Home Blog Page 5733

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

0

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக முதல் ஆளாக களம் இறங்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

சிஏஏ போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். அங்கு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனர். இதைப்போலவே கோவையில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்றது.

டெல்லி வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்பாளர்களுக்கு இடையே பெரும் வன்முறை ஏற்பட்டு இந்தியாவின் தலைநகரமே பற்றி எரிந்தது. இதில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு பல இந்துக்கள் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்து உதவினர். இந்த வன்முறை சம்பவத்தில் 35 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரேமலாத விஜயகாந்த் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், சிஏஏ இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் கொண்டுவரப்பட்டது என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்றும், மேலும், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக களத்தில் இறங்கும் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் நான் முதல் ஆளாக போராடுவேன் என்று ரஜினிகாந்த் சொன்னது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

0

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இதில் சாதாரன இளநிலை உதவியாளர் தேர்வு முதல் துணை ஆட்சியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதும் அதன் மூலம் தகுதியற்ற நபர்கள் அரசு ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.அதில் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும்,ஆதார் கார்டு எண் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

இருந்தபோதிலும் அதில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டது குரூப்-4 தேர்வுக்கு முதல் நிலை மற்றும் முதன்மை என இரண்டு நிலைகளாக தேர்வு நடைபெரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தேர்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.காரணம் முதல்நிலை தேர்வு மட்டுமே உள்ள நிலையில் அவர்கள் தாங்களாகவே தேர்வுக்கு தயார் செய்ய இயலும்.ஆனால் முதன்மை தேர்வு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரத்தியேகமான பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என அச்சப்படப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத் தலைவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதிலானது: முதன்மை தேர்வு மட்டுமே நடத்தப்படும் பட்சத்தில் தேர்வர்கள் மனப்பாடம் செய்யும் திறன் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்று வேலைக்கு வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் கடிதம் எழுதுதல் முறையான வழியில் பதில் அளித்தல் அறிக்கை தயாரித்தல் போன்ற அடிப்படை தகுதிகள் கூட இல்லாமல் இருப்பதாலேயே இந்த முறைக்கு மாற்றப்பட்டதாகவும், மேலும் முதன்மை தேர்வு என்பது சுருக்கி எழுதுதல் விவரித்து எழுதுதல் பத்தியை படித்து விடையளித்தல் போன்றவை மட்டுமே இடம்பெரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசில் இதே பத்தாம் வகுப்பு தகுதிக்கு நடைபெரும் தேர்வில் முதல்நிலைத் தேர்வு முதன்மை தேர்வு தட்டச்சு தேர்வு என பல்வேறு நிலைகளில் நடைபெருகிறது.அந்த அளவிற்கான நெருக்கடியை தேர்வர்கள் மீது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்தினர். பாஜக கொடியுடனும் மற்றும் காவி கொடியுடனும் பலாயிரம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியை போலீசார் உடனடியாக தடுத்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியா, மாவட்ட தலைவர்கள் பி.எம். பால்ராஜ், பி.ராமமூர்த்தி மற்றும் இந்து முண்ணனியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா எம்.பி அவர்களும் கலந்துகொண்டார். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைதாங்கினார்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறை தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு காவல்துறையின் மூலம் சரியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

0

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சம் இரண்டு நாட்கள் இடைவெளியில் வீரர்கள் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் பல வீரர்கள் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் இதில் கொழிக்கும் பணத்தின் காரணமாக இதில் விளையாட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தேசிய அணிகளுக்காக போட்டிகளில் விளையாடும் போது அதிக சோர்வாகக் காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஐபிஎல் போட்டிகளைப் பற்றி சர்ச்சையானக் கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளால் சோர்வாகக் கருதினால் அந்த போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார். இந்த கருத்தானது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

பிசிசிஐக்கும் கபில்தேவ்வுக்கும் இடையே பிரச்சனை உருவாகி அவர் ஐசிஎல் எனும் கிரிக்கெட் தொடரை ஆரம்பித்து நடத்தினார். அதுதான் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அதன் பிறகு இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டு கபில்தேவ் பிசிசிஐ உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் இந்த கருத்து இப்போது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

0

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி ஒளிப்பதிவாளர் மது மற்றும் உணவு தயாரிப்பாளர் சந்திரன் ஆகிய  3 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் இந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகர் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். தனது டிவிட்டரில் ‘மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து தூக்கம் வருவதில்லை. நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மீண்டும் ஒரு கடிதம் மூலம் தன்னுடைய அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷங்கரின் கடிதம்:-

இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.

ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன்.

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.  எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.

கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், திரு சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
ஷங்கர்.

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

0

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லியுள்ளார்.

டி 20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நேரம் மற்றும் அதிக சம்பளம் ஆகியவை மட்டுமில்லாது ரசிகர்களின் ஆதரவும் டி 20 போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது என்பதும் காரணம். இதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாண்டு உடலை வருத்த விரும்பாத வீரர்கள் ஏதேனும் இரு வடிவிலான போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புகின்றனர்.

