Home Blog Page 5706

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு

0

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை தடுக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 275 ஆக உள்ளது. இதேபோன்று தென்கொரியா, சிங்கப்பூர். பாகிஸ்தான், மெக்சிகோ மொரிஷியஸ் நாடுகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால் உலகில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தையும் இந்த கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும் இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கபட்ட இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் ரயில் நிலையங்கள், விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

0

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை . இந்தியாவில் இதுவரை 298 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பரவுதலை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் நாளை நடத்தப்படும் ஊரடங்கு உத்தரவுவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் மிகச் சிக்கலான மூன்றாம் நிலை பொருளாதார சமூக பரவலை தடுக்க நாடு தயாராகி வருகிறது.
கொரோனா வைரஸை தடுக்க இதே போன்ற தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்தது. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததால் அரசின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர் இதேபோன்ற நெருக்கடியான நிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டாம்.அதனால்தான் ஒவ்வொருவரும் இந்த ஊரடங்கு உத்தரவை ஏற்று கொண்டு வீட்டிலேயே இருப்பது மற்றும் சமூக தொடர்பில் இருந்து விலகி இருப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற நெருக்கடியான காலகட்டங்களில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும். இதனால் நாளை மாலை 5 மணி அளவில் நடைபெறும் இறைவணக்கத்தில் பங்குபெற வேண்டும் . இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

0

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் பல மருந்துகளை உட்கொண்டதாகவும் அவை பலனளிக்கவில்லை என்றும், தமிழக மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின் மூலிகை மருந்தை உட்கொண்டதன் மூலம் தனக்கு பெருமளவு காய்ச்சலும், சளியும், இருமளவும் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=3556225401058300&id=100000126265349

சித்தமருத்துவரின் முகநூல் பதிவும், வெளிநாட்டு நபரின் வீடியோவும் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அவரது பதிவின் தொடர்ச்சி;

வெற்றி வெற்றி வெற்றி
…………………………….
நமது தமிழர் மரபு மூலிகை சிகிச்சை மூலம் குணமான கொரோனோ நோயாளர் ( சுவிசிலிருந்து காணொலி)
பரப்புங்கள் . மருந்து மாபியாக்களால் பரப்பப்படும் பயத்தை போக்குங்கள் . கொரோனோ குணமாக்கலாம் . குணமாகும். குணமானது.
சித்தர் க திருத்தணிகாசலம்
rathnasiddha@gmail.com
9962812345
9092888888
மருந்து மாபியாக்கள் ஆட்சியாளர்களோடு சேர்ந்து நடத்தும் அட்டூழியத்திற்கு எதிரான போர்.

போர்களத்தில் நான் . என்னோடு கைகொடுங்கள். உங்கள் ஆதரவு இப்போது தேவை

நாளை இதற்காக ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாக்குங்கள் மக்களை காக்க

( என்னை கிண்டல் செய்த ஊடகங்கள் இந்த செய்தியை தயவு செய்து வெளியிடாதீர்கள். உங்கள் ஆண்டை அமெரிக்க செய்தியை வெளியிடலாம்)

https://m.facebook.com/story.php?story_fbid=3556225401058300&id=100000126265349

எச்சரிக்கையுடன் இருங்கள் கொரோனாவிடம் இருந்து மட்டுமல்ல திருடர்களிடமும் தான் : அரசு அறிவுறுத்தல்!

0

உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு சுகாதார துறையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும் பொது மக்கள் தேவை இன்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாரத பிரதமர் மோடி 22 மார்ச் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு ௯ மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் போல நடித்து திருடர்கள் சிலர் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இதன் நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசாங்கத்தில் இருந்து வீடுகளில் மருந்து தெளிக்க எந்த குழுக்களும் ஒதுக்கப்படவில்லை, தயவுசெய்து கவனமாக இருங்கள். வைரஸிலிருந்து பாதுகாக்கவோ, வீடுகளுக்கு மருந்து தெளிக்கவோ, வீடுகளை ஆய்வு செய்யவோ எந்தவொரு தரப்பினருக்கும் பொறுப்பேற்பதாகக் கூறும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ கதவைத் திறக்க வேண்டாம்.

தயவுசெய்து அனைத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எச்சரிக்கை விடுங்கள், இந்த முறையால் மோசடி பேர்விழிகள் பல வீடுகளில் திருடிவிட்டனர், அப்படி யாராவது வந்தால் உடனடியாக உங்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பொறுப்புணர்வை நிருபிக்கும் நேரமில்லை; சவாலை முறியடிக்கும் நேரம்: அரசுகளை கடிந்து கொண்ட மூத்த தலைவர்!

0

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளதால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொடர்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், நடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்கள் ஒத்திவைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்றாலும், இதனால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மனிதர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதாலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால், ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அதேபோல், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்ட தமிழக முதலமைச்சர், அடுத்த மாதம் 9&ஆம் தேதி வரை கூட்டம் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் முடிவு அவர்களின் பொறுப்புணர்வைக் காட்டலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் கொரோனா நோய் சவாலை முறியடிக்க எந்த வகையிலும் உதவாது. மாறாக, இதை பின்பற்றி பொது மக்களும் வெளியில் அதிகமாக நடமாடத் தொடங்கினால் அது நோய்த்தடுப்பு பணிகளை பாதிக்கும்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் தலைநகர் தில்லி மிகக்குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் பகுதியாகும். அதன் காரணமாக நேற்றிரவு வரை 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் கூட்டம் என்ற பெயரில் இரு அவைகளையும் சேர்த்து 788 உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுனர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேவையின்றி தில்லியில் குவியச் செய்வது கொரோனா நோய் தடுப்புக்கான அடிப்படைகளையே தகர்க்கும் செயலாகும்.

அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிலையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவை செயலக வளாகத்திலும் பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு உறுப்பினருடனும் குறைந்தது இருவராவது தலைமைச் செயலக வளாகத்திற்கு வருகின்றனர். அமைச்சர்களின் உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என குறைந்தது 2 ஆயிரம் பேராவது அவை நடைபெறும் நேரத்தில் அந்த வளாகத்தில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வளாகத்தில் அவர்களின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் கடினம் என்பதால் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளி தான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு கூடினாலும் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 3 அடி இடைவெளி அவசியம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற அவைகளாக இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையாக இருந்தாலும் மூன்று அங்குல இடைவெளி கூட இல்லாமல் மிகவும் நெருக்கமாகத் தான் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி கொண்ட அவைகளில் வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், நமது மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையின் ஒப்புதலை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமரும், முதல்வரும் நினைப்பதில் தவறில்லை. இன்னும் கேட்டால் அவர்களின் இந்த உணர்வு பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், அவர்களின் பொறுப்புணர்வே நாடாளுமன்றம், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நோய் தொற்றுவதற்கும், அவர்களை சார்ந்தவர்கள் கூடுவதால் நோய் பரவுவதற்கும் வழிவகுத்துவிடக் கூடாது. எனவே, நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி பிரதமரும், தமிழக முதலமைச்சரும், அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

0

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

காம இச்சைக்காக பத்து வயது சிறுமியை கற்பழித்து மூன்றாவது மாடியில் இருந்து வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயல் அருகே உள்ள எம்எம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெண் குழந்தை நேற்றிரவு வீட்டுக்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், குழந்தை காணாமல் போன சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து குழந்தை அவரது வீட்டின் பின்புறம் தூக்கி வீசப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வல்லுறவு நடந்ததை உறுதி செய்தனர். பின்னர் கற்பழித்து வீசிய நபரை தேடியபோது சுரேஷ் என்ற இளைஞர் சிக்கினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுமியை 3 வது மாடிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

