Home Blog Page 378

ரேஷன் அட்டை தாரர்களுக்கு வரப்போகும் மேஜர் உத்தரவு!! இவர்களெல்லாம் இனி இங்கு பொருள் வாங்க முடியாது!!

0

2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை ரீதியாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இன்று தெரிவித்துள்ளனர். இதர மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்டவைகளில் மக்கள் ரேஷன் கடைக்கு செல்லாமல் வீடு தேடி பொருள்கள் வழங்கும் திட்டமானது நடைமுறையில் உள்ளது.

இதனை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் பேரில் தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அம்மா மாவட்டத்திற்கு சென்று அதன் செயல்பாடுகள் அறிந்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பர். பின்பு அதனை வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்று பெரிய கிராமங்களில் உடன் இருக்கும் சிறு கிராமங்கள் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் பகுதி நேர நியாய விலை கடைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து இது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இது பரிசீலனை செய்யப்படும் பட்சத்தில் துணை கிராமங்கள் நலனுக்காக ரேஷன் கடைகள் பகுதி நேரம் செயல்படுத்தப்படும். அந்தவகையில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க தேவையில்லை. தனது கிராமத்திலிருந்துக் கொணடே வாங்கிக்கொள்ளலாம். மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள வாடை நியாய விலை கடைக்கு பதிலாக சொந்தமாக கட்டித்தரப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

தன்மானத்தை இழந்து பாஜகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.. திமுக வுக்கு நெத்தியடி பதில் கொடுத்த எடப்பாடி!!

0

ADMK DMK:பட்ஜெட் கூட்டு தொடரில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து தங்கம் தென்னரசு ஒதுக்கிய தொகை ரீதியாக விவாதம் நடந்தது. 2000 கோடியில் இருவது லட்சம் மாணவர்களுக்கு எப்படி தரமான லேப்டாப் வழங்க முடியும் என தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். முதலாண்டு 2000 கோடியும் அடுத்த ஆண்டு 2000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மாணவர்களுக்கு தலா 20000 மதிப்பில் லேப்டாப் வழங்கப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

அதைடு விட்டு விடாமல் பாஜக அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். இது ரீதியாக, உங்கள் மடி கனத்தை வேறொருவர் பறிக்க நினைக்கிறார்கள், மிகுந்த கவனம் தேவை. உங்கள் மீது உள்ள அக்கறையால் தான் இதை கூறுகிறேன். அதுமட்டுமின்றி உங்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் வேறொருவர் சாணக்கியமாக செய்து கொண்டிருக்கிறார் இன்று எச்சரித்துள்ளார். தங்கம் தென்னரசு இவ்வாறு கூறியதற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்தியார்களிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் எடப்பாடி கூறியதாவது, பட்ஜெட்டில் போதுமான நிதி உதவிகள் இல்லாமல் வார்த்தை ஜாலங்கள் தான் இடம்பெற்றது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 5.18 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது தற்போது திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 4.5 லட்சம் கடன் அதிகரித்துள்ளது. இது ரீதியாக நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் அவர்கள் தற்போது வரை முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கடனும் குறைந்த பாடு இல்லை. நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் மட்டும் கவனித்தால் போதும்.

எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆடு நனைகிறது அதை பார்த்து ஓனைய அழுதுததாம் அந்த கதை போல்தான் இது உள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கொள்கை வேறு கூட்டணி வேறு. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அதிமுகவுடன், அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்ததுண்டு. ஆனால் கொள்கை என்பது ஒன்றுதான். கூட்டணியானது, கட்சியின் வாக்குகள் சிதறப்படாமல் இருப்பதற்காக தான் அமைக்கப்படுகிறது. அதேபோல இவர் கடைசியில், அதிமுக ஒரு கணமும் தன்மானத்தை இழக்காது என்று கூறியுள்ளார். அதாவது மீண்டும் பாஜகவுடன் தன்மானத்தை இழந்து இணைய மாட்டோம் என்பதை திமுகவிற்கு பதிலடியாக கொடுத்துள்ளார்.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

0

சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. கூட்டல்-கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “எங்கள் கணக்குகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

நிருபர்களை சந்தித்தபோது, அவர் தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்தார். “நான்கு ஆண்டுகளில் உங்கள் அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. ஆனால் இதுகுறித்து எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை. நிதி மேலாண்மை குழுவின் அறிக்கை என்ன? பட்ஜெட்டில் வழங்கிய தகவல்கள் மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை விளையாட்டுகள் மட்டுமே” என குற்றம் சாட்டினார்.

அத்துடன், “மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், அரசு மக்களின் நிலைமையை புரிந்து கொள்ளவில்லை” என்றும் கூறினார். தி.மு.க. கூட்டணி மற்றும் அதன் ஆட்சியின் நியாயமற்ற செயல் முறைகளை வெளிக்கொணர்ந்த அவர், “மேல்மாடியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது, கீழே காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது தான் தி.மு.க.வின் உண்மை நிலை” எனக் கண்டித்தார்.

இதேபோல், “அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. எங்களுக்குத் தேவையான கூட்டணியை தேர்ந்தெடுப்போம். ஆனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் ஆதரிக்கமாட்டோம். 2026ல் தி.மு.க. அரசு மக்கள் துணையுடன் அகற்றப்படும்” என்றார். இதன் மூலம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேயான அரசியல் போட்டி மேலும் தீவிரமாகி உள்ளது.

குறைந்த முதலீடு.. அதிக வருமானம்!!SBI வெளியிட்ட புதிய திட்டம்!!

0

State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும்.

ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :-

✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். ஆனால் இந்த திட்டமானது அவற்றிலிருந்து சற்றே வேறுபட்டது. இதில் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் உடைய விருப்பம்

✓ கால அளவை முடிவு செய்து கொண்டு அதன் பின் முதலீடு செய்ய தொடங்கினால் அதிக அளவு லாபம் பெறலாம்.

✓ RD திட்டத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணையலாம்

✓ 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்கள் உடைய பெற்றோர்கள் இணைந்து திட்டத்தில் சேரலாம்

✓ 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கால அளவை இந்த திட்டம் கொண்டிருக்கிறது

✓ முதிர்வு தேதிக்கு முன்பாக பணத்தை எடுத்தால் வட்டி விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும்.

முதியவர்களுக்கான சிறப்பு சலுகைகள் :-

✓ 3 வருடங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பெற வேண்டும் என்றால் 2500 ரூபாய் மாதத் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு வட்டி 6.75% ஆனால் முதியவர்கள் 2480 ரூபாய் செலுத்தினாலே அவர்களுக்கு 7.25% வடி வழங்கப்படும்.

✓ 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றால் 1810 ரூபாய் சாதாரண நபர் செலுத்த வேண்டும் அதுவே முதியவர்கள் 1791 செலுத்தினாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடிமேல் அடி வாங்கும் விஜய்!! ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் ஐடி ரைட்!!

0

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒரு புறம் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் ஒருபுறம் என இரண்டையும் சரியான திட்டங்களை வகுத்து பின்பற்றி வருகிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்.

அரசியல் களம் காண இருக்கும் இவர் தன்னுடைய கடைசி திரைப்படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தற்பொழுது ஜனநாயகன் திரைப்பட தளத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டு தற்காலிகமாக ஜனநாயகம் திரைப்பட சூட்டிங் ஆனது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது சினிமா துறையில் ஏற்படக்கூடிய சிக்கலா அல்லது அரசியல் ரீதியாக விஜய் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிக்கலா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது பனையூரில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென FEFSI தலையிட்டு அதனை நிறுத்தி இருக்கிறது. திரைப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 22 நாட்களாக ஊதியம் கொடுக்கவில்லை என்றும் இவ்வளவு நாட்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது தவறான செயல் என்றும் FEFSI அமைப்பு தலையிட்டு படப்பிடிப்பு தளத்தை நிறுத்தி இருக்கிறது.

மேலும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் முன்பு பிரெஸ்டிஜ் நிறுவனத்தோடு இணைந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டதாகவும் இப்பொழுது prestig-லிருந்து பிரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க பிரெஸ்டிஜ் நிறுவனத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டதை அடுத்து அதனுடன் இணைந்து பல தொழில்களை மேற்கொண்ட கே வி என் நிறுவனத்திற்கும் ஐடி ரைட் நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளதால் விஜய் அவர்கள் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறைவான வட்டியில் தனிநபர் கடன்!! அட்டகாசமான வழிமுறைகள்!!

0

பல நேரங்களில் தங்களுடைய முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனி நபர் கடன்கள் அவசியமாக உள்ளது. ஆனால் வீடு வாகனம் போன்றவற்றிற்கு கடன் பெறும் பொழுது செலுத்துகிற வட்டியை விட தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது.

