Home Blog Page 5682

புலியை தாக்கிய கொரோனா.! உயிரியல் பூங்காவில் பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதி!

0

புலியை தாக்கிய கொரோனா.! உயிரியல் பூங்காவில் பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதி!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் வசித்து வரும் புலிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சீனாவில் உருவான கொரோனாதொற்று 199 நாடுகளுக்கு வேகமாக பரவி உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் 11 லட்சம் பேரை பாதித்துள்ள கொரோனா இதுவரை 69 ஆயிரம் மனிதர்களை பலிவாங்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,72,848 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்ச தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 9,618 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,36,830 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மனிதர்களை மட்டுமே பாதித்து வந்த கொரோனா தற்போது புலியையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்க உயிரியல் பூங்காவில் முதல்முறையாக ஒரு புலிக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிராங்க்ஸ் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குள்ள 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமே வந்த கொரோனா தொற்று விலங்குகளுக்கு எப்படி பரவியது? என்கிற கேள்வியும் முன்னெழுந்த நிலையில், பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமாக விலங்குகளுக்கு பரவி இருக்கலாம் என்றும் பதில் வந்துள்ளது.

மனித இனத்தை மட்டுமே பாதித்து வந்த கொரோனா தற்போது விலங்குகளையும் பாதிக்க தொடங்கிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்

0

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்

உலகப் பொருளாதாரம் இப்பொழுதே கதிகலங்கி விட்டதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உலகின் பல நாடுகளும் எப்பொழுதும் காணாத ஒரு ஷட்டவுன் (Shutdown) காலத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன. பணக்கார மேற்கு நாடுகளும், வளரும் பொருளாதாரத்தை உடைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் அவற்றின் வரலாற்றில் இல்லாத பொருளாதார முடக்கத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தப் பொருளாதார முடக்க நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடருமேயானால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்திக்கும் என்று பல பொருளாதார வல்லுனர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

2008 பொருளாதார மந்தநிலையை விடவும் இது மோசம்

அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சில நிகழ்வுகளால் உலகமே பெரிய பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. இதனை ஆங்கிலத்தில் “The Great Recession of 2008” என்று அழைக்கிறார்கள். வங்கிகள் தங்களது ரியல்எஸ்டேட் பரிவர்த்தனையில் பெரிய அளவில் குளறுபடிகள் செய்ததால் இந்த பொருளாதார மந்த நிலை 2008-ம் ஆண்டு ஏற்பட்டது. வங்கிகளை மட்டுமல்லாது அது சார்ந்த பல துறைகளிலும் இந்த பொருளாதார மந்த நிலை எதிரொலித்து அதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். அமெரிக்காவில் மட்டுமே சுமார் 6 லட்சம் பேர் வரை உடனடியாக வேலை வாய்ப்பை இழந்தனர். மொத்த உலகில் சுமாராக 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்று சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலகம் இப்பொழுது பொருளாதார மந்த நிலையில் உள்ளதா?

27 மார்ச் 2020 ஆம் ஆண்டு அன்று அனைத்துலக நாணய நிதியம் (IMF) உலகம் பொருளாதார மந்த நிலையை அடைந்து விட்டதாகவே தனது அறிக்கையில் கூறியது. இன்னும் ஒரு படி மேலே சென்று 2008-ம் ஆண்டின்  பொருளாதார மந்த நிலையை விட இந்த மந்த நிலை மிக மோசமானதாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2020 மார்ச் மாத நடுவில் இருந்து ஏப்ரல் முதல் தேதி வரை, இரண்டு வார காலத்தில் அமெரிக்காவில் மட்டுமே மொத்தம் 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்து இருக்கிறார்கள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தரவு ஒன்றினை வெளியிட்டது.