இப்போது அதே போல ஒரு இளம் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இதே முடிவை எடுத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் அவர் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி வரும் இவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

அதற்குக் காரணம் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றுதான் ‘மூன்று வடிவிலான போட்டிகளிலும் தற்போது விளையாடி வருகிறேன். ஆனால் வெள்ளைப்பந்து  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது எளிதானது. அதனால் அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். உடல் தொடர்ந்தார் போல 4 ஓவர்கள் வீசுவதை மட்டுமே விரும்புகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து யோசனை செய்து வருகிறேன்’ என சொல்லியுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பேட் கம்மின்ஸ் 143 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளிலும் 28 டி 20 போட்டிகளிலும் விளையாடிய அவர் முறையே 98 மற்றும் 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இதுபோல ஏதாவது ஒரு வடிவில் ஓய்வு பெறுவது பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் ஓய்வு பெற்றால் அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்.

மரணமடைந்தார் திமுக வின் முன்னோடி – சோகத்தில் ஒட்டுமொத்த திமுக

0

மரணமடைந்தார் திமுக வின் முன்னோடி – சோகத்தில் ஒட்டுமொத்த திமுக

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஒருவாரம் முன்பு இருதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் பின்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதயத்துடிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவருக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் எனினும் அவரின் நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன்அவர்கள் இன்று காலை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர் 57 வயதானவர் மேலும் 2019 ஆம் ஆண்டில் மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத நிலையில் அவரது மரணம் அனைவரையும் சொகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி அவர்கள் மரணமடைந்தார்.அவரது இறுதிச்சடங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த மரணமே திமுக நிர்வாகிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலையும் மிகவும் மோசமானதாக உள்ளதால் என்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் எனவும் நான் பிறந்தநாள் விழா கொண்டாடும் மனநிலையில் இல்லை எனவும்,பிறந்தநாள் அன்று என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருத்ததார்.

இவ்வாறு தொடர்ந்து சோகமான செய்திகளை கேட்டு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளதாக திமுக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்

0

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்

கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருந்த படம் தான் திரௌபதி. டிரைலர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் எடுக்கபடுவதே தெரியாத நிலையில் டிரைலர் வெளியான பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன்.ஜி இயக்கத்தில், நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிசி மற்றும் டூ லெட் பட கதாநாயகியான ஷீலா ராஜ்குமார் நடிப்பில்,மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் காதல் மற்றும் ஆணவ கொலைகள் குறித்து சமீபத்தில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் நாடக காதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று இயக்குனர் கூறியது தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. அந்த வகையில் படம் ஆரம்பிக்கும் போதே மனைவி மற்றும் அவருடைய தங்கையை ஆணவ கொலையை செய்ததற்காக கதாநாயகன் கைதாகி சிறைக்கு செல்வது போன்ற காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.

சிறைக்கு சென்ற கதாநாயகன் வெளியில் வந்தாரா? ஆணவ கொலையின் பின்னணி என்ன? அதற்கு காரணமானவர்கள் என்னவானார்கள்? காதல் என்ற பெயரில் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றபடுகிறார்கள்? பெண்ணின் சம்பந்தமேயில்லாமல் செய்யப்படும் போலி பதிவு திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதிலே இந்த படம்.

படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தன்னுடைய இயல்பான நடிப்பால் ருத்திர பிரபாகரன் என்ற கதாபத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். திரௌபதியாக வரும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் அனல் பறக்கும் வசனங்களால் தெறிக்கவிடுகிறார். சென்னையில் நிகழும் படத்தின் முதல் பாகம் முற்றிலும் கதாநாயகனை சுற்றியே நிகழ்ந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரசியத்துடன் அற்புதமாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் மோகன்.ஜி.முதல் பாதியில் வரும் ஒவ்வொரு கட்சிகளிலும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரில்லர் படத்தை பார்க்கும் அனுபவத்தையும் கொடுத்துள்ளார்.

பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் பிற்பாதியில் சமூக ஆர்வலராக வரும் கதாநாயகி ஷீலா மூலமாக இயக்குனர் பல்வேறு செய்திகளை செய்ய முயற்சித்துள்ளது ஆவண படம் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் அனல் பறக்கும் அதிரடி வசனங்களால் அதையெல்லாம் மறைத்து இரண்டாம் பாகத்தையும் விறுவிறுப்பாக எடுத்து சென்றுள்ளார். அதே போல படிக்கும் பெண்களை காதல் என்ற பெயரில் ஒரு சிலர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? எதைக் காட்டி ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்தும், அரசியல்வாதிகள் தங்கள் பழியை தீர்த்து கொள்ள பெண்களையும், காதலையும் எப்படியெல்லாம் பயன்படுத்திகிறார்கள், மேலும் ஆணவக் கொலைகளுக்கு உண்மையான காரணம் யார்? என்பது குறித்து தெளிவாக காட்டியுள்ளார்கள்.

தன்னுடைய மகள் காதலனுடன் சென்று விட்டாள் என்பதை அறிந்து அவருடைய தந்தை தற்கொலை செய்து கொள்ளும் காட்சி தமிழகத்தில் நடந்த பல்வேறு தற்கொலைகளை நினைவுபடுத்துகிறது.இறுதியாக வரும் நீதிமன்ற காட்சியில் நடிகர் கருணாