Home Blog Page 370

கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

0

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுரைக்கரையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்து, சீனியர் மாணவர் ஒருவர் பணத்தை திருடியதாக சொல்லப்படுகிறது.

இதனை, ஜூனியர் மாணவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இதையடுத்து, பணத்தை திருடியதாக கூறப்படும் மாணவனை அறைக்குள் பூட்டி வைத்து முட்டி போட வைத்து பெல்டால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அந்த மாணவர் வலியால் துடித்தபோதும், கையை மேல் தூக்க சொல்லி அந்த மாணவனை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய 13 மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களிடம், தங்களது பெற்றோர்களை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

’அரசுப் பள்ளிகளில் AI பாடத்திட்டம் அறிமுகம்’..!! ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

0

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தால், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுஒருபுறம் இருந்தாலும், வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இந்நிலையில் தான், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய அவர், ”அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடங்கள் கொண்டு வரப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பாடத்திட்டங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படுகிறது. மேலும், இதற்காக 62 பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏஐ தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

0

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் தனி அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு பணம் வராது என கூறப்படுகிறது. இந்த அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருடன் அரசு கள அலுவலர்கள் அல்லது இ-சேவை மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 9,59,25,587 பேரும், தமிழ்நாட்டில் 21,94,651 பேரும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

எங்களை பார்த்தா ஏளனமா இருக்கா!.. உங்களுக்கு இருக்கு!.. நிர்மலா சீதாராமனை வெளுத்த கனிமொழி!…

0

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு சரியாக கொடுப்பதில்லை. தமிழகத்தில் பாஜகவில் நுழைய முடியவில்லை என்பதே அதற்கு காரணமாக இருக்கிறது. பல தேர்தல்களிலும் போட்டியிட்டும் கணிசமான வாக்குகளை கூட பாஜகவால் பெறமுடியவில்லை. அதோடு, பாஜகவின் திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த கோபத்தில்தான் நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கடந்த 4 வருடங்களாக திமுக அரசு விமர்சித்து வருகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் அதிக அளவிலான ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால், பாஜக அரசு நிதியை தர மறுக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

Union Finance Minister Nirmala Sitharaman explains about 'CA' exam during Pongal holiday
Union Finance Minister Nirmala Sitharaman explains about ‘CA’ exam during Pongal holiday

அதிலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்தின் கல்வி நிதியை கொடுப்போம் என மத்திய கல்வி அமைச்சர் சொன்னது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு, தமிழக எம்.பி.க்கள் மோசமானவர்கள் என அவர் பாராளுமன்றத்தில் பேச கடுமையான எதிர்ப்பை சந்தித்து பின் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த ஒருவிழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். அதில் ரூ.1-க்கு இவ்வளவு தருகிறீர்கள்’ என இங்கே சிலர் வாதம் செய்கிறார்கள். இந்த கணக்கு எங்கிருந்து வருகிறது என எனக்கு புரியவில்லை. இவ்வளவு பணம் கொடுக்கிறோம். நீங்கள் என்ன தருகிறீர்கள் என்ற இவர்களின் ஜனரஞ்சகமான வாதமே தவறு. இவர்கள் மிகவும் குதர்க்கமாக பேசுகிறார்கள்.

ஏளனமாக சொல்ல வேண்டும் எனில் சென்னை, கோவை மக்கள்தான் தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்துகிறார்கள். அரியலூர் போன்ற குறைவான வரி செலுத்தும் மாவட்டங்கள் ‘எங்களுக்கு சென்ன செய்கிறீர்கள்?’ என கேட்கும்போது, சென்னை மக்கள் ‘நாங்கள்தான் அதிக வரி கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு உதவ வேண்டாம்’ என சொல்வது போல இருக்கிறது. ஆனால், அரசுக்கு அப்படியொரு திட்டமோ கொள்கையோ இல்லை’ என பேசியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்ந்து, மத்திய அமைச்சர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ‘நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

சென்னை, கோவை மக்கள்தான் அதிக வரி கட்டுறாங்க!.. நக்கலடித்த நிர்மலா சீதாராமன்!..

