Home Blog Page 377

திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!

0

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் மீட்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை உலக தமிழாராய்ச்சி மையத்திற்கு தமிழாக்கம் செய்வதற்காகவும் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை இப்பொழுது இருக்கக்கூடிய தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்த அதனை புத்தகங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திருக்கோவில்கள் பேரரசர்களால் நமக்கு கொடுத்து செல்லப்பட்ட பரிசுகள் என்றும் அவற்றின் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை பேணி காத்தல் தமிழர்களின் உடைய பொறுப்பு என்றும் தெரிவித்ததோடு இந்த ஓலைச்சுவடிகளை நூல்களாக மாற்றுவதன் மூலம் எதிர்கால பிள்ளைகள் நம்முடைய பேரரசர்கள் பற்றியும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்வதற்கு எளிமையாக அமையும் என்று உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பு :-

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 979 திருக்கோவில்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகவும் அதில் தற்பொழுது வரை 31 கோவில்களில் 212,585 ஓலைச்சுவடிகள், 22 செப்பேடுகள், 67 செப்பு பட்டயங்கள், 2 வெள்ளி செப்பேடு, 1 தங்க செப்பேடு மற்றும் 365 இலக்கிய சுவடிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? ஈரோட்டில் மாறும் திமுக பவர் சென்டர்: மூக்கை நுழைக்கும் தோப்பு!

0

திமுகவில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் பிடிப்பு மெல்லமெல்ல வலுப்பெற்று வருவதால், சீனியர்கள் மிகுந்த அழுத்தத்தை உணர்கிறார்கள். ஈரோடு மாவட்ட திமுகவிலும் இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. அமைச்சராக இருக்கும் முத்துசாமியின் ஆதரவாளர்களிடமும் இந்த மாற்றம் அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவின் சார்பாக முத்துசாமி போட்டியிட்டார், ஆனால் இருமுறையும் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில், மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார் மற்றும் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன் பின்னர், திமுகவில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பலரது கவனத்தையும் எதிர்ப்பையும் பெற்றது. தனக்கு எதிராக உருவாகும் சவால்களை சமாளிக்க, எதிர்ப்பாளர்களை ஒதுக்கும் முயற்சியில் முத்துசாமி இறங்கியதாக பேசப்பட்டது.

இதன் விளைவாக, ஏற்கெனவே ஒருங்கிணைந்திருந்த ஈரோடு மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், தெற்கு மாவட்ட செயலாளராக முத்துசாமி பொறுப்பேற்றார். அவரின் முக்கிய எதிரியாக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், 2021 தேர்தலில் அறிமுகமே இல்லாத பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் சொற்ப ஓட்டில் தோல்வியுற்றார். இந்தத் தோல்விக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து பல்வேறு குரல்கள் எழுந்தன.

2021 சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றது இரண்டு தொகுதிகளிலேயே. இதன் காரணமாக, முத்துசாமி அமைச்சராக பதவி ஏற்றார். மக்களவைத் தேர்தலிலும், ஈரோடு தொகுதியை கூட்டணிக்குத் தள்ளும் முயற்சிகள் நடந்தன. ஆனால், திமுக தலைமையின் முடிவில், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த பிரகாஷ், மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஈரோடு திமுகவில் தனிக்காட்சி ஆட்சி செய்த முத்துசாமிக்கு, பிரகாஷின் வரவு விருப்பமானதாக இருக்கவில்லை. உதயநிதியின் நேரடி தேர்வாகவும், அமைச்சர் அன்பில் மகேசின் ஆதரவாளராகவும் இருப்பதால், பிரகாஷ் மிகுந்த கவனம் பெற ஆரம்பித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்குப் பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக, காங்கிரசிலிருந்து மீண்டும் பெற்றுக் கொண்டது. தேமுதிகவில் இருந்த வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தது. தொண்டர்களுக்கு நெருக்கமானவர் என்பதால், சந்திரகுமாரின் வரவு முத்துசாமிக்கு சவாலாக இருக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால், சந்திரகுமாரே முத்துசாமியின் ஆதரவோடு வளர விரும்புகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையகம், ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து பெருந்துறை தொகுதியையும், வடக்கு மாவட்டத்திலிருந்து பவானி தொகுதியையும் பிரித்து, புதிய ஈரோடு மத்திய மாவட்டத்தை உருவாக்கியது. அதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை செயலாளராக நியமித்தது.

