Home Blog Page 5691

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

0

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

மக்களில் சிலருக்கு அவர்களது முன்னோர்கள் செய்த வினைகளால் தெய்வ குற்றம் உருவாகி இருக்கும். தற்காலத்தில் பலருக்கும் அது தெரியாமல் கூட இருக்கலாம். அதே போல தற்போது பெரும்பாலான பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை பிரச்னையும் முக்கியமானது. பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணம் தள்ளிப் போக காரணமாக உள்ள இந்த திருமண தடையை நீக்க எராளமான பரிகாரங்கள் உள்ளன.

குறிப்பாக ஜாதக நீதியான குறைகளை தான் பெரும்பாலான ஜோதிடர்கள் கூறி அதற்கான பரிகார முறைகளையும் செய்ய சொல்வார்கள். ஆனால் சிலரின் திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்பிறவியில் அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருக்கலாம். அவர் ஏதும் செய்யவில்லை என்றாலும், அவரது பெற்றோர் அல்லது முன்னோர்கள் தெய்வ குற்றம் ஏற்படும் அளவிற்கு எதாவது செய்து இருப்பார்கள்.

இந்நிலையில் இது போன்ற தெய்வ குற்றங்களால் கூட சிலருக்கு திருமணம் கைகூடி வராமல் தொடர்ந்து தள்ளி சென்று கொண்டே இருக்கும். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் என்பது பெரும்பாலும் பொதுவானது. ஆனால் சிலருக்கு எந்த தோஷமும் இன்றி தொடர்ந்து திருமணம் தடைப்பட்டு கொண்டே வரும். மேலும் இதுமட்டுமில்லாமல் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் எதாவது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருபவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் துர்க்கை அம்மன் சன்னதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியை கொண்டு நெய் தீபம் ஏற்றி அவர்களது கோரிக்கைகளை அம்மனிடம் வைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு உண்டான தெய்வக் குற்றம் நீங்கும். மேலும் அவர்களுக்கு சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

இவ்வாறு தெய்வ குற்றம் மற்றும் சாபத்தை போக்கும் மிகவும் சக்தி வாய்ந்த இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்து அனைவரும் பயனடையலாம். திருமண தடை மற்றும் தொழில் தடைகளுக்கு காரணமாக உள்ள தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான எளிய பரிகாரமும் இது தான்.

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

0

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் மார்ச் 8ஆம் தேதி நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 22 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் எனும் ஊர் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு இங்கு அனுமதியில்லை. டெல்லி மாநாட்டில் பங்கேற்றப் பலருக்குக் கொரோனாவிற்கான அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடமும் கேரளா இரண்டாமிடமும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

0

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் 10,000 மேற்பட்டோர் இறக்க நேரிட்டது. அமெரிக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தினம் கொரோனா தொற்று பாதிப்புள்ள புதிய நோயாளிகள் உருவாகிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்று முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், அங்குள்ள உணவுப் பொருள் சந்தைகள் மீண்டும் இயல்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. சீன மக்களின் உணவுப் பொருட்களை பார்த்தாலே பலருக்கு தலைசுற்ற ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு அவர்களின் உணவுப்பட்டியல் தயார் செய்யப்படும். ஆட்டின் விதை, வறுத்த தேள், பாம்பு, நாய், பல்லி, ஆக்டோபஸ், எலி, புழுக்கள், தவளை உள்ளிட்ட உணவுகளை மீண்டும் சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த உணவுப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் சந்தையில் விற்கும் பொருட்களை புகைப்படம் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவில் இருந்து மீண்ட சில நாட்களிலேயே பாரம்பரிய உணவுமுறைக்கு சீனர்கள் திரும்பியுள்ளது பலரிடையே வெறுப்பை உண்டாக்கியுள்ளது.

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!

0

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!

காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும் என்று அவரது குடும்பம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், ராகுல் என்ற மகனும் உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் உயிரிழந்த இராமச்சந்திரன் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்துடன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இராமச்சந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து திரும்பியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சென்றவர் அனைவரிடமும் நன்றாக பேசிவிட்டு நலமுடன்தான் சென்றிருக்கிறார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

0

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும்.

மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் இவ்வாறு புரிந்த பல சாதனைகளில் ஒன்றை 19 வருடத்திற்கு முன்பு இதே தேதியில் நிகழ்த்தியுள்ளார்.

அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இண்டோர் நகரத்திலுள்ள மைதானத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணியின் சார்பாக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஒருநாள் போட்டியில், கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் வீரரென்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நாளில் அவர் இந்த சாதனையை புரிய இவருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டது.

