Home Blog Page 5696

கேரளாவில் முதல் பலி! தொடர்ந்து வரும் கொரோனாவின் கோரதாண்டவம்! முடிவு எப்போது.?

0

கேரளாவில் முதல் பலி! தொடர்ந்து வரும் கொரோனாவின் கோரதாண்டவம்! முடிவு எப்போது.?

கேரள மாநிலத்தில் முதியவர் ஒருவர் சளி மற்றும் இருமல் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றபோது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பால் தொற்று மட்டுமே இருந்த நிலையில் முதியவரின் இறப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தினசரி அதிகபட்சமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை 834 ஆக பெருகியது.
தொடரும் உயிரிழப்புகளின் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளை உடனடி மருத்துவ நடவடிக்கை எடுக்குமாறும், மக்களை பாதுகாப்பாக வீட்டிலே இருக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவிலும் ஒருவர் இறந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, மருத்துவ பரிசோதனையில் இருமல், சளி, காய்ச்சல் இருந்த காரணமும் கொரோனா தொற்றும் இருப்பதை மருத்துவர் உறுதி செய்தனர். இதன் பின்னர் தனி அறையில் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென முதியவர் இறந்தார். கேரளாவில் இதுவரை கொரோனாவில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வெளிநாட்டவர் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றிய ரயில்வேதுறை : அமைச்சர் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களால் குவியும் பாராட்டுக்கள்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் மருத்துவ துறையினரும் துப்புரவு தொழிலாளர்களும் தீவிர களப்பணியில் இறங்கினர். இதனால் மருத்துவர்கள் சளி காய்ச்சல் உள்ள நபர்களை பரிசோதனை செய்வதிலும் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபர்களை குணப்படுத்த நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் செய்யப்பட்டன. ஒருவேளை வைரஸ் தொற்று அதிகம் ஆனால் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்க நிறைய வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றம் செய்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரயில்கள் இயங்காத நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்ட காடுகளாக மாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனை பார்த்த மக்கள் ஒருமனதாக பாராட்டி வருகின்றனர்.

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

0

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவும் அதனால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை இந்திய அரசு அமல்படுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறது.இதற்காக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டியும் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது போலவும், இதனால் அவரது வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அது நீக்கபட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் தற்போது குழப்பம் ஏற்படுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கட்சி அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டிற்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு ஒட்டிய அந்த நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் நீக்கியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை கவுதமியின் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக நோட்டீஸ் ஓட்டுவதற்கு பதிலாக நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகம் செயல்படும் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் தான் தற்போது இந்த குழப்பம் ஏற்படுள்ளது என்று கூறப்படுகிறது.

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்த போது நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து வெளிநாடு சென்று வந்த நடிகை கவுதமி அங்கு இல்லை என்பதால் அங்கு ஓட்டபட்ட நோட்டீஸ் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

இது சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும்,நோட்டீஸ் ஒட்டபட்ட அந்த முகவரியில் தான் தங்கவில்லை என்றும் கட்சியின் அலுவலகம் தான் அங்கு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னை இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய ரயில்வே துறை : அமைச்சர் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியவும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிறரை தொடுவதால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஹேண்ட்சனிடைசர் எனப்படும் கிருமி நாசினியை கைகளில் தடவுமாறு கூறியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சில நிறுவனங்கள் தரமற்ற முகக்கவசம் மற்றும் போலி கிருமிநாசினிகளை தயாரித்து விற்பனைக்கு விடுவதாக தகவல்கள் எழுந்தன.

இவ்வாறான சூழலில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரயில்வே துறை ஊழியர்கள் தரமான மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரயில்வேத்துறை அமைச்சரை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளையாட்டாக அந்த படத்தை கேட்ட ரசிகர்! முழு விருப்பத்துடன் அனுப்பிய நடிகை! (படம் உள்ளே)

0

விளையாட்டாக அந்த படத்தை கேட்ட ரசிகர்! முழு விருப்பத்துடன் அனுப்பிய நடிகை! (படம் உள்ளே)

நடிகையிடம் அந்தரங்கத்தை படத்தை அனுப்புங்கள் என்று கேட்ட ரசிகருக்கு அவரது விருப்பத்தை போலவே நடிகை படத்தை அனுப்பிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை சினிமா, போட்டோஷூட் எடுத்த படங்களை வெளியிடுவது மற்றும் தேவையான போது சமூக கருத்துகளையும் இணையங்களில் வெளியிடுவது வழக்கம்.

பிரபல சினிமா நடிகை ஆஞ்சல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த பதிவின் கீழ் ரசிகர் ஒருவர் உங்களது மேலாடை மார்பகத்துடன் ஒரு படத்தை அனுப்புங்கள் என்று கேட்டார். இதை கவனித்த நடிகை, ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றுவதை போல அவருக்கு விருப்பத்துடன் மார்பக மேலாடை புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

நடிகையின் புகைப்படத்தை பார்க்கள் ஆவலாக இருந்த ரசிகருக்கு நடிகை அனுப்பிய போட்டோவும் செண்ட் ஆனது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் மண்டையில் தேள்கொட்டியது போல் அதிர்ச்சியானார்.

விளையாட்டாக அந்த படத்தை கேட்ட ரசிகர்! முழு விருப்பத்துடன் அனுப்பிய நடிகை! (படம் உள்ளே)

நடிகை மார்பக மேலாடையில் தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்து போட்டோ எடுத்து ரசிகருக்கு கிண்டலாக அனுப்பியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர் இனி எந்த நடிகையிடமும் அந்தரங்க புகைப்படத்தை கேட்கமாட்டார் என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை என கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆலோசனை வழங்கி உள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அவற்றைத் தாண்டி, கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பல ஓட்டைகள் இருப்பதாக மத்திய அரசே எச்சரித்திருப்பதும், அதை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவியிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எவருமே வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று திரும்பியவர்கள் அல்ல. அவர்களில் இருவர் மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆவர். மேலும் இருவர் ஈரோட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர், சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஆனால், சென்னையிலிருந்து அரியலூர் சென்ற 25 வயது பெண்மணி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது இளைஞர், 73 வயது முதியவர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இவர்கள் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இல்லை. கொரோனா பரவலின் முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கான எந்த வரையரைக்குள்ளும் வராத மூவருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. கொரோனா பரவலின் மூன்றாம் நிலைக்கு தமிழகம் சென்று விட்டதோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

இந்த ஐயத்தை, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா எழுதியுள்ள கடிதம் உறுதி செய்கிறது. ‘‘இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை தொடங்கப்பட்ட ஜனவரி 18-ஆம் தேதியிலிருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த 15 லட்சம் பேரில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை; இது இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்’’ என்று கூறியிருக்கிறார். இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சூழலில் இந்தியாவில் சமூகப் பரவல் நிகழ்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதைத் தடுக்க இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைபிடிப்பது தான் ஒரே தீர்வு ஆகும். பெரும்பான்மையான மக்கள் நாட்டையும் காக்க வேண்டும், நம்மையும் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஊரடங்கு ஆணையை செம்மையாக கடைபிடித்து வருகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததாலோ, அலட்சியம் காரணமாகவோ பலர் ஊரடங்கு ஆணையை மீறி, சாலைகளில் நடமாடுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க மறுப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா தான் இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் கணித்தது. ஆனால், மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக இடைவெளி நடைமுறை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பை 9332 பேருடனும், 132 உயிரிழப்புகளுடனும் கட்டுப்படுத்திய தென்கொரியா, இயல்பு நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா ஆபத்தை மிக எளிதாக முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவும், இத்தாலியும் முறையே உலகிலேயே அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காதது தான். இந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா அல்லது அமெரிக்கா, இத்தாலியாக மாற வேண்டுமா? என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ஆகவே, மக்கள் ஊரடங்கை முழுமையாக மதித்து நம்மையும், நாட்டையும் காக்க வேண்டும்.

அதேநேரத்தில் நாள் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் பிற்பகல் 2.30 மணி வரை தான் திறக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது நல்ல நடவடிக்கை ஆகும். தமிழகத்தின் பல நகரங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை தொலைபேசி மூலம் அவர்களுக்கு பிடித்த கடைகளில் ஆர்டர் செய்தால், அவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் படுவதையும், மக்கள் ஒருவர் கூட வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

CoronaVirus #CoronaPandemic #SocialDistancing

கமல் வீட்டில் கொரோனா எச்சரிக்கை வாசகம் ஒட்டிய மாநகராட்சி : பதற்றத்தில் ரசிகர்கள்!

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 24 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அபாயம் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்தவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இந்தநிலையில் நடிகர் கமலஹாசனின் வீட்டு வாசலிலும் ‘கொரோணா எச்சரிக்கை நாங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளோம்’ என்ற வாசகம் மாநகராட்சியால் ஒட்டப்பட்டது. இந்த தகவல் வேகமாகப் பரவி கமல் ரசிகர்களுக்கு மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்தபோது மாநகராட்சி ஊழியர்கள் அருகிலிருந்த வீட்டில் ஒட்டுவதற்கு பதிலாக கமலின் வீட்டில் தவறுதலாக ஒட்டப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த தகவலைக் கேட்டு உறுதி செய்த பின்னரே நடிகர் கமலின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.??

0

இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.??

இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு வணிக மற்றும் அத்தியாவசிய தேவையற்ற கடைகள் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நிலையில், மக்களுக்கு தேவையான மளிகைகடை, பால்விநியோகம், பெட்ரோல் பங்க், மெடிக்கல் மற்றும் மருந்தகம் சார்ந்த கடைகளுக்கு மட்டுமே அரசு திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்திய மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் ஆணுறை விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை பகுதியின் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழலினால், அத்தியாவசிய பொருட்களைப் போலவே ஆணுறை விற்பனையும் வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பினால் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தினால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதில் மக்கள் கவனமாக உள்ளனர்.

பொதுவெளி மற்றும் பொழுதுபோக்கான இடங்களில் செல்லவும் முழுத்தடை உத்தரவு இருப்பதால் பலர் குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடும் சூழல் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் சுகாதார பொருட்களை வாங்கி குவித்த மக்களிடையே ஆணுறை விற்பனை இப்போது மிக அதிகளவு நடந்துள்ளது. நாட்டின் பல்வேறு மருந்தம் மற்றும் சில்லறை கடைகளின் மூலம் 20% விற்பனையில் இருந்து 50% வரை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தென் மும்பையில் மருத்துவ/மருந்தக கடை உரிமையாளராக இருக்கும் ஹர்ஷல் ஷா என்பவர் முக்கிய தகவலை கூறியுள்ளார். மக்கள் தற்போது அதிக நேரம் வீட்டில் இருப்பதன் காரணமாக சலிப்படைந்து இருக்கிறார்கள். எப்போதும் சிறிய அளவிளான ஆணுறை பேக்குகளை வாங்கும் மக்கள் தற்போது பெரிய அளவிளான பேக்குகளை வாங்குகிறார்கள். இதனால் ஆணுறை விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 3 அல்லது 4 பேக்குகளை வாங்குபவர்கள் தற்போது பத்து எண்ணிக்கையிலான பேக்குகளை வாங்குவதாக கூறியுள்ளார்.

டெல்லி குருகிராமில் உள்ள மெடிகோசில் உள்ள தினேஷ்குமார் ஷர்மா கூறுகையில்; கடந்த சில நாட்களாக ஆணுறை மற்றும் கருத்தடை சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற பொருட்களை ஆண்களை விட டெல்லி பகுதி பெண்கள் அதிகம் வாங்குவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

0

கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பானது மேலும் பரவி நாட்டு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

மக்கள் நலன் கருதி மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது மக்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் என அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நிதி சலுகைகளை மற்றும் நிவாரண அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.

Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

அந்த வகையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், கொரோனா வைரசால் ஏற்படும் பொருளாதார பின்னடைவை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் அதன் ஒரு பகுதியாக எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாச காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. மேலும் 3 மாதங்களுக்கு அவர்களுடைய EMI கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் இது மட்டுமல்லாமல் வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15%ல் இருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது.

Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

இந்நிலையில் பொதுமக்களுக்கு EMI செலுத்துவதில் சலுகை அளித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததில் பல சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக இந்த சலுகை கிரெடிட் கார்டு கடன்கள் வாங்கியவர்களுக்கு பொருந்துமா? என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கடன்கள் சுழலும் கடன் (revolving credit) என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு நிவாரணம் அளிக்கப்படமாட்டாது. மேலும் டெர்ம் லோன் என்ற பிரிவின் கீழ் கிரெடிட் கார்டு கடன்கள் வராது என்பதால் கிரெடிட் கார்டு கடன்களுக்கு தொடர்ந்து இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். ரிசர்வ் வங்கி அளித்த சலுகை கிரெடிட் கார்டு கடன்கள் வாங்கியவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!!

0

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சி மற்றும் திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தின் நடிகர் பிரபாஸ் 4 தருவதாக கூறியுள்ளார்.

உலகளவில் 24,000 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சீனாவின் வூகானில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதிக உயிர்பலியை உண்டாக்குவதோடு தினமும் மக்களிடையே தொற்று அதிகரித்து வருகிறுது. இதன் விளைவாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில் கொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள சினிமா திரைப்பட பிரபலங்கள் பலர் ஆதரவுக்கரம் நீட்டியது அரசு மற்றும் மக்களிடையே ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸ், கொரோனா நிவாரண நிதியாக 4 கோடி ரூபாயை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கான முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும், மீதமுள்ள 3 கோடி ரூபாயை இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரைப்போலவே நடிகர் பவண்கல்யாண் 2 கோடியும், ராம்சரண் 70 லட்சமும், சிரஞ்சீவி 1 கோடியும், மகேஷ்பாபு 1 கோடியும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிவாரண நிதிகளின் மூலம் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள், புதிய நோயாளிகளுக்கான படுக்கை மற்றும் பிற ஏற்பாடுகள் செய்ய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.