமொழியோடு ஒப்பிட்டு பேசுவது அதிகம்.இதில் அபசகுனமாக வார்த்தைகளை பேசினால் உன் வாயில் வசம்பு வைத்து தேய்க்க என்று திட்டுவார்கள்.இந்த வார்த்தைக்கு பின்னால் ஆச்சர்யப்படும் காரணம் இருக்கிறது.பேசும் பொழுது வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும்.தவறான மற்றும் அவதூறான வார்த்தைகள் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும்.

இப்படி பேசுபவர்கள் வாயில் வசம்பு வைத்தாலாவது பேச்சு ஒழுங்குபடுமா என்ற எதிர்பார்ப்பிற்கு தான் இந்த பழமொழி சொல்லப்படுகிறது.வசம்பு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள்.இந்த வசம்பை பிள்ளை வளர்ப்பான் என்றும் கூறுவார்கள்.

குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வர வாயில் இந்த வசம்பு வைப்பார்கள்.வசம்பை தேய்த்து வாயில் வைத்தால் குழந்தைகள் திக்கி பேசாமல் இருப்பார்கள்.பிறந்த குழந்தைகள் கையில் வசம்பு கட்டிவிடுவதை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றி வருகின்றோம்.

வசம்பை பிள்ளைகள் வாயில் வைத்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.வசம்பு பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் வசம்பை பொடித்து தேனில் குழைத்து சாப்பிடலாம்.

வாய் துர்நாற்றம் நீங்க வசம்பு பொடி கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.வயிறுக் கோளாறு நீங்க வசம்பு பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம்.இருமல் பிரச்சனை நீங்க வசம்பை பொடித்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

வயிறு உப்பச பிரச்சனை இருப்பவர்கள் வசம்பை பொடித்து இதனுடன் சுக்கு தூள் மற்றும் தண்ணீர் கலந்து வயிற்றின் மீது பூச வேண்டும்.காயங்கள் மீது வசம்பு தூளை தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தண்ணீரில் வசம்பு துண்டு சேர்த்து ஒரு மணி ஊறவைத்த பிறகு அந்நீரை கொண்டு குழந்தைகளை குளிப்பாட்டினால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படாமல் இருக்கும்.

வசம்பு துண்டை நெருப்பில் சுட்டு உரைத்து குழந்தைகளின் வயிற்றில் பூசினால் நோய் பாதிப்பு அண்டாது.பொன்னுக்கு வீங்கி பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சள் மற்றும் வசம்பு துண்டை அரைத்து கன்னத்தில் பூசினால் அவை சீக்கிரம் சரியாகும்.நெஞ்சு சளியை கரைத்து தள்ள வசம்பு பானம் செய்து பருகலாம்.

மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

0

அரிசி வகைகளில் பார்லி ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாக எடுத்துக் கொள்கின்றனர்.பார்லி அரிசியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

இந்த பார்லியில் கஞ்சி செய்து பருகினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.கஞ்சி செய்து குடிக்க நேரம் இல்லாதவர்கள் பார்லி ஊறவைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துவிடும்.

பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:

**எடை குறைக்க விருப்பினால் தினமும் காலையில் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிக்கலாம்.பார்லி நீர் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

**செரிமானப் பிரச்சனை நீங்க பார்லி நீர் பருகலாம்.செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த பார்லி நீர் உதவுகிறது.

**உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக தினமும் ஒரு கப் பார்லி நீர் பருகலாம்.இதய ஆரோக்கியத்தை காக்க பார்லி நீர் குடிக்கலாம்.

**உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க பார்லி நீர் பருக வேண்டும்.கோடை காலத்தில் பார்லி நீர் பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி தண்ணீர் பருகலாம்.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த பார்லி நீர் செய்து பருகி வரலாம்.

**அளவிற்கு அதிகமாக பசி எடுக்கிறது என்றால் அதை கட்டுப்படுத்த பார்லி நீர் செய்து பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பார்லி நீர் குடிக்கலாம்.

பார்லி நீர் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பார்லி அரிசி சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வைக்க வேண்டும்.

மறுநாள் பார்லி அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து பருகலாம்.