இது அவர்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பது திகைப்புடன் பார்க்கப்படுகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால்  கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்காவோ, உலகின் மற்ற நாடுகளோ இன்னும் மீளவில்லை என்பது. அதாவது நிலைமை இன்னும் மோசமடையும் என்பதே. வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் ஒன்று-இரண்டு மாத காலத்தில் இந்தியாவில் உயிரிழப்புகள் இன்னும் கூட அதிகமாக இருக்கும் என்று பல தரவுகள் சுட்டிக்காட்டி நம்மை அச்சமூட்டுகின்றன. 

What will the global economy Status after the corona virus is infected
What will the global economy Status after the corona virus is infected

இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுமா?

சந்தேகமே இல்லாமல் கொரோனா வைரஸ்  பாதிப்புக்கு பின்னான இந்திய பொருளாதாரம் மோசமாக இருக்கும் என்று பலராலும் கணிக்கப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து ஏறக்குறைய 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் வெளியே சென்று விட்டதாக அனைத்துலக நாணய நிதியம் (IMF) கூறுகிறது. இந்த நிதியம் தன் கீழ் உள்ள பிரத்தியேக போர்க்கால கருவூல (War chest) பணமான ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை வளரும் நாடுகளுக்கு கடன் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. இது ஓரளவு ஆதரவான செய்தி என்றாலும், இதிலிருந்தே நிலைமை எவ்வளவு மோசமாகப்போகிறது என்றும் நாம் யூகித்துக் கொள்ளலாம். 

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா மிகப்பெரிய ஒரு நெருக்கடியை தற்போது சந்திக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் அவர்கள் கூறுகிறார். “2008 பொருளாதார மந்தநிலை மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், சில துறைகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தட்டிப் பறித்தாலும், அப்போது வேலைகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, ஒரேடியாக முடங்கிவிடவில்லை, நாடும் அப்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுதான் இருந்தது. அது மட்டுமில்லாமல் நமது பொருளாதார அடிப்படை ஓரளவு உறுதியாக அப்போது இருந்தது. அந்த நிலைகள் எதுவுமே தற்போது இல்லை”, என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

சரியும் பொருளாதாரத்தை மீட்க என்னதான் வழி?

இந்தியா மிக விரைவாக அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்ற பரிசோதனையை உடனே மேற்கொள்ள வழிவகை வேண்டும். இந்த புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெற்றால்,  நாட்டின் எந்தெந்த வட்டாரங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுலபமாக கண்டறிய முடியும். இந்த வட்டாரங்களை மட்டும் அடுத்த கட்டத்தில் முடக்கி வைத்து மற்ற வட்டாரங்களை வழக்கம்போல் இயங்கச் செய்வதன் மூலம் மெல்லமாக பொருளாதாரத்தை  அதன் தற்போதைய தேக்க நிலையிலிருந்து மீட்டெடுக்கலாம்.

இப்படி செய்வதன் மூலம் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளியவர்கள் தங்கள் அன்றாட கூலிக்கு வழிவகை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய முடக்க நிலையை இது ஓரளவு சரிசெய்யும் என்று நம்பப் படுகிறது. ஆனால் பொருளாதாரத்தை முழு வீச்சில் இயங்க வைக்க இந்த நடவடிக்கைகள் பத்துமா? இப்போதைக்கு இந்த shutdown முடிந்தவுடன் அரசு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

( தொடரும்….)

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.? இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

0

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.?
இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று இந்தியா முழுவதும் பரவலாக வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீட்டில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் டார்ச் உள்ளிட்டவை எரியவிட்டனர். சில இடங்களில் தீப்பந்தங்களை ஏந்திய மக்கள ஊர்வலமாக சென்றதோடு பட்டாசுகளும் வெடித்து கொண்டாடப்பட்டன.

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.? இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

பிரபல தனியார் நிறுவன இயக்குனர் ரத்தன் டாடா உட்பட பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் விளக்கேற்றினர். மேலும் சினிமா திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உட்பட பலர் பிரதமர் மோடியின் பேச்சினை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு தங்களது வீடுகளில் விளக்குகளை எரியவிட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தி வீட்டுக்கு வெளியே வந்து நின்றார். அப்போது மெழுகுவர்த்தியை தலைக்கு மேல் மெழுகுவர்த்தியை தூக்கி காண்பித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலில் அணிந்திருந்த செருப்பின் நிறம் மேல்பகுதி கருப்பு நிறமாகவும், கீழே சிகப்பு நிறமாகவும் இருந்தது. அரசியல் குறியீடாக ரஜினி அணிந்திருந்தாரோ? என்று கேள்வி எழுப்பும் வகையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கருப்பு மற்றும் சிகப்பு நிறம் தமிழகத்தின் எதிர்கட்சியான திமுகவின் கொடியாகும். ரஜினி அணிந்திருந்த செருப்பின் நிறமும் திமுக கட்சி கொடியின் நிறமும் ஒரேமாதிரி இருப்பதால் இணையத்தில் இதுகுறித்த புதிய அரசியல் விவாதம் தொடர்ந்து வருகிறது.

காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

0

காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

அபுதாபியில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பலகோடி ரூபாய் பரிசு விழுந்து கோடீஸ்வரர் ஆன சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேஷ் கொரோத்தன் என்பவர் குடும்பத்துடன் அபுதாபியில் உள்ள அல்கைமா என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ஜிஜேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து ஐக்கிய அரசு எமிரேட்ஸ்ஸின் மூலம் நடத்தப்படும் மாதாந்திர அபுதாபி பிக் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகி உள்ளது. கொரோனோ பாதிப்பின் காரணமாக நேரடியான அறிவிப்புகள் வெளியிடாமல் லாட்டரி குலுக்கல் முடிவினை இணையத்தில் வெளியிட்டனர். இதனை ஜிஜேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் கவனித்துள்ளார்.

இந்நிலையில் ஜிஜேஷ் கொரோத்தன் வாங்கியிருந்த “041779′ என்ற லாட்டரிக்கு 20 மில்லியன் திர்ஹாம் முதல் பரிசாக விழுந்திருந்தது. இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி ரூபாய் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இதைப் பார்த்ததும் ஜிஜேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு பெரும் மகிழ்ச்சியில் இன்பத்தின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பேசிய ஜிஜேஷ் கொரோத்தன்: இந்த லாட்டரி பரிசை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சொகுசு கார்களை வாங்கி வெளியில் வாடகைக்கு விடப்போவதாகவும் கூறியுள்ளார்.

காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

கொரோனா பாதிப்பால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மீண்டும் கேரளாவுக்கே சென்றுவிடலாம் என்று நினைத்திருந்த வேளையில் லாட்டரி ஜாக்பாட் அடித்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியதோடு, பணம் வந்தாலும் நட்பை மறக்காத ஜிஜேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கொரோனா தொற்று 13லட்சத்தை நெருங்குகிறது : அதிர வைக்கும் புள்ளி விபரங்கள்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 12 லட்சத்து 73 ஆயிரத்து 505 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 451-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 351 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 13லட்சத்தை நெருங்குகிறது : அதிர வைக்கும் புள்ளி விபரங்கள்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 117 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 328 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

டெல்லி – 503/18/07
மகாராஷ்டிரா – 490/42/24
தமிழ்நாடு – 485/06/05
கேரளா – 306/49/02
ராஜஸ்தான் – 200/21/0
உத்தரபிரதேசம் – 227/19/2
ஆந்திர பிரதேசம் – 190/1/1
தெலுங்கானா – 269/1/7
கர்நாடகா – 144/12/4
குஜராத் -122/18/11
மத்திய பிரதேசம் -165/0/9
ஜம்மு & காஷ்மீர் -106/4/2
மேற்கு வங்கம் -80/10/3
பஞ்சாப் -57/1/5
ஹரியானா -59/25/01
பீகார் -30/0/1
அசாம் -26/0/0
சண்டிகர் -18/0/0
உத்தர்கண்ட் -22/2/0
லடாக் -14/10/0
அந்தமான் & நிக்கோபார் -10/0/0
சத்தீஸ்கர் -9/3/0
கோவா -7/0/0
இமாச்சல பிரதேசம் -6/1/1
ஒடிசா -20/0/0
பாண்டிச்சேரி -5/1/0
மணிப்பூர் -2/0/0
ஜார்க்கண்ட் -3/0/0
மிசோரம் -1/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

0

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில்
3,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே வருபவர்களை மக்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் வீட்டிற்கு திருப்பி அனுப்புவது, நூதன தண்டனை தருவது கொரோனாவை மேலும் பரவவிடாமல் தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறைக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழக காவல்துறைக்கு 33 நாட்களுக்கு தலா ரூ.250 உணவுப்படியாக மொத்தமாக ரூ.8250 வழங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமான தனிமைபடுத்தும் வார்ட்டுகள் தயாரிக்க ரூ.22.57 கோடியை ஒதுக்குவதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதி! இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் பரபரப்பு.!!

0

சென்னையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதி! இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் பரபரப்பு.!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த பிறகு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துபாயில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்தார். அங்குள்ள தனது மூத்த மகனுடன் வீட்டில் தங்கியுள்ளார். இவரது குடும்பம் கீழக்கரையில் வசித்து வருகின்றனர். துபாயில் இருந்து திரும்பிய முதியவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இதன் பின்னரும் காய்ச்சல் தொடரவே சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டு பயணி என்பதால் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் தனியார் மருத்துவ டாக்டர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து 3 நாட்கள் கழித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு முதியவர் சென்று தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். இதனிடையே அவரது ரத்தமாதிரியை எடுத்த மருத்துவர்கள் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையின் அனுமதியுடன் முதியவரின் உடலை கீழக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்பத்தினர் உறவினர் உட்பட 300 க்கும் மேற்பட்ட நபர்கள் சூழ இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஒருவரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதியவரின் ரத்தமாதிரி பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், முதியவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அவரது உட்பட 300 பேருக்கும் கொரோனோ பரவியிருக்கலாம் என்கிற அடிப்படையில் உடனடி பரிசோதனை செய்ய ராமநாதபுர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மரணம் என்று நம்பி கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய பலர் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினை நலம் விசாரித்த பிரதமர் மோடி!

0

திமுக தலைவர் ஸ்டாலினை நலம் விசாரித்த பிரதமர் மோடி!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை இந்த கொரோனா வைரஸால் 3,300 நபர்களுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 70 நபர்களுக்கும் மேல் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடம் சமூக விலகலை கடைபிடிக்குமாறு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அடுத்த கட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 24 உறுப்பினர்களை கொண்டுள்ள திமுகவின் தலைவர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலான தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது ஸ்டாலின் மற்றும் அவரது தாயார் தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார் என்றும் கூறப்படுகிறது.பதிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் பிரதமர் மோடி அவர்களிடம் நலம் விசாரித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்றும், நாட்டில் சுகாதார நிலைமை சீரடைய தேவையான யோசனைகளை வழங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்! இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

0

ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்! இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

இந்தியா முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் வயதுப் பிரிவு குறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயதுப் பிரிவு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. கொரோனா வைரஸ் தங்களையெல்லாம் தாக்காது என்று யாரும் அசட்டுத் துணிச்சலுடன் இருக்க முடியாது; கொரோனா வைரசின் தாக்குதல் எல்லைக்கு அப்பால் எவரும் இல்லை என்பதைத் தான் அவை உணர்த்துகின்றன.

கொரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் தான் அதிகம் தாக்கும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், அது தவறு என்பதை இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரசால் மிகக்குறைந்த தாக்குதலுக்கு ஆளானவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 வயதுக்கும் கீழுள்ள பிரிவினர் தான். ஒட்டு மொத்தமாக தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இப்பிரிவினரின் விழுக்காடு வெறும் 9 மட்டுமே. நேற்றிரவு வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களான 3,630 பேரில் இவர்களின் எண்ணிக்கை 324 மட்டும் தான். அதேபோல், 60 வயதைக் கடந்த முதியவர்களின் அளவு 17 விழுக்காடு, அதாவது 612 பேர் மட்டுமே என அரசு கூறுகிறது. ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கைகள் மிகவும் குறைவாகும்.

அதேநேரத்தில் உடல் வலிமை மிக்கவர்கள், மிகவும் ஆரோக்கியமான வயதுப் பிரிவினர் என்று நம்பப்பட்டு வந்த 21 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் தான் கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகியிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 1512 ஆகும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது 42% ஆகும். அதேபோல், 41 முதல் 60 வயது பிரிவினரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33%, அதாவது 1188 பேர் ஆவர். இப்புள்ளி விவரம் மிகச்சரியான நேரத்தில் தான் வெளியாகியிருக்கிறது. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவும்.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதை உறுதி செய்வதைப் போலத் தான் ஏராளமான இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை கொஞ்சமும் மதிக்காமல், கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு ஆணை நடைமுறைக்கு வந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகும் நிலையில், சாலைகளில் இரு சக்கர ஊர்திகளில் பறப்பவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கும் போதிலும், இப்போதும் விதிகளை மீறுபவர்களில் 99 விழுக்காட்டினர் 21 முதல் 40 வயது பிரிவினர் தான் என்பதை காவல்துறையினரின் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கும்.

இதற்கு காரணம்… நம்மையெல்லாம் கொரோனா வைரஸ் தாக்காது என்ற அந்த வயதுப் பிரிவினரின் அதீத நம்பிக்கை தான். ஆனால், அந்த நம்பிக்கை மூட நம்பிக்கை என்பதை மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்திலேயே, ‘‘இளைஞர்கள் கொரோனாவால் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல. அந்த வைரஸ் உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் தள்ளக்கூடும்; ஏன் கொல்லவும் கூடும்’’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை செயலர் மருத்துவர் டெட்ராஸ் கூறியதை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி அறிவுறுத்தியிருந்தது. அது இப்போது உறுதியாகியுள்ளது.

மீண்டும், மீண்டும் இளைஞர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் நடமாடுவதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடாதீர்கள் என்பதைத் தான். குழந்தைகளையும், முதியவர்களையும் விட கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து இளைஞர்களுக்குத் தான் மிக அதிகமாக உள்ளது என்பதால் உயிரோடும், நோயோடும் அவர்கள் விளையாடக்கூடாது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நாளான ஜனவரி 30-ஆம் தேதிக்குப் பிறகு 59 நாட்கள் கழித்து மார்ச் 28-ஆம் தேதி தான் கொரோனா பாதிப்பு 1000-ஐத் தொட்டது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் 2,600 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் முதல் தொற்று ஏற்பட்ட மார்ச் 7-ஆம் தேதி முதல் மார்ச் 30 வரையிலான 24 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மட்டும் தான். ஆனால், அடுத்த 5 நாட்களில் மட்டும் 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே தமிழகம் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணரலாம். இத்தகைய சூழலில் சாகசம் என்பது தற்கொலைக்கு சமமாகும்.

எனவே, தமிழகத்தில் நிலவும் சூழலை உணர்ந்தும், இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் இளைஞர்கள் இரு சக்கர ஊர்திகளில் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

21 காவல்துறையினரை தனிமைப்படுத்திய புதுச்சேரி அரசு : உச்சகட்ட பரபரப்பு!

0

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று புதவை முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி இருந்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்தும் வேலைகளை அரசு தீவிரப்படுத்தியது.

இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்தை சேர்ந்த சிலர் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிய வந்தது. உடனே புதுச்சேரி மாநில அரசு அவர்களை பரிசோதனை செய்து அப்பகுதி சாலைகளை மூடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது.

இந்த நிலையில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ராகுல் அகர்வால், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 21 பேரை தனிமை படுத்திக் கொள்ள உத்தரவிட்டார். இந்த 21 காவலர்கள் அரியாங்குப்பத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பதால் இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.