இதனையடுத்து இந்த சாதனையை தற்போது 205 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி நிகழ்த்தியுள்ளார். கடந்த 2018 ஆம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி சச்சினின் சாதனையை கடந்து முறியடித்துள்ளார். இந்நாள் வரை உலகளவில் வெறும் 14 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10000 ரன்களை கடந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

0

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இது வரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் 1251 நபர்களை தாக்கியுள்ளதகவும், அதில் 102 நபர்கள் குணமடைந்து விட்டதாகவும்,32 நபர்கள் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொருவரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ரூபாய்.1 கோடி நிதியுதவியாக அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அவர் தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய்.1 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் கொரளி வித்தைக்காட்டும் நடிகை : கிளுகிளு வீடியோவால் கிறங்கிபோன ரசிகர்கள்!

0

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அனைத்தும் செய்வதறியாது தவிக்கிறது. உலக சுகாதார மையத்தின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி நாட்டு மக்களை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கொரோனா பரவலை தடுக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் வீட்டிலேயே முடங்கி இருந்த சினிமா நடிகர்கள் சிலர் தாங்கள் அன்றாடம் பொழுதை எவ்வாறு கழிக்கின்றனர் என்று வீடியோ அல்லது புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இந்த வரிசையில் நடிகை ஆதா ஷர்மா தினம் ஒரு சேட்டையை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சளைக்காமல் பதிவிட்டு வருகிறார்.

இந்த நடிகை சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் அரைகுறை ஆடையுடன் தனது ரூமை துடைப்பதாக தெரிகிறது. அதில் அவர் ஈர துணியை வைத்து தலைகிழாக கண்ணாடியை துடைத்து தொடையழகை காட்டியும், யோகா செய்து பின்னழகை காட்டுவதும், படுத்து தரையை துடைக்கும் சாக்கில் முன்னழகை காட்டி கிளுகிளுப்பூட்டுகிறார்.

இதை எல்லாம் பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அந்த வீடியோவை வைரலாக்கிவிட்டு தான் மறுவேலை பார்த்தார்கள்.

https://www.instagram.com/p/B-HZw0YnSR_/?hl=en

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

0

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

கொரோனாவால் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்ப ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது தெலுங்கானா அரசு.

இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் போன்ற மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத ஊதியம் குறைக்கப்படுகிறது.

மற்றப் பணியாளர்களுக்கு 50 சதவீதமும் அரசு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் ஊதியம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இழப்பை ஈடுசெய்வதற்காக எடுத்திருக்கும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அண்ண நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

0

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அன்ன நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

ஆட்கள் யாரும் இல்லாத சாலையில் யானை ஒன்று அசைந்த நடந்து சென்ற வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் போக்குவரத்து, அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் தடை செய்யப்பட்டு அத்தியாவசியம் உள்ள மருந்தகம், மளிகைகடை, பெட்ரோல் பங்க், வங்கிகள், ஏடிஎம்-கள், காய்கறி சந்தை போன்ற இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் எந்த நடமாட்டமும் இல்லாமல் அநாதையாக உள்ளன.

இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் யானை ஒன்று யாருமே இல்லாத சாலையில் அமைதியாக நடந்து போகும் காட்சி பதிவாகியுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு யானை அமைதியாக ரோட்டில் நடந்து வந்து சிறிது தூரத்தில் கடைக்கு அருகேயுள்ள பகுதியில் சுற்றுமுற்றும் பார்க்கிறது. பின்னர் மீண்டும் எந்த சத்தமும் இல்லாமல் நடந்து செல்கிறது.

பதிவில் ஊரடங்கு உத்தரவு சரியாக நடக்கிறதா என்று யானை சோதனை செய்வதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வயநாட்டில் யானைகள் உலாவுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இந்த யானை நடக்கின்ற தொனி ஒரு அரசு அதிகாரியின் உடல்மொழியை நினைவு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றி மருத்துவமனையில் இருந்து சேட்டை செய்த விசித்திர பெண் : அதனை பார்த்த 3பேருக்கு நேர்ந்த விபரீதம்!

0

உலகம் முழுவதும் கொத்து கொத்தாக பல உயிர்களை கொன்று வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாட்டு மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து தமிழக அரசு கண்காணித்து வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரியலூரை சேர்ந்த பூஜா என்ற பெண் கொரோறா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தாலும் டிக் டாக்கில் வீடியோ போட்டு சோக கீதம் பாடி வந்துள்ளார்.

இவர் டிக்டாக்கில் வீடியோ போட்டதோடு நிறுத்தாமல் அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்களை அழைத்து அந்த வீடியோக்களை காட்டி தனக்கு வரும் லைக்குகளை காட்டி பெருமையாக பேசியுள்ளார். இந்தப் பெண் வீடியோ போட்டதால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பணியில் இருந்த 3 சுகாதார ஊழியர்களை தனிமைப்படுத்தி அரசு மருத்துவமனை கண்காணித்து வருகிறது.

இதனை பார்த்த மருத்துவ நிபுணர்கள் பூஜா தனிமையில் இருப்பதால் டிக்டாக் நோயை வென்று வர உற்சாகத்தை கொடுக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் பூஜாவின் போனை வாங்கி வீடியோக்களை பார்த்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யாத சுகாதார ஊழியர்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.