தனிநபர் கடன்களை பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பான ஆப்புகள் மூலம் பெறக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது. எனினும் மூன்றாம் தரப்பு ஆப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகும் பொழுது பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். இவற்றை தவிர்த்து குறைவான வட்டியுடன் எப்படி தனிநபர் கடன் பெறுவது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குறைந்தபட்டியில் தனிநபர் கடனை பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு :-

✓ 750 மேல் கிரெடிட் ஸ்கோரை பராமரித்தல்

✓ தங்களுடைய இ எம் ஐ களை குறிப்பிட நேரத்தில் செலுத்துதல்

✓ கடன் தொகையை திருப்பி செலுத்தக்கூடிய வரலாறு நல்லபடியாக இருந்தால் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது

✓ வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்தல் மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களை அறிதல்

✓ பண்டிகை காலங்களில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பல சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

✓ வருமான விகிதத்திற்கான நிலையான கடமை (FOIR) என்பது நிலையான வேலையை குறிப்பதாகும் ஒருவர் கட்டாயமாக இரண்டு வருடங்கள் ஆவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருப்பது அவர்களுடைய நல்ல பணிக்கான சூழலை வெளிக்காட்டும்

✓ வேலை பார்க்கக் கூடிய நிறுவனங்களில் நற்பெயரை பெற்றெடுத்தல் நல்ல நிதி நிலைமையை வெளிக்காட்டுவதாக அமையும். இதன் மூலமும் குறைவான வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும்

தவறான செயல்.. விதிமீறல் போன்றவற்றில் ஈடுபட்டால் நிறுத்தப்படும் ஓய்வூதியம்!! எச்சரிக்கும் மத்திய அரசு!!

0

மத்திய அரசினுடைய அரசு நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்க கூடியவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் மற்றும் விதி மீறல்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து தவறுகளுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதாவது, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டி பெறும் உரிமை பணியில் ஒழுக்கம் மற்றும் செயல்திறன் மீது பொறுப்பாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

✓ அலட்சியம் மற்றும் விதிமீறல்கள் – ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியில் தடைகளை ஏற்படுத்தும்

✓ பணி ஓய்வு பெற்ற பின்பு விசாரணை நடத்தப்படும் – விசாரணையில் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதுவரை வழங்கப்பட்ட பணம் மீண்டும் பெறப்படும்

✓ மத்திய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய விதிகள் 2021 – புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

✓ ஏழாவது ஊதிய குழு விதிகள் – ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் 9000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்

✓ UPSC பரிந்துரை நிலை – ஓய்வூதியம் குறைக்கப்பட வேண்டும் என்றால் யுபிஎஸ்சியிடம் பரிந்துரை பெறுவது அவசியம்.

மத்திய அரச நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அரசு விடுதி இருக்கக்கூடிய எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

மத்திய அரசு ஊழியர்கள் பணி புரியும் பொழுது ஏதேனும் அலர்சியம் காட்டப்பட்டாலோ அல்லது தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ ஓய்வு பெறும் பொழுது அதற்கான விசாரணை நடத்தப்படும் என்றும் அதன் பிறகு ஓய்வூதியம் ஆனது முழுவதுமாக தடை செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்திருக்கிறது. எனவே தங்களுடைய வேலைகளில் எந்தவித அலட்சியப் போக்கும் இல்லாமல் தவறான செயல்களில் ஈடுபடாமல் முறையாக பணிகளை முடித்து ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற புதிய விதியானது அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் கொடுத்து முடிவெட்டிக் கொள்ள லைனில் நிற்கும் எம் எஸ் தோனி.. விராட் கோலி!! ரஜினி கூட லிஸ்ட்ல இருக்காரு!!

0

தன்னுடைய வாழ்க்கையில் முதல் ஹேர் கட்டிற்கு 20 ரூபாய் நிர்ணயத்தை வசூலித்தவர் இன்று ஒரு ஹேர் கட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.ஆலிம் ஹக்கீம் என்பவர் தான் தற்பொழுது பிரபலமாக இருக்கக்கூடிய ஹேர் ஸ்டைலிஸ்ட். இவரிடம் திரை பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரும் லைனில் நின்று முடி வெட்டிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

பேட்டி ஒன்று தன்னை குறித்து தெரிவித்த ஆலிம் ஹக்கீம் பேசி இருப்பதாவது :-

தன்னுடைய 9 வயதில் தன்னுடைய தந்தை இறந்து விட்டதாகவும் அதன் பின்பு குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தன்னுடைய தந்தை பாலிவுட் பிரபலங்களுக்கு ஹேர் ஸ்டைலுக்காக இருந்தவர் என்றும் ஆனால் அவர் இறந்த பின்பு அவருடைய அக்கவுண்டில் வெறும் 13 ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் ஆலிம் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

அப்பா இறந்து போனது அவருடைய வேலையை குடும்ப சூழலுக்காக துவங்கியவர் முதலில் முடிவெட்டுவதற்கு 20 ரூபாய் என்றும் ஷாம்பு போட்டு வாஷ் செய்வதற்கு 30 ரூபாய் என்றும் நிர்ணயித்ததாக தெரிவித்திருக்கிறார். அது படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒவ்வொரு தொகை என்பது போல உயர்ந்து இன்று ஒரு ஹேர் கட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாகவும் தன்னிடம் முடிவெட்டிக் கொள்ள வருவது என்றால் அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும் என்றும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்பொழுது 1 லட்சம் ரூபாயையும் முன் தொகையாக செலுத்தி விட வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர் பிரபல திரை நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் போன்றவர்களுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களான எம் எஸ் தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்களுக்கும் தற்பொழுது தொடர்ந்து ஹேர் கட் செய்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக எம் எஸ் தோனி அவர்கள் எந்த ஒரு மேட்ச் விளையாட சென்றாலும் குறிப்பாக ஐபிஎல் மேட்சில் தினம் ஒரு ஹேர் ஸ்டைலில் வந்த கலக்குவதற்கு காரணம் தன்னுடைய கைஜாலம் தான் என தெரிவித்திருக்கிறார் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்.

ஆதார் + அடையாள அட்டை இணைப்பு!! வழிமுறைகள் இதோ!!

0

இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது. அந்த முடிவின்படி அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் மற்றும் இரட்டை வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முக்கிய முடிவானது இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI போன்ற அமைச்சகத்தின் உயர் மட்ட தலைவர்களோடு மார்ச் 18 ஆம் தேதி டெல்லியில் கலந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஒருமனதாக இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் இதன் மூலம் தேர்தல்களில் வெளிப்படை தன்மையை உணர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் :-

✓ புதிய வாக்காளர்கள் படிவம் 6
✓ பழைய வாக்காளர்கள் படிவம் 6B

ஆகிய இரண்டு படிவங்களை பூர்த்தி செய்வதன் மூலம் உங்களால் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் உங்களுடைய பான் கார்டு பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் போன்ற உரிமங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி!!

0

பிள்ளைகளுக்கு சொத்துக்களை பெற்றோர் எழுதிக் கொடுத்த பின்பு அந்த பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்றால் சொத்துக்களை மீண்டும் பெற்றோர்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொத்துக்களை எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுத்திறந்த நிலையில் மீண்டும் அதனை ஹை கோர்ட் உறுதி செய்து இருக்கிறது.

இது குறித்து ஹை கோர்ட்டில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு விவரங்கள் :-

நாகலட்சுமி என்ற தாயார் தன்னுடைய மகன் கேசவன் மீது சொத்துக்கள் அனைத்தையும் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்ததாகவும் கடைசி காலத்தில் கேசவன் மற்றும் தனது மருமகளான மாலா தங்களை கவனித்துக் கொள்வார் என நினைத்தபொழுது கேசவன் திடீரென இறந்து விட்டதாகவும் அதன் பின் மருமகள் மாலா தன்னை கவனித்துக் கொள்ளாததால் தன் ஊரில் உள்ள ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

அதன் பேரில் இந்த மனுவானது சுப்ரீம் கோர்ட்கள் தீர்ப்ப வழங்கப்பட்ட பொழுதும் மருமகள் மாலா ஹை கோர்ட்டுக்கு அப்பில் செய்திருக்கிறார். அங்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளனர்.

அதன்படி, முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007-ன் 23(1)வது பிரிவு வயதான பெற்றோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகவும் அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகும் பட்சத்தில் அவர்கள் எழுதிக் கொடுத்த சொத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கே மீண்டும் சொந்தமாகிவிடும் என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.