0

கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டை திமுக கடந்த 4 வருடங்களாக சொல்லி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை. இதனால், தேர்தலில் போட்டியிட்டு அவர்களால் வெல்ல முடியவில்லை. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் அதிக அளவிலான ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால், பாஜக அரசு நிதியை தர மறுக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்தார்.

அதிலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்தின் கல்வி நிதியை கொடுப்போம் என மத்திய கல்வி அமைச்சர் சொன்னது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு, தமிழக எம்.பி.க்கள் மோசமானவர்கள் என அவர் பாராளுமன்றத்தில் பேச கடுமையான எதிர்ப்பை சந்தித்து பின் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த ஒருவிழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். அதில் ரூ.1-க்கு இவ்வளவு தருகிறீர்கள்’ என இங்கே சிலர் வாதம் செய்கிறார்கள். இந்த கணக்கு எங்கிருந்து வருகிறது என எனக்கு புரியவில்லை. இவ்வளவு பணம் கொடுக்கிறோம். நீங்கள் என்ன தருகிறீர்கள் என்ற இவர்களின் ஜனரஞ்சகமான வாதமே தவறு. இவர்கள் மிகவும் குதர்க்கமாக பேசுகிறார்கள்.

ஏளனமாக சொல்ல வேண்டும் எனில் சென்னை, கோவை மக்கள்தான் தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்துகிறார்கள். அரியலூர் போன்ற குறைவான வரி செலுத்தும் மாவட்டங்கள் ‘எங்களுக்கு சென்ன செய்கிறீர்கள்?’ என கேட்கும்போது, சென்னை மக்கள் ‘நாங்கள்தான் அதிக வரி கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு உதவ வேண்டாம்’ என சொல்வது போல இருக்கிறது. ஆனால், அரசுக்கு அப்படியொரு திட்டமோ கொள்கையோ இல்லை’ என பேசியிருக்கிறார்.

வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த விஷயம் தெரிந்தால் அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள்!!

0

நமது சமையலில் பல்வேறு காய்கறிகளை பயன்படுத்துகின்றோம்.சில காய்கறிகள் உங்களுக்கு பிடித்தமானவையாக இருக்கலாம்.சிலவற்றை பிடிக்காத காய்கறி லிஸ்டில் சேர்த்துவிடுவீர்கள்.இதில் வெண்டைக்காயும் அடங்கும்.

வெண்டைக்காய் மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் வழுவழுப்பு தன்மை கொண்டவை என்பதால் இதை சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை.ஆனால் இந்த வெண்டைக்காயில் குழம்பு,வத்தக்குழம்பு,பொரியல்,சில்லி,கிரேவி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

வெண்டைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து,கால்சியம்,வைட்டமின்கள்,புரதம்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் நிறைந்திருக்கிறது.

வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.உடல் எடையை குறைக்க வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் ஊறவைத்து பருகலாம்.வெண்டையில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

வெண்டைக்காயில் வைட்டமின் ஏ நிறைந்திருகிறது.அதேபோல் பீட்டா கரோட்டின் என்ற கண் பார்வையை கூர்மையாக்கும் ஊட்டச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை காயை உணவாக சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் உணவை உட்கொள்ளலாம்.கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க வெண்டைக்காய் உட்கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வெண்டைக்காய் உதவுகிறது.இரண்டு வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

மூளை ஆரோக்கிய திறன் மேம்பட வெண்டைக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக வெண்டைக்காய் உட்கொள்ளலாம்.ஆஸ்துமா பாதிப்பிற்கு அருமருந்தாக வெண்டைக்காய் திகழ்கிறது.பச்சை வெண்டைக்காயை காலை நேரத்தில் சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

ஒருபக்க தலைவலியை விரட்ட மருத்துவரின் சிம்பிள் டிப்ஸ்!! பயன்படுத்தி ரிலீஃப் ஆகுங்கள்!!