0

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

இந்தியாவில் நாளை தேசிய ஊரடங்கு உத்தரவு இருப்பதன் தொடர்ச்சியாக இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
27.03.20 முதல் 13.04.20 வரை நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு அதாவது 15.04.20 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடத்து வருகின்றன.
11 ஆம் வகுப்பிற்கு 23.03.20 மற்றும் 26.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் 12 ஆம் வகுப்பிற்கு 24.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பீதியில் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமாக புகைபிடிக்கும் வாலிபர் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

0

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகமே பீதியில் ஆழ்ந்துள்ளது, இதனால் பல்வேறு நாடுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2 லட்சத்து ௭௭ ஆயிரத்தை கடந்துள்ளது, இதில் 11 ஆயிரத்து 474 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நோய் தொற்றில் இருந்து எவ்வாறெல்லாம் நம்மை தற்காத்து கொள்வது என்று உலக நாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதை பார்த்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்யும் கைவைத்தியங்கள் தான் இணையதளம் முழுவதும் காணக்கிடைக்கிறது.

அதில் சிலர் செய்யும் நூதன நடவடிக்கைகள் தான் இணையதள வாசிகளுக்கு பொழுது போக்கு. அது மாதிரி ஒரு வீடியோவில் ஆப்ரிக்க இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து நூதனமாக புகைபிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் தனது முகமூடியில் ஓட்டை போட்டு புகைபிடிப்பது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது பின்னர் அந்த ஓட்டையை முடி போட்டு மறைகிறார். இந்த வைரல் விடியோவை பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை

0

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை

டி.என்.பி.எஸ்.சி என்று சொல்லப்படுகின்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசிற்கு தேவையான அனைத்து நிலை பணியாளர்களையும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் ஒற்றை வாய்ப்பாக இந்த அரசுத்தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிவரும் அடுக்கடுக்கான முறைகேடுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் அதிர்ச்சியில் இருந்து தேர்வர்கள் மீளாத நிலையில் இன்றைக்கு புதிதாக ஒரு தேர்வு முறைகேடும் அம்பளமாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் குறிப்பிடுள்ளதாவது:

எனது மகன் கடந்த 2018 ஆம் அண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதிய ஒருசில வாரங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரகயில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எனது மகன் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவருக்கு விரைவில் பணிநியமன ஆனை கிடைத்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு சிவா என்பவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 27 இலட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே உங்களுடைய மகனுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவிதுள்ளார். இதனை அடுத்து சண்முகமும் அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு அவர்களை தொடர்புகொண்டு சண்முகம் கேட்டபோது அதிகாரிகளுக்கு பணம் போய் சேர்ந்து விட்டது விரைவில் பணிநியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரித்த போலீசார் டி.என்.பி.எஸ்.சி இன் அதிகார்ப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் சிவா என்பவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் இவருக்கு உதவியவர்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரமணி மற்றும் இடைத்தரகர் நாகேந்திரராவ் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் இந்த மூவரையும் தேடி வருகின்றனர்.

தொடரும் முறைகேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் அனைத்து வித சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த டி.என்.பி.சி. தலைவர் நந்தகுமார் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை தேவை என்பதே தேர்வர்களின் கருத்தாக உள்ளது.

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது

0

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் அறிகுறி குறித்தும் அது பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் கமிஷனர் ஏ .கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல் கமிஷனர் எச். எம் ஜெயராம் ,இணை கமிஷனர் ஏ.ஜி. பாபு , துணை கமிஷனர் தர்மராஜன் ,சென்னை போலீஸ் மருத்துவமனை டீன் டாக்டர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது. கொரோனா குறித்து யாராவது வதந்தி பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் இதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் இணை கமிஷனர் தலைமையிலான சிறப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஒருநாள் விழிப்புணர்வு காணொளி காட்சிகள் அடங்கிய வாகன ரோந்தையும் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார் . மேலும் அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் 23 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.