Home Blog Page 5707

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

0

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

நந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் கடந்த திசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்திருந்தார். நந்தினி சீரியல் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட சீரியலாகும். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதோ சில இடங்களில் கவர்ச்சியாக நடித்து பலரை கவர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவருக்கும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் நித்யாராம் தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கணவன் மனைவி இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியினை வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது விழிப்புணர்வு புகைப்படமா அல்லது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறுகிறாரா என்கிற வகையில் அப்புகைப்படம் பேச வைக்கிறது.

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

இதுவரை கொரோனாவால் 10,000 பேர் இறந்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியில் பலாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை விரட்ட நாளை (மார்ச்-22) தேசிய ஊரடங்கு உத்தரவை அந்தந்த ஊரில் கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி தனது உரையின் மூலம் கூறினார். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் சீனாவில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கவில்லை என்றும் ஒற்றை இலக்க பாதிப்படைந்தோரே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

0

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கவும் ஆரம்பகட்ட நுழைவு தேர்வான NEET எனப்படும் “தேசிய தகுதி நுழைவுத் தேர்வு” கடந்த 2010 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை உருவானது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களை வைத்தே நீட் தேர்வுக்கான சேர்க்கை நடைபெற்று வந்த காரணத்தால் தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளிடையே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தமிழக அரசின் பாடத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருப்பதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான தேர்ச்சி பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது இந்த குறைபாடுகளை களைத்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையிலும் புதிய அறிவிப்பு ஒன்றை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில், தமிழக தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க “சிறப்பு சட்டம்’ கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.







கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

0

கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

கள்ளக்காதலனை பிரிய மனம் இல்லாமல் அவருக்கு தனது மகளையே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், தனது அத்தை மகள் மஞ்சுளா என்பவரை 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 19 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலையை கண்ணன் செய்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு கண்ணன் அவரது சொந்த ஊரான வந்தவாசி அருகேயுள்ள தென்னகரத்தில் கட்டட வேலை செய்தபோது அங்கிருந்த பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து பெண்ணை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் பொழிச்சலூரை சேர்ந்த கண்ணன்தான் சிறுமியை அழைத்துச் சென்றார் என்று தெரியவந்தது.

இந்நிலையில், கண்ணனை தேடி போலீசார் விரைந்தபோது கண்ணன் சென்னையில் இருந்து தப்பியுள்ளார். நீண்ட தேடுதலுக்கு பிறகு பெங்களூரில் இருந்த கண்ணனை கைது செய்து அவருடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். பெண்ணின் எதிர்காலம் பாழாகும் என்பதால் சங்கர் நகர் போலீசார் கண்ணனிடம் கண்டிப்புடன் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரையுடன் கூறி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்ற கண்ணன், அங்கு வேலைபார்த்த யுவராணி என்பவருடன் அடிக்கடி பேசி தனது கள்ளக் காதலை வளர்த்துள்ளார். இந்த சம்பவம் ஒரு வருடம் கழித்தே கண்ணனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் பிறகு கண்ணனின் முதல் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி முதல் மனைவியுடன் கண்ணனை அனுப்பி வைத்தனர்.

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது கள்ளக்காதல் கண்ணன் தொடர்ந்தார். இருவருக்குமான உறவை முதல் மனைவி பிரித்துவிடுவாரோ என்று எண்ணி தனது 19 வயது மகளை கண்ணனுக்கு அவரது கள்ளக்காதலி திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையறிந்த கண்ணனின் முதல் மனைவி விரக்தியுடன் காவல்துறையில் புகார் கூறினார். இதனையடுத்து தனது முதல் மனைவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுத்த காரணத்தாலும் கர்ணன் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தவறான உறவிற்கு பெற்ற மகளையே கள்ளகாதலனுக்கு திருமணம் செய்தி வைத்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.

0

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எனினும் கடந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இதனை அடுத்து நீட் தேர்வில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அதாவது கிராமப்புற பள்ளிகளிலோ, நகராட்சி பள்ளிகளிலோ, மாநகராட்சி பள்ளிகளிலோ அல்லது ஆதிதிராவிடர் நல பள்ளிகளிலோ ஒன்று முதல் பனிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் ஒன்று அமைக்கப்படும் அவ்வாணையம் இந்த சட்ட முன்வடிவை கொண்டுவர அரசுக்கு தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும். அந்த குழுவில் கல்வித்துறை சார்பில் இரண்டு கல்வியாளர்களும் நலவாழ்வுத்துறை சர்ந்த அதிகாரிகளும், சட்டத்துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் இவ்வாணையம் ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனவும்‌ முதல்வர் பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: முதலமைச்சர் அதிரடி!

