Home Blog Page 5665

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 29 லட்சத்து 94 ஆயிரத்து 722 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 8 லட்சத்து 75 ஆயிரத்து 707 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 26,917 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 5,808 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 7,628/323
டெல்லி – 2,625/54
குஜராத் – 3,071/133
தமிழ்நாடு – 1,885/24
தெலுங்கானா – 991/26
கேரளா – 457/04
ராஜஸ்தான் – 2,152/36
உத்தரபிரதேசம் – 1,843/29
ஆந்திர பிரதேசம் – 1,097/31
கர்நாடகா – 503/19
மத்திய பிரதேசம் – 2,096/99
ஜம்மு & காஷ்மீர் – 523/06
மேற்கு வங்கம் – 611/20
பஞ்சாப் – 298/17
ஹரியானா – 289/03
பீகார் – 251/02
அசாம் – 36/01
சண்டிகர் -28/0
உத்தர்கண்ட் – 50/0
லடாக் – 20/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 37/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 103/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 67/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
Megalaya 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1020 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் இந்திய அரசு இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்த இந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்கும் விதமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஒரு சில அரசின் இந்த ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நடந்த கொரோனா மரணத்தில் நடந்த பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் என்றும் அதற்கு பெரியவர்களின் அலட்சியமே என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் “கொரோனாவுக்கு 104 குழந்தைகள் பாதிப்பு: குடும்பம் காக்கவாவது ஊரடங்கை மதிப்பீர்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் நோய் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 முதல் 9 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இதுவரை 55 ஆண் குழந்தைகள், 49 பெண் குழந்தைகள் என மொத்தம் 104 குழந்தைகள் கொரோனா வைரஸ் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து நோய்த் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது ஆகும். வழக்கமாக கோடைக்காலத்தில் வெயில் கொடுமையால் குழந்தைகள் சிரமப்படுவார்கள்; இப்போது கூடுதலாக கொரோனா நோயையும் தாங்குவது இன்னும் அவதியாக இருக்கும். குழந்தைகளின் இந்த நிலை மிகவும் வேதனையளிக்கிறது.

குழந்தைகளின் இந்த நிலைக்கு யார் காரணம்? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த நிலைக்கு நிச்சயம் குழந்தைகள் காரணமல்ல… அவர்கள் நிச்சயமாக ஊரடங்கை மீறி வெளியில் சுற்ற மாட்டார்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கொரோனா வைரஸ் நோயை குடும்பத்தினரிடமும் பரப்பியதன் மூலமாகத் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் ஊரடங்கை மதித்து வீட்டில் அடங்கியிருந்தாலோ, வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருந்தாலோ குழந்தைகளுக்கு இத்தகைய நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

மற்றொருபுறம், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியுள்ளது. கடந்த சில வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோயம்பேடு சந்தையில் 4000 காய்கறி கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர், வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கொயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் ஆகியோரையும் கணக்கில் கொண்டால் அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அத்தகைய சூழலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாவிட்டால், கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்பதை சந்தை நிர்வாகக் குழுவினரும், வணிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

அதேநேரத்தில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தையை மூடிவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவர்; சென்னையில் காய்கறி மற்றும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் தொடர்ந்து வணிகம் நடத்தி வருகின்றனர். அவர்களிடமும் கொரோனா பரவல் அச்சம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைக்கு வருவதை தவிர்ப்பது மட்டும் தான் கோயம்பேடு சந்தையில் கொரோனா நோய்ப்பரவல் ஏற்படுவதை தடுக்கும்.

ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட கோயம்பேடு சந்தைக்கு இணையான விலையில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் இன்னும் குறைவான விலையில் வீடுகளுக்கே காய்கறிகளை கொண்டு சென்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கோயம்பேட்டில் மக்கள் குவிவது தேவையற்ற, நோயை விலைக்கு வாங்கும் செயலாகவே அமையும்.

எனவே, சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், சென்னைவாசிகள் கோயம்பேடு சந்தைக்கு செல்வதை தவிர்த்து, அந்தந்த பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்கி, கொரோனா நோய்ப்பரவலுக்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல்

0

கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல்

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற பணியால் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையானது எல்லா பகுதிகளிலும் வெகுவாக குறைந்துஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 29 லட்சத்து 994 ஆயிரத்து 352 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரசின்  தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 969 பேர் மரணமடைந்துள்ளார். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆரம்பித்த சீனாவை விட அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வந்தது . இதனையடுத்து உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியவர்கள் மற்றும் அதன் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தினந்தோறும் 2 ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்து வந்த அந்நாட்டில் தற்போது வைரசின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ளது.குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது அந்த நாட்டில் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது சற்றே குறைந்த அளவிலான பலி எண்ணிக்கையாகும். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 160 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை

இந்நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவியவர்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 781 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு தற்போது ஆயிரத்து 157 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 55 ஆயிரத்து 413 ஆக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தேதி வாரியான விவரம்:- 
மார்ச் 31 – 1,085  ஏப்ரல் 1 – 1,243  ஏப்ரல் 2 – 1,182  ஏப்ரல் 3 – 1,263 ஏப்ரல் 4 – 1,545 ஏப்ரல் 5 – 1,409 ஏப்ரல் 6 – 1,505 ஏப்ரல் 7 – 2,228 ஏப்ரல் 8 – 2,165 ஏப்ரல் 9 – 2,111 ஏப்ரல் 10 – 2,236 ஏப்ரல் 11 – 2,024 ஏப்ரல் 12 – 1,727  ஏப்ரல் 13 – 1,726 ஏப்ரல் 14 – 2,566 ஏப்ரல் 15 – 2,631 ஏப்ரல் 16 – 2,193 ஏப்ரல் 17 – 2,543 ஏப்ரல் 18 – 1,883  ஏப்ரல் 19 – 1,570 ஏப்ரல் 20 – 1,952 ஏப்ரல் 21 – 2,683 ஏப்ரல் 22 – 2,358 ஏப்ரல் 23 – 2,340 ஏப்ரல் 24 – 1,957 ஏப்ரல் 25 – 2,065 ஏப்ரல் 26 – 1,15

அதிமுக அரசின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! மறைக்கப்பட்ட பிரச்னையை சுட்டி காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்

0

அதிமுக அரசின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! மறைக்கப்பட்ட பிரச்னையை சுட்டி காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, இதனால் பொதுமக்கள் நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசரத்திலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர். அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்து வந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த்தொற்று பரவல் குறித்த சந்தேகம் அனைத்து தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்தைதான் அவரது நடவடிக்கை காட்டுகிறது. கடைகளில் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகி விட்டது.
இதுகுறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்களும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வித நெரிசலுமின்றி, பொறுமையாக வாங்கிச் சென்றிருக்க முடியும். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற நடவடிக்கையால், நோய்த்தொற்று பரவல் குறித்த ஐயப்பாடும் பயமும் மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறிகளுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய மருத்துவர்களுக்கு தற்காப்பு உடை அரசு தரப்பிலிருந்து தரப்படாததால், உடனடியாக சிகிச்சையை தொடங்க முடியாமல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்களின் கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக்கப் பெறாமல் துடிதுடித்து இறந்துபோனார் என்ற செய்தி வந்துள்ளது. அலட்சியத்தால் இப்பேரிடர் காலத்தில், மருத்துவத்துறைக்கான போதிய அடிப்படை வசதிகளின்றி ஓர் உயிரை பலியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தலைநகர் சென்னையின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையே இத்தனை பரிதாபகரம் எனில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையை கேட்கவே வேண்டாம்; அதை நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. அவசர சிகிச்சை பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் என தமிழக அரசு, நாட்டு மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்போடு பணியாற்றும் சுகாதார ஊழியர்களை நெஞ்சாரப் பாராட்டுவதோடு, அவர்களை பாதுகாக்கும் கடமை தலையாயது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதைய நோய்த்தொற்று சூழலில், அந்தந்த மாநில அரசுகளும் ராஜஸ்தானில் உள்ள தங்கள் மாணவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில் அக்கறை காட்டி வருகின்றன. அங்கு தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அரசு உடனடியாக அந்த மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பாதுகாப்புடன் கூடிய பயணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

0

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேபாள அரசும் நாடு தழுவிய ஊரடங்கை 10 நாட்கள் மேலும் நீட்டித்துள்ளது.அதாவது கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகின்ற மே 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகஅறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 27, திங்கட்கிழமையான இன்றுடன் முடிவடையவிருந்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீட்டிப்புடன், புத்த ஜெயந்தியின் போது ஊரடங்கு அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் 52 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், நாட்டில் இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க குழு முடிவு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

சோனியா காந்தியின் பழைய கதைகளை எல்லாம் கிளறும் ராஜா : ஆதாரங்களை வெளியிட்டதால் புதிய சர்ச்சை!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தது. இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இந்த நிகழ்விற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கும் பெரும் கருத்து மோதல்கள் உருவானது.

இந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி ஒன்றை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் வீட்டிற்கு வரும் வழியில் சில குண்டர்களால் தாக்கப்பட்டார்.

அர்னாபும் அவரது மனைவியும் தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவியது, அதோடு அப்படி என்ன கேள்வியை கேட்டு விட்டார் என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். அந்த விவாத நிகழ்ச்சியில் அர்னாப் ‘இதே இடத்தில் இரண்டு சாதுக்களுக்கு பதிலாக இரண்டு கிருஸ்துவ மதபோதகர்கள் கொல்லப்பட்டிருந்தால் சோனியா என்ன பதில் அளிப்பார்’ என்று கேட்டிருந்தார்.

மேலும் சோனியா காந்தியின் உண்மையான பெயரான கூறியதால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று ஹச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதோடு சோனியாவின் நிஜ பெயரான ஆண்டனியோ மைனோ தான் என்று அவரின் குடியுரிமையில் உள்ளதாக ஆதாரத்துடன் ராஜா பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

0

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. 800 நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.இது மட்டுமில்லாமல் பாதிப்பு குறைவாக உள்ள சில இடங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள சென்னை,கோவை,மதுரை,சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இந்த 5 மாநகரங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

முழு ஊரடங்கை கடைபிடித்து வரும் இந்நிலையில் சென்னையில் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள கொருக்குபேட்டையில் உள்ள ஒரு சாலையில் இந்த சம்பவமானது நடந்திருக்கிறது. நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் அந்த சாலையில் கிடந்திருக்கிறது. இதனையடுத்து அனாதையாக கிடந்த அந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா வைரசை பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சென்னை மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாலையில் கிடந்த அந்த ரூபாய் நோட்டுக்கள் மீது கிருமி நாசினியை தெளித்துள்ளனர்.

பின்னர் சாலையில் கிடந்த அந்த ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்து எடுத்து அப்புறபடுத்தியுள்ளனர். உண்மையாகவே அந்த நோட்டுகள் கொரோனா வைரசை பரப்ப சாலையில் வீசப்பட்டதா இல்லையா என்பது பற்றி முழுமையான விவரம் தெரியவில்லை. ஆனால், ஊரடங்கு நேரத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

0

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்காமல் இளைஞர்கள் மட்டுமே நடத்திய இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களும் ஒருவர். இந்நிலையில் அவர் தற்போது தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் அடுத்த பிரச்சனையை கையிலெடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள சில மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளும் இந்த ஊரடங்கால் மூடப்பட்டன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட சிலர் மதுபானங்களை பல மடங்கு லாபத்தில் கள்ளச் சந்தையில் விற்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மதுக்கு அடிமையானவர்கள் எந்த விலை கொடுத்தேனும் குடித்தே ஆக வேண்டும் என அதையும் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கட்டுக்கடங்காமல் இந்த மதுவின் விலை உயர்ந்து செல்வதால் மது பழக்கத்தை கொண்டவர்கள் எப்போ டாஸ்மாக் கடையை திறப்பார்கள் என்று ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்காக குறைந்தது தினமும் 2 மணி நேரமாவது கடையை திறக்க வேண்டும் என்று அவர்களால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

தற்போது அவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் மற்றொரு கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது இந்த ஊரடங்கு நேரத்தை சரியாக பயன்படுத்தி முழுமையான மது விலக்கை கொண்டு வர வேண்டும் என பாமக தரப்பும், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இதைப்பற்றி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலுவாக்கும் வகையில் சமீபத்தில் தமிழ்த்திரையில் வெளியாகிய திரௌபதி படத்தின் இயக்குனர் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வித்தியாசமான ஒரு முயற்சியை கையிலெடுத்துள்ளார். அதாவது இந்த மதுவால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களை வைத்தே சமூக ஊடகங்களில் போராட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள்.. உங்கள் கோரிக்கை அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும்.. என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

#NoMoreTASMAC என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அவர் பதிவிட்ட மற்ற சில பதிவுகள்

https://twitter.com/mohandreamer/status/1254293119723433984

இயக்குனர் மோகன் ஜி ஏற்கனவே சிலஆண்டுகளுக்கு முன்பு உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ள மதுவிற்கு எதிராக தனது போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களை தொடர்ந்து கவனித்துவரும் முதல்வர் அலுவலகம் இவரது இந்த போராட்டம் குறித்து கவனத்தில் கொள்ளும் என்றும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தமிழகத்தில் கோடையிலும் கன மழை : இதனால் நிபுணர்கள் சொன்னபடி கொரோனா தாக்கம் அதிகரிக்குமா?

0

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லும் மக்கள் கோடை வெயிலை தாங்கமுடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வியாபாரிகள், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் வெய்யிலால் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதற்கிடையில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலர் இந்த கோடை காலத்தால் தான் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கிறது. மேலும் நாட்டில் மழைக்காலம் தொடங்கினால் இந்த நோய் தொற்று ஈரப்பதத்தின் காரணமாக அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் வட கிழக்கு மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், அரியலூர், நாகை பகுதிகளில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் அதிகம் மழை காணாத இடங்களாக இருந்துவந்த இவ்வூர்களில் மழையால் பூமி குளிர்ந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தால் நீர்நிலைகளிலும் நிரம்பி மக்களுக்கு கோடை காலத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கடலூர் மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மழை பெய்வதால் மக்கள் நிம்மதி அடைந்தாலும் மருத்துவ நிபுணர்கள் கருத்தின்படி கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்தது : அலறும் உலக நாடுகள்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 29 லட்சத்து 20 ஆயிரத்து 914 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 707 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்தது : அலறும் உலக நாடுகள்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 24,942 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 779 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 5,210 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 6,817/301
டெல்லி – 2,514/53
குஜராத் – 2,815/127
தமிழ்நாடு – 1,821/23
தெலுங்கானா – 981/26
கேரளா – 463/03
ராஜஸ்தான் – 2,061/27
உத்தரபிரதேசம் – 1,778/26
ஆந்திர பிரதேசம் – 1,016/31
கர்நாடகா – 489/18
மத்திய பிரதேசம் – 1,852/92
ஜம்மு & காஷ்மீர் – 454/05
மேற்கு வங்கம் – 571/18
பஞ்சாப் – 298/17
ஹரியானா – 272/03
பீகார் – 228/02
அசாம் – 36/01
சண்டிகர் -28/0
உத்தர்கண்ட் – 48/0
லடாக் – 20/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 94/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 59/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 960 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்தது : அலறும் உலக நாடுகள்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.