முந்தைய காலங்களில் செங்கோட்டையனை எதிர்த்து செயல்பட்டிருந்த வெங்கடாசலத்தின் வரவு, முத்துசாமிக்கான ஒரு கட்டுப்பாடு என பார்க்கப்படுகிறது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் அரசியலில் ஆக்டிவாகிறார். அவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி, ஈரோடு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முத்துசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது: “அமைச்சர் எதையும் விதிகளுக்குள் செய்வார். எதையும் தனிப்பட்ட முடிவுகளாக எடுக்கமாட்டார். ஆனால், சிலர் அவரைப் பற்றிய தவறான செய்திகளை பரப்புகின்றனர். அவரது அரசியல் அனுபவத்தையும் செயல்பாடுகளையும் தலைவர் நன்றாக புரிந்திருக்கிறார். எனவே, இந்த விமர்சனங்கள் அவருக்கு எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது.” என கூறியுள்ளனர்.

ரேஷன் கடைகளில் பிரச்சனையா!! புகார் அளிக்க கட்டணமில்லா இலவச எண்!!

0

தமிழக சட்டசபை கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் குறித்த கேள்விகளுக்கும் ரேஷன் கடைகள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பதிலளித்திருக்கிறார்.

அதன்படி, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு 18,09,607 எண்ணிக்கையிலான புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் புதிதாக விண்ணப்பித்திருக்கக்கூடிய 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை 2,29,00,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் புகார் அளிப்பதற்காக முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகளில் புகார் பதிவு பெட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், புகார் பதிவு பெட்டிகள் மூலம் தங்களுடைய புகார்களை தெரிவிக்க முடியவில்லை என்றால் பொதுமக்களுக்காக இலவச தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு தரப்பில் கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி, பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற அழைப்பிற்கு அழைப்பு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கி இருப்பதால் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்கான ஆய்வுகள் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அங்கு அவை வெற்றிகரமாகும் பட்சத்தில் தமிழகத்திலும் அதே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களை அலைய விடாமல் இருப்பதற்காக ஒரே தவணையில் ரேஷன் அரிசி பருப்பு, கோதுமை எண்ணெய் சக்கரை உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

உடையை மட்டுமே பிரச்சனையாக கூறுகின்றனர்..சொல்வதை காது கொடுத்தும் கேட்கவில்லை!! கோபத்தின் உச்சியில் திமுக எம்பி கனிமொழி!!

0

நாடாளுமன்ற சபாநாயகர் பிரச்சனைகளை காது கொடுத்தும் கேட்காமல் உடைகளில் மட்டுமே குற்றம் சாட்டுவதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் கொந்தளித்திருக்கிறார்.

திமுக அரசானது நீண்ட நாளாக தொகுதி மறுசீலனை குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனால் சபாநாயகர் இதனை ஒருபொழுதும் கண்டு கொள்வதாகவே இல்லை என்றும் தெரிவித்த கனிமொழி அவர்கள், இதற்காகத்தான் தற்பொழுது போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றும் ஆனால் இந்த போராட்டங்களை கூட சபாநாயகர் கண்டு கொள்வதாக இல்லை என தெரிவித்திருக்கிறார்.