0

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த ஆணையம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய முதலமைச்சர், உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில்சட்ட முன்வடிவு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஆல்யாவின் அழகான பெண் குழந்தை! வாழ்த்து மழையில் நனையும் காதல் தம்பதி..!!

0

ஆல்யாவின் அழகான பெண் குழந்தை! வாழ்த்து மழையில் நனையும் காதல் தம்பதி..!!

சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் டிவியின் ராஜாராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும்.

சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஆல்யமானசா கர்ப்பமான சூழலில் அவருக்கு சிறப்பான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் அந்த காதல் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது “குட்டி ஆல்யா” பிறந்துள்ளார் என்று கூறலாம். இதனை தனது இன்ஸ்டாகிராமில் ஆல்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. “தாயும் சேயும்” நலமாக உள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை என்று கூறியுள்ளார்.

மேலும் சஞ்சீங் பப்பு குட்டிக்கு இன்னொரு பப்பு குட்டி வந்தாச்சு என்றும் குதூகலமாக பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடியை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

கொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம்! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.

0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புறம் சாலைகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக ஒரு மருத்துவகுழு ஒன்று கொரானாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை மக்களிடம் விளக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம்! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம், முகக்கவசம், சேனிடைசர், சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

0

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக்கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர்களின் அடுக்கு மொழி நடையில் அமைந்த பேச்சுதான். பெரியாரின் இரண்டாம் திருமணத்தால் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கிய அண்ணா அவர்கள் தனது வீசீகரமான பேச்சாற்றலலாலே மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர்.

பல நேரங்களில் அவரது பேச்சு பாமர மக்களுக்கு புரியாத போதும் அவரது பேச்சு நடையை மட்டுமே ரசித்து கேட்டதும் உண்டு. அவர் வழி வந்த கருணாநிதி அவர்களும் தனது பேச்சாற்றலாலே வளர்ந்தவர். இவ்வாறு திராவிட இயக்கம் என்றால் அவர்களின் முக்கிய அடையாளமே பேச்சு தான். இதே பாணியில் இடையில் வந்த தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் போன்றவர்களின் பேச்சு மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் அன்றைக்கு சமூக ஊடகங்களின் வளர்ச்சி இல்லாததால் அவர்களின் கீழ்ந்தரமான பேச்சு மக்தளிடையே செல்லவில்லை.

அதே பாணியில் இன்றைக்கு பேசி வருபவர் திமுகவின் செய்தித் தொடர்பாளர் பிரசன்னா உணர்ச்சி பொங்க எதிர் கட்சிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடும் பிரசன்னாவின் பேச்சுக்களை இன்றைக்கு சமூக ஊடகங்களில் திமுகவிற்கு பெரும் இழப்பாக திமுக தலைமைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பலமுறை தலைமையால் எச்சரிக்கப்பட்ட பிரசன்னா தற்போது ஜமாத்திடம் 50000 பெற்றுக்கொண்டு சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பேசியது தெரியவந்துள்ளதால் கடும் கோபம் கொண்டு இந்த பிரச்சனையை துரைமுருகன் அவர்களிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கி உள்ளார்.

எப்பாடியாவது மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமாகி கட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிட வேண்டும் என்று எணிணிய
பிரசன்னாவுக்கு தற்போது செய்தித் தொடர்பாளர் பதவியும் பறிபோகும் நிலை வந்துள்ளதால் மிகுந்த கலக்கத்தில் உள்ளாராம்.

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

0

மேற்கு வங்கத்தில் ஆறு மாதத்திற்கு அரிசி இலவசம் மம்தா அறிவிப்பு

கொரோனோ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய அரசாங்கம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு பல்வேறு கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால் மக்கள் வேலைக்கு செல்ல இயலாததால் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த மேற்கு வங்க அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் ஆறு மாதத்திற்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் பேசிய மம்தா அவர்கள் அரசின் சார்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அரசு சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட உள்ளது இதில் தன்னார்வலர்கள் நிதி செலுத்தலாம் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன்3 நிகழ்ச்சியில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டவர், பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது, மேலும் கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம்(பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படம், இந்த படத்தில் லாஸ்லியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் 2014ம் ஆண்டு லாஸ்லிய தனது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/oSX6D4dEfTc