0

உங்களில் சிலர் ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டிருக்கிறது.இதை பின்பற்றி ஒற்றைத் தலைவலியை விரட்டுங்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்:

1)மன அழுத்தம்
2)தூக்கமின்மை
3)மதுப் பழக்கம்
4)மோசமான வாழ்க்கை முறை

ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:-

1)ஒருபக்கமாக தலைவலி வருதல்
2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
3)மங்கலான கண் பார்வை
4)மலச்சிக்கல்
5)மனநிலை மாற்றம்
6)அதிக உடல் சோர்வு
7)எரிச்சல் உணர்வு
8)பேசுவதில் சிரமம் ஏற்படுதல்
9)பதட்டம்

ஒற்றைத் தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது என்றால் நீங்கள் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்.தண்ணீர் பருகுவதன் மூலம் ஒற்றைத் தலைவலி பாதிப்பை முழுமையாக சரி செய்து கொள்ள முடியும்.

ஒற்றைத் தலைவலி பாதிப்பை அடிக்கடி சந்திப்பவர்கள் நன்றாக உறங்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன?

காஃபின் நிறைந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒற்றைத் தலைவலியை குணமாக்கும் சித்த வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

1)சுக்கு
2)இஞ்சி
3)அதிமதுரம்

செய்முறை விளக்கம்:

ஒரு பீஸ் மற்றும் இஞ்சி துண்டை லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அதன் பின்னர் இடித்த சுக்கு,இஞ்சியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் சிறிது அதிமதுரத்தை அதில் போட்டு கொதிக்க வைத்து வடித்து பருகினால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

நீங்கள் அலுமினியம் மற்றும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

0

நாம் தினமும் சமையல் செய்ய பலவகை பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.குறிப்பாக அலுமியம்,நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.முன்பெல்லாம் இரும்பு பாத்திரம் மண் பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது எளிதில் சமையல் ஆகக் கூடிய மற்றும் அழகான பாத்திரங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று கருதும் நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆரோக்கியமானதா என்று தெரிந்து கொள்வதில்லை.தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கின்றது.

நாம் ஆரோக்கியமான உணவுகளை சமைத்தாலும் பாத்திரத்தின் தன்மையால் அவை விஷ உணவாக மாறிவிடுகிறது.இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடத்தில் இல்லாதது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.அலுமியம் பாத்திரம் இல்லாதே வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.சாதம்,குழம்பு,பொரியல் போன்ற உணவுகளை தயாரிக்க பெரும்பாலும் அலுமினியம் பாத்திரங்களே பயன்படுத்தப்படுகிறது.பால் காய்ச்ச,டீ வைக்க என்று அலுமிய பாத்திர பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறவருகிறது.

அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் நேரம் மிச்சமாகும் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை சேர்த்த உணவுகளை சமைக்கும் பொழுது உணவு விஷமாக மாறுகிறது.இந்த உணவுகளை உட்கொண்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

அலுமினியத்திற்கு அடுத்து நான் ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் பாதிப்பு வரக் கூடும்.நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மூளை கடுமையான சேதத்தை சந்திக்கும்.

சிலர் செராமிக்,எவர் சில்வர்,இரும்பு,செம்பு போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர்.நான்ஸ்டிக்,அலுமினியம் போன்ற ஆபத்தான பாத்திரங்களை ஒப்பிடுகையில் இதுபோன்ற பாத்திரங்கள் குறைவான ஆபத்தையே வெளிப்படுத்தும்.உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாத்திரங்களை தவிர்த்துவிட்டு மண் பாத்திரம்,இரும்பு போன்ற நல்ல பாத்திரங்களை தேர்வு செய்து பயன்படுத்த தொடங்குங்கள்.

கொளுத்தும் வெயிலிலும் மூக்கு சளி ஒழுகுதா? சளியை ஸ்டாப் செய்யும் யூஸ்புல் டிப்ஸ்!!

0

மழை மற்றும் பனி காலத்தில் சளி பிடிப்பது இயல்பான விஷயம்தான்.ஆனால் கோடை காலத்தில் சளி பிடிக்கிறது என்றால் காலநிலை மாற்றம்தான் காரணம்.கோடை காலத்தில் தொண்டை கரகரப்பு,சளி ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகிறது.இதற்கு காரணம் தட்பவெப்பநிலை தான் காரணம்.

கோடை வெயிலை தணிக்க சிலர் ஐஸ்க்ரீம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனாலும் சளி,தொண்டைகரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த கோடை கால சளி பாதிப்பை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

சளி அறிகுறிகள்:

1)இருமல்
2)தலைவலி
3)தொண்டை வலி
4)தொண்டை கரகரப்பு
5)உடல் சோர்வு
6)மூக்கடைப்பு

சளி உருவாக காரணங்கள்:

1)பருவநிலை மாற்றம்
2)பாக்டீரியா தொற்று
3ஐஸ்கீரிம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுதல்

கோடை கால சளியை குணப்படுத்தும் வழிமுறைகள்:

**உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

**நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

**குடிப்பதற்கும்,குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.ஐஸ்க்ரீம,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**சளி,இருமல் தொற்று இருப்பவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.வெளியில் சென்று வந்தால் கை,கால் மற்றும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.இதுபோன்ற ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்றினால் கோடை கால நோய் தொற்றில் இருந்து தப்பித்துவிடலாம்.

அடிக்கடி பூரி சாப்பிடுறீங்களா? அப்போ இந்த அலார்ட் உங்களுக்கானது!! உடனே செக் பண்ணுங்க!!

0

நம் அனைவருக்கும் பூரி விருப்ப உணவாக இருக்கிறது.பூரி வேண்டாமென்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.மைதா,கோதுமை போன்ற மாவில் இருந்து பூரி தயாரிக்கப்படுகிறது.பூரி மிகவும் ருசியான உணவுகள் பட்டியலில் டாப் இடத்தை வகிக்கிறது.

சிலர் பூரி உணவு என்றால் விரும்பி அதிகமாக சாப்பிடுவார்கள்.எத்தனை பூரி சாப்பிட்டோம் என்ற கணக்கு இல்லாமல் பூரியை உள்ளே தள்ளுவார்கள்.கோதுமை,மைதா எந்த மாவில் தயாரித்த பூரியாக இருந்தாலும் அவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

பூரி எண்ணெய் உணவு என்பதால் அதை குறைவான அளவே சாப்பிட வேண்டும்.அதிகமாக உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும்.பூரியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மைதா பூரியை சாப்பிட்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை அதிகமாக ஏற்படும்.நீங்கள் அடிக்கடி பூரி உணவை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் அதிகரித்து நோய் பாதிப்புகள் அதிகரித்துவிடும்.எண்ணெய் உணவான பூரியை அதிகமாக சாப்பிட்டால் கடுமையான அஜீரணக் கோளாறு ஏற்படும்.

பூரியுடன் உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவது பலரது விருப்பமான இருக்கிறது.ஆனால் இவற்றை அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பசம்,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.இரவு நேரத்தில் பூரி உணவை சாப்பிட்டால் தூக்கமின்மை,மாரடைப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வரும்.பூரியில் உள்ள எண்ணெய் வயிற்றில் கெட்ட கொழுப்பை அதிகரித்து தொப்பையை உருவாக்கிவிடும்.

அதேபோல் பலமுறை பயன்படுத்திய எண்ணையில் பூரி செய்து சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.இது உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பூரி போன்ற எண்ணெய் உணவுகளை அடிக்கடி செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பூரிக்கு பதில் சப்பாத்தி,கோதுமை தோசை போன்றவை செய்து சாப்பிடலாம்.