ஒரு சார்பாக பேசக்கூடிய சபாநாயகர் அவர்கள் எதிர் கட்சிகளே இருக்கக் கூடாது என்றும் எதிர் கருத்துக்கள் வருவது தனக்கு பிடிக்காத விஷயம் என்பது போலவே நடந்து கொள்வதாகவும் ஆளும் கட்சியான பாஜக ஒரு விஷயத்திற்காக போராடுகின்றனர் எதிர்க்கின்றனர் என்றால் அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய சபாநாயகர் ஏன் எங்களை மட்டும் உடைகளை மாற்றி வரும் படி அறிவுறுத்துகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுதி மறுவரையறை செய்ய திமுக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை நாடாளுமன்றத்தில் புறக்கணித்து வந்ததால் அதனை எதிர்த்து டி-ஷர்ட், சால்வைகள் போன்றவற்றை திமுக மற்றும் திமுக உடன் சேர்ந்தால் எதிர்க்கட்சிகள் இணைந்து தங்களுடைய உடைகளின் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றம் தொடங்கிய பொழுது உடைகளை மாற்றி வருமாறு கூறி சபாநாயகர் அவையை தள்ளி வைத்திருக்கிறார். எனினும் தங்களுடைய போராட்டத்திற்காக உடைகளை மாற்றாமல் மீண்டும் அவையில் எதிர்க்கட்சிகள் இணைந்த பொழுது அவையை நாளை ஒத்தி வைப்பதாக தெரிவித்துவிட்டு சபாநாயகர் எழுந்து சென்றிருக்கிறார்.

இது ஒரு தலைப்பட்சமாக சபாநாயகர் உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்றும் எதிர் கருத்துக்களை தெரிவிக்காமல் பாஜகவை போல வாழ்க வாழ்க என்று கோஷங்களை நாங்கள் எழுப்பினால் அதற்கு சபாநாயகர் தலையசைப்பார் போல என்று நகையாடி இருக்கிறார்.

சசிகலா-வுக்கு முக்கிய பொறுப்பு .. முழு சம்மதம் அளித்த எடப்பாடி!! உண்மையை சொன்ன அதிமுக மாஜி!!

0

ADMK: அதிமுகவை மீண்டும் வலிமை மிகுந்த கட்சியாக கொண்டு வர வேண்டுமென்பதில் தீர்க்கமாக உள்ளது. அதன் பொருட்டு மீண்டும் கட்சிக்குள் ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இது ரீதியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி-யிடம் பேச்சுவார்த்தையில் உள்ளனர். இப்படி இருக்கையில் தான் மாஜி அமைச்சர் வைகை செல்வன் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, வரப்போகும் 2026 ஆம் தேர்தலில் கட்டாயம் கட்சியிலிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் இணைவார்கள். குறிப்பாக சசிகலா தினகரன் உள்ளிட்டோர் இணைய ஆதரவளித்துள்ளனர் எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, தான் மட்டும் தான் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். மேற்கொண்டு சசிகலா கட்சிக்குள் வந்தால் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் வலுவிழந்த அதிமுக மீண்டும் வலுப்பெற்று திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒத்துக் கொண்டுள்ளாராம். அதேபோல சசிகலா தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க சம்மதித்து விட்டது என்றும் கூறியுள்ளார். மேற்கொண்டு இந்த ரீதியாக பேசப்பட்டு முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது நடந்து வரும் சட்டசபை பட்ஜெட் தாக்களிலே இது ரீதியாக பல சம்பவங்கள் நடைபெற்றது. முதலாவதாக சபாநாயக்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ஓபிஎஸ் ஆதரவு அளித்தார். மறுநாளே அவருக்கு ஆதரவாகவும் எதிர்கட்சியினரிடம் பேசினார். இது அனைத்தும் கூட்டணியில் இணைக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஷாக் நியூஸ்.. இனி Phone Pay G pay பயன்படுத்த அதிரடி கட்டணம்!!

0

Phone Pay G pay: நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் தற்போது அதன் பயன்பாட்டைப் அறிந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு ஏற்ற கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரீசார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல இனி வரும் காலகட்டங்களில் நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யுபிஐ உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அப்படி போன் பே, ஜி பே பயன்படுத்துபவர்கள் இனி தொகை அனுப்ப வேண்டுமென்றால் அவர்கள் அக்கவுண்டிலிருந்து 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது புது வகையான ரூல்ஸ் என்றும் இது சார்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நாம் ட்ரெயின் டிக்கெட், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல தேவைகளை செய்து வருகிறோம். அப்படி பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காரணிக்கும் இந்த தொகை வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய விதிமுறை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பதை தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு வசூல் செய்யப்படும் தொகை மற்றும் அதி ரீதியான தகவல்களை மட்டும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படி அனைத்து சேவைகளையும் இருந்த இடத்திலிருந்து பயன்படுத்துக் கொள்வதால் இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கலாம் என பயனர்கள் கூறி வருகின்றனர். தற்போது கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறியதால் நாளடைவில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது குறைய அதிக வாய்ப்புள்ளது.

வீட்டிலிருந்தபடியே நிலத்தை அளக்க அப்பளை செய்யலாம்!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட குட் நியூஸ்!!

0

Tamilnadu Gov: தமிழக அரசானது மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு நலத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் கொண்டு வந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை எனத் தொடங்கி தமிழக அரசிடம் விண்ணப்பிக்க வரும் கோரிக்கைகள் என அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். அந்த வரிசையில் நிலத்தை அளக்க வேண்டுமென்றால் நேரடியாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கட்டணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு நிலமானது சர்வேயர் மூலம் அளக்கப்பட்டு இது ரீதியான ஆவணங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு மக்கள் தொடர்ந்து அலுவலகத்திற்கு செல்வதும் சர்வேயர் வராததும் பல புகார்கள் தொடர்ந்து வந்தது. மேற்கொண்டு மக்கள் எளிதில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற வகையில் இணைய வழி மூலம் நில அளவினை அளக்க விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தது. தற்போது இது ரீதியான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். இனி தூத்துக்குடி மாவட்டம் மக்கள் நில அளவை எடுப்பதற்காக அந்தந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்தில் பதிவிட்டு வங்கிகளுக்கு சென்று பணத்தை கட்டிக் கொள்ளலாம்.

இது ரீதியாக அதிகாரப்பூர்வ தளமான, httsamilnilam.tn.gw.inxiyizen என்ற இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கட்டணங்கள் செலுத்த பொதுமக்கள் நேரடியாகவே வங்கி கிக்கு சென்று செலுத்திக் கொள்ளலாம். இதனால் இடைத்தரகர்கள் பஞ்சாயத்து இருக்காது. இல்லையென்றால் ஒவ்வொரு ஊரில் உள்ள ஈ சேவை மையத்தை நாடியும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு நில அளவு எப்பொழுது எடுக்கப்படும் என்பது குறித்தான முழு விவரமும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அந்த தேதியில் சர்வேயர்கள் நிலத்தை அளந்த பிறகு இது ரீதியான ஆவணங்களை அவர்களுடைய ஐடியில் பதிவேற்றம் செய்வர். பின்பு பொதுமக்கள் தங்கள் சர்வேயர் எண் உள்ளிட்டவற்றை கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!

0

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில், இந்த திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு சில ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்ற சிலர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது, 375 ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், கலெக்டர் தலைமையிலான குழு அந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். இணைக்கப்பட்ட ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாமல், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இந்த திட்டத்தை தொடர அரசு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது.

மேலும், சிலர், “இந்த ஊரை அந்த ஊருடன் இணைத்தால் நாம் தலைவராக முடியாது” என்று மக்கள் மனதில் குழப்பத்தை உருவாக்கி, அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சதி செய்கிறார்கள். இது முறையாக செல்லக்கூடிய செயல் அல்ல. நகர்ப்புற வளர்ச்சி, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு, இந்த ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுகின்றன.

அரசின் திட்டங்கள் பொதுமக்கள் நலனுக்கே உருவாக்கப்படுகின்றன. இதில் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்க, அரசு உறுதியுடன் செயல்படும். வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், பூரண ஒழுங்குமுறையில் திட்டங்களை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நேரு கூறினார்.

சீமானுடன் கூட்டணி கட்டாயம் வேண்டும்.. ஒற்றைக் காலில் நிற்கும் விஜய்!! “உங்க சவகாசமே வேண்டாம்” துரத்தி அனுப்பிய சீமான்!!

0

TVK NTK: சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் அதிமுக பிளவு நிலையில் உள்ளது. மற்றொருபுறம் திமுக கூட்டணி கட்சிகள் தலைமை மீது அதிர்ச்சியில் உள்ளனர். மேற்கொண்டு பாஜக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இப்படி அரசியல் களமானது பல முனைகளில் இருப்பதைக் கண்டு விஜய் சுதாகரித்துக் கொண்டார். சீமானுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உள்ளது, சீமானுடன் கூட்டணி வைக்கும் போது சிறுபான்மையினர் என தொடங்கி பிளவுவாத அரசியல் செய்பவர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளையும், ஆளும் கட்சி மீது அதிருப்தி உள்ள வாக்குகளையும் எளிமையாக கவர்ந்து விடலாம் என்று எண்ணுகிறாராம். ஆனால் சீமான் தற்போதைய சூழலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பது போல் உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பக்கம் அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென சீமானுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்களாம்.

இதற்கு முன் தமிழக வெற்றிக் கழகம் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேர்தல் வியூக வகுப்பாளர்களான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரை சீமானிடம் பேசும்படி தூது அனுப்பியுள்ளார். இதனை சற்றும் கண்டுகொள்ளாத சீமான் இவர்கள் கொடுத்த நெருக்கடியை தாங்க முடியாமல் கிண்டல் அடித்து பேசியுள்ளாராம். உங்களுக்கு தான் 25% வாக்கு வாங்கி உள்ளது என்று வியூகம் கூறுகிறதே?? நீங்கள் ஏன் என் கூட்டணியை தேடுகிறீர்கள்?? தனித்தே நிற்கலாம் அல்லவா.

அதேபோல விஜய் தலைமையில் ஒருபோதும் என்னால் கூட்டணி வைக்க முடியாது அவர் வேண்டுமானால் என்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட வியூக வகுப்பாளர்கள் வாயடைத்து போய் உள்ளனர். சீமானுடன் கூட்டணி வைக்கும் எண்ணமும் தவிடு பொடி ஆகிவிட்டதால் அடுத்த கட்ட நகர்வு குறித்து விஜய் ஆலோசனை செய்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எம் ஜீ ஆர் -க்கும் ஸ்டாலின் மீது தனி அன்பு.. பயங்கரமான நெருக்கம்!! திமுக அமைச்சர் ஓபன் டாக்!!

0

ADMK DMK: சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து தற்பொழுது வரை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இது ரீதியாக தற்பொழுது பட்ஜெட் தாக்குதலில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இதற்காக 2000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு போட்டு பார்த்தால் மாணவருக்கு தலா பத்தாயிரம்  என்ற அடிப்படையில் தான் லேப்டாப் வழங்கப்படும். அப்படி பத்தாயிரம் ரூபாயில் லேப்டாப் தயாரித்தால் தரமானதாக எப்படி இருக்கும் என அதிமுக வின் மாஜி அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் தங்கம் தென்னரசு, இந்த ஆண்டு 2000 கோடியும் அடுத்த ஆண்டு 2000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு தேவைப்பட்டாலும் நிதி ஒதுக்கி கொள்ளலாம் என்று தெரிவித்ததோடு அதிமுகவிற்கு சில அறிவுரையும் கூறியுள்ளார். அதிமுக மிகவும் கவனமாக இருங்கள், உங்கள் மடியில் உள்ள கணத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் இருந்த காலத்தில் திமுக மீது பெரும் மதிப்பு இருந்தது. அது மட்டுமின்றி ஸ்டாலின் மீதும் தனி அன்பு வைத்திருந்தார். அந்த வகையில் நீங்கள் ஆரம்ப கட்டத்திலிருந்தே எங்களுடன் அரசியல் களத்தை சகித்து கொண்டுள்ளீர்கள்.

இவ்வாறான சூழலில் உங்களின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறொருவர் மற்றொரு இடத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார், அதிலும் அவர்கள் சாணக்கிய தந்திரத்துடன் செயல்படுகிறார்கள் என்று பாஜகவை சுட்டிக்காட்டி பேசினார். இது அனைத்தையும் கூறுவது உங்கள் மீதுள்ள உரிமை என்று இருதியில் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கமணி, நாங்கள் கூட்டணியிலும் சரி கூட்டல் கழித்தல் கணக்கிலும் சரி ஒருபோதும் ஏமாற மாட்டோம் என்று தெரிவித்தார்.