Home Blog Page 5673

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்!

0

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்!

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாத தேவைக்கான அரிசி, எண்ணெய், பருப்புகள் மற்றும் ரூ.1,000 உட்பட கொரோனா நிவாரண பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. மேலும் 19 வகையான அத்தியாவசிய பொருட்களும் விரைவில் தர இருக்கின்றனர்.

இந்நிலையில் மக்களின் அடிப்படை வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த உதவிகளின் மூலம் தினக்கூலி மற்றும ஏழைமக்கள் ஓரளவு உணவு தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கொரோனா தொற்று இருந்த ஒரு நபர் பொருட்களை வழங்கி வந்த நிலையில் தமிழக அரசு இதற்கான கட்டுப்பாட்டை விதித்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் பகுதியில் ஊரடங்கு பாதிப்பால் உணவு தேவைக்காக தவித்து வந்தனர். அங்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு பிராண்ட் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. இதனை வீட்டிற்கு வாங்கிச் சென்ற பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுகவினர் வழங்கிய கோபுரம் பிராண்ட் அரிசி மூட்டையில் பிராண்ட் அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்மணி ஒருவர் இப்படி எங்களை ஏமாற்றலாமா என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அப்பெண் வீடியோவில் கூறியதாவது; எங்கள் பகுதியில் திமுகவினர் 5 கிலோ அரிசியை பைகளில் போட்டு கொடுத்தனர். ஆனால் அதில் பிராண்ட் அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியே இருந்தது. இதை எப்படி சமைத்து சாப்பிட முடியும்? எங்களை ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.

இதில் மற்றொரு அதிர்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி திமுக பெண் நிர்வாகி மேலிடத்தின் மூலம் தரமான அரசியை தயார் செய்து அனுப்பியதாகவும், தரமான அரிசியை திமுக நிர்வாகிகள் தங்கள் சுயதேவைக்கு பிரித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தரமான அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியை நிரப்பி வழங்கிய உள்ளே வெளியே நாடகம் அம்பலமாகியதும் தெரியவந்துள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் சலுகை

0

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் சலுகை

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகின்றன. இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நிலைமையை சமாளிக்க பல்வேறு உலக நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வந்தன. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு சலுகையை வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர் .

இந்நிலையில், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே அது தற்போது 4.40 சதவீதமாக தொடர்கிறது.

இதுதவிர வேறு சில முக்கிய நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து உள்ளது. அதில் குறிப்பாக நபார்டு என்ற தேசிய வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி வங்கி, சிட்பி என்ற இந்திய சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த கடன் உதவி நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : வெளியான பகீர் தகவல்!

0

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது;

‘உலக மக்களை கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்ற இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்து வரும் வேளையில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் நோய் தொற்று ஏற்படுத்துவதற்காக ஊடுருவியுள்ளனர்.

இந்திய உளவுத்துறை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டபோது அவர்களின் இந்த சதித் திட்டம் தெரியவந்துள்ளது. இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

0

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்பனை செய்த 99 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கைது நடவடிக்கையை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து மதுபான பிரியர்கள் பலரும் மது இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி சிலர் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக காய்ச்சப்படும் கெமிக்கல் நிறைந்த சாராயங்கள் கிராம பகுதிகளில் ரூ.50 லிருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுபான கடைகள் மூன்று வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருப்பதால் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் கள்ளச் சாராயம் சென்னை, வேலூர் பகுதிகளில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ட்ரோன் கேமிரா உதவியுடன் போலீசார் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை உடனடி கைது செய்யுமாறு டிஜிபி திரிபாதி மதுஒழிப்பு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் மதுஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ள சாராயம் விற்பனை செய்து தலைமறைவான பலரை போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில் இதுபோன்ற சமூக கேடான செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் சட்டத்திற்கு புறம்பாக காய்ச்சிய விஷ கள்ளச்சாராயம் குடித்து பலத் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

0

திடீர் கட்டிட விபத்தில் சிக்கிய 3 சிறுவர்கள்! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்த போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதி வளாகத்தின் மூன்றாவது மாடியில் 3 இளம் சிறார்களான பவித்ரன், கவிராயன் மற்றும் அவரது நண்பன் ஜீவா உள்ளிட்டோர் பால்கனி அருகே வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் மூன்றாவது மாடியின் பால்கனி பகுதி உறுதியிழந்து பலவீனமாக இருந்துள்ளது.

நேற்று மாலை 6 அளவில் சிறுவர்கள் விளையாடிய நேரத்தில் பால்கனி உடைந்து இவர்களின் மீது விழுந்தது. மூன்று பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கத்தினர். சத்தம் கேட்டவர்கள் பதறியபடி ஓடி வந்து கட்டிட விபத்தில் சிக்கியிருந்த மூன்று பேரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்தில் சிறுவர்களின் தலை,கண் மற்றும் கை,கால் பகுதிகளில் காயம் மற்றும் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொண்டாலும் இதுபோன்று யாரும் எதிர்பாராத திடீர் சம்பவங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதை தவிர்க்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு

0

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு..!! -தமிழக அரசு அறிவிப்பு

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை தமிழக அரசு அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சமூக இடைவெளி கருதி 100 நாள் போன்ற மக்கள் கூடும் வேலைக்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வேலை செய்யும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.229 வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதனை உயர்த்தும் விதமாக ரூ.256 ஆக உயர்த்தி தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை அரசாணை வெளியிட்டு உறுதி செய்ததோடு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட தேசிய ஊரக வேலைத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அதிகமான கொரோனா பாதிப்பு இருப்பதால் அவை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரேபிட் டெஸ்ட் போன்ற கொரோனா தடுப்பு மற்றும் ஆய்வு கருவிகள் சீனாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 22 லட்சத்து 27 ஆயிரத்து 38 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 696 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

22 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 14,002 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 452 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 1,766 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 3,205/194
டெல்லி – 1,640/38
தமிழ்நாடு – 1,323/15
தெலுங்கானா – 743/18
கேரளா – 395/02
ராஜஸ்தான் – 1,131/11
உத்தரபிரதேசம் – 846/14
ஆந்திர பிரதேசம் – 572/14
கர்நாடகா – 359/13
குஜராத் – 1,099/38
மத்திய பிரதேசம் – 1,310/15
ஜம்மு & காஷ்மீர் – 314/04
மேற்கு வங்கம் – 255/10
பஞ்சாப் – 211/13
ஹரியானா – 205/03
பீகார் – 83/01
அசாம் – 35/01
சண்டிகர் -21/0
உத்தர்கண்ட் – 37/0
லடாக் – 18/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 35/01
ஒடிசா – 60/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 29/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 09/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 283 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 228/06
கோயம்புத்தூர் – 127/0
திருப்பூர் – 80/0
திண்டுக்கல் – 66/01
நெல்லை – 58/0
ஈரோடு – 70/01
திருச்சி – 46/1
நாமக்கல் – 50/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 50/0
மதுரை – 44/01
கரூர் – 42/0
தேனி – 43/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 26/01
கடலூர் – 20/0
சேலம் – 24/0
திருவள்ளூர் – 46/0
திருவாரூர் – 21/01
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 35/01
நாகப்பட்டினம் – 40/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 11/01
வேலூர் – 22/01
நீலகிரி – 09/01
தென்காசி – 14/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 10/1
அரியலூர் – 02/0
பெரம்பலூர் – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்!

0

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்!

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்றுமட்டும் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்று மோடி அறிவித்தார். இந்தியாவில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 பேர் இருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் 56 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழக பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வெயில் காலத்தில் இருக்கும் கொரோனாவின் தாக்கத்தை விட வருகின்ற குளிர் காலத்தில் மிக தீவிரமான பாதிப்பு இருக்கலாம் என்றும் ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இச்செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குமாரசாமி மகன் திருமணத்தில் விதிமுறை மீறலால் அரசு நடவடிக்கை : அமைச்சர் அதிரடி தகவல்..!!

0

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் பண்ணை வீட்டில் இன்று ஆடம்பரமாக நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது.

தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் இன்று பெங்களூரு பண்ணை வீடு ஒன்றில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு அடுத்த ராமநகராவில் பண்ணை வீடு ஒன்றில் நேற்று இரவு முதலே திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டார் கூட்டமும் அலைமோதியது. இந்த திருமணத்தை பற்றிய தகவல்கள் தெரிய கூடாது என்பதற்காகவே ராமநகராவுக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

ராமநகரா பண்ணை வீட்டுக்கு நேற்று சுமார் 40 கார்கள் சென்றன. லாக்டவுன் காலத்தில் இத்தனை கார்களை எப்படி அனுமதித்து போலீஸ் என்ற கேள்விக்கு, தங்களிடம் பதிவு செய்துவிட்டுதான் கார்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் போலீஸ் தந்த பதில்.

ஊரடங்கு காலம் என்பதால் எந்த ஒரு பொது ஒன்றுகூடலுக்கும் அனுமதி கிடையாது. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் மிக குறைவான நபர்கள்தான் அனுமதிக்கப்பட்டும் தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்குகிற வகையில்தான் கவுடா குடும்பத்து திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த குமாரசாமி, அரசிடம் உரிய அனுமதி பெற்றே திருமணம் நடத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதேபோல் எடியூரப்பா அரசும் கூட, குமாரசாமி வீட்டு திருமணம் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்படும். இதில் லாக்டவுன் விதிகள் மீறப்பட்டிருந்தால் சட்டப்படியான நடவடிக்கை பாயும் என எச்சரித்திருந்தது.

ஆனால் இன்றைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள், ஊரடங்கு விதிகளைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல்தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இதனால் தேவகவுடா வீட்டு திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இது பற்றி கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று கூறியிருந்தார். அவர் பல வருடங்களாக அரசியல் தலைவராக இருந்து வருகிறார். முதல்வர் பதவியையும் வகித்துள்ளார் . அவர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிந்தால், அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மஹாபாரத போருக்கு பிறகு பாண்டவர்களுக்கு என்ன ஆனது? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

0

மஹாபாரத இதிகாசத்தில் பாரத போரில் முடிவுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிந்ததே. போரின் முடிவில் கௌரவர்கள் அனைவரையும் கொன்று பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள்.

போரில் தனது 100 மகன்களை கொன்றதால் யது குலமான சந்திர வம்சமே அழிந்து போகும் என்று காந்தாரி சாபம் அளிக்கிறாள். இந்த சாபத்தை தடுக்க முடியாத ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யுவின் மகன் பரிஷ்த்தை மட்டும் காப்பாற்றுகிறார்.

காந்தாரியின் சாபத்தால் தனக்கும் அழிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்த கிருஷ்ணர் காட்டில் வேடன் விட்ட அம்பு துளைத்து இறக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு தங்களுடைய வாழ்வு நிலையற்றது என்று உணர்ந்தான் தர்மன்.

இதனால் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் திரௌபதி அழைத்து ஆலோசித்து அரச வாழ்க்கையைத் துறக்கலாம் என்று முடிவு கூறுகிறார். தர்மனின் இந்த முடிவிற்கு நான்கு சகோதரர்களும் திரௌபதியும் சம்மதிக்கின்றனர்.

இதனையடுத்து அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீக்ஷித்தை அரசனாக முடி சூட்டுகின்றனர். பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை அழைத்துக் கொண்டு மேரு மலையை நோக்கி யாத்திரை செல்கின்றனர்.

மேரு மலையை நோக்கி பயணம் செய்து அதனை கடந்தால் பூத உடலுடன் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது ஐதீகம். அவ்வாறு பயணம் செய்யும் போது திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி செல்ல வேண்டியது கட்டாயமாகும்.

இந்த பயணத்தின்போது பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் துறவிகள் போல உடையணிந்து யாத்திரை செல்கின்றனர். இவர்களுடன் தர்மன் வளர்த்து வந்த ஒரு நாயும் பின்னாலேயே செல்கின்றது.

பல நாட்கள் பயணித்து மேரு மலையின் மீது ஏறிக்கொண்டு இருக்கும் போது திரௌபதி முதலில் மயங்கி விழுந்து இறக்கிறாள். இதை பார்த்த பீமன் திரௌபதிக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் கேள்வி எழுப்புகிறான்.

அதற்கு திரும்பிப் பார்க்காமல் தர்மன் கூறியதாவது திரௌபதி பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவி தான், ஆனால் அந்த ஐவரில் அர்ஜுனன் மீது மட்டும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால். இதனால் திரௌபதி இந்த யாத்திரையை முடிக்க முடியாமல் இறந்துவிட்டாள் என்று கூறி நடக்கிறார்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் சகாதேவன் மயங்கி விழுந்து இறக்கிறான். இதை பார்த்த பீமன் மீண்டும் தர்மனிடம் சகாதேவனுக்கு என்னாயிற்று என்று கேட்கிறான்.

அதற்கு முன்னேறி நடந்தவாறே தர்மன் கூறியதாவது சகாதேவன் தன்னைவிட அர்த்தசாஸ்திரத்தில் சிறந்தவர் யாருமில்லை என்று கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வத்தின் காரணமாக சகாதேவன் இறந்துபோனான் என்று கூறி நடக்கிறார்.

அங்கிருந்து சிறிது தூரம் கடந்த பிறகு நகுலன் மயங்கி விழுந்து இறக்கிறான். இதை பார்த்த பீமன் தன் தமையனிடம் நகுலனுக்கு என்ன ஆயிற்று என்று வினவினான்.

அதற்கு சற்றும் திரும்பி பார்க்காத தர்மன் கூறியதாவது நகுலன் தன்னைவிட அழகானவர் யாரும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்தான். அதன் காரணமாக அவன் இறந்துபோனான் என்று கூறுக்கொண்டே நடக்கிறான்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் அர்ஜுனனும் மயங்கி விழுந்து இறக்கிறான். இதனைப் பார்த்த பீமன் அர்ஜுனனுக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் கேட்டான்.

அதற்கு முன்னோக்கிய தன்னுடைய பார்வையை திருப்பாமல் தர்மன் கூறியதாவது அர்ஜுனன் தனுற் வித்தையில் தன்னை விட சிறந்தவன் இந்த உலகில் யாருமில்லை என்று கர்வம் கொண்டிருந்தான். அதனால் அவன் இறந்துபோனான் என்று கூறி முன்னோக்கி நடக்கிறான் தர்மன்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் பீமனுக்கு தலை சுற்றி மயக்கம் வருகிறது. தனக்கும் மரணம் வந்துவிட்டது என்று உணர்ந்த பீமன் தனக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் விளக்கம் கேட்கிறான்.

அதற்கு தன்னுடைய பார்வையை திருப்பாத தர்மன் கூறியதாவது இந்த உலகிலேயே சிறந்த பலசாலி நீ தான் என்று கர்வம் கொண்டிருந்தாய், அதனால் நீ இறக்க போகிறாய் என்று தர்மன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் விழுந்து இறக்கிறான்.

பயணம் முழுவதும் மேருமலையை கடக்க வேண்டும் என்று தன்னுடைய பார்வையை திருப்பாமல் உச்சியை நோக்கி செல்கிறான் தர்மன். தர்மனும் அவன் பின்னால் வந்த நாயும் மேரு மலையை கடந்து முடிக்கும் போது அவர்களை வரவேற்க இந்திரனே அங்கு வருகிறான்.

தர்மனை வரவேற்ற இந்திரன் அவனை தன்னுடைய புஷ்பக விமானத்தில் ஏறும் படி கூறுகிறான். ஆனால் உடன் வந்த நாயை அழைத்து செல்ல மாட்டேன் என்று கூறி அனுமதி மறுக்கிறான்.

இதனைக் கேட்ட தர்மன் தன்னை நம்பி இவ்வளவு தூரம் பின்னால் வந்த நாயை ஏற்றவில்லை என்பதால் தானும் சொர்க்கத்துக்கு வரவில்லை என்கிறான். இந்த வாய்ப்பை நிராகரித்ததால் தர்மன் மனித உடலுடன் சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று இந்திரன் கூறுகிறான்.

தர்மன் சற்றும் தாமதிக்காமல் நாய்க்கு அனுமதி மறுக்கப்படுவதால் தானும் வரவில்லை என்று தீர்க்கமாக கூறுகிறான். இந்த உரையாடல் முழுவதையும் கேட்ட நாய் எமதர்மனாக ஆக மாறி தர்மன் முன்பு காட்சியளிக்கிறது.

எமதர்மனை வணங்கி நிற்கிறான் தர்மன், உன்னை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்யும் நீ சொர்க்கத்திற்கு தகுதி உடையவன் என்கிறார். மேலும் தர்மனை சோதிக்கவே இவ்வாறு செய்ததாக இந்திரனும் கூறி அவனை தன்னுடைய புஷ்பக விமானத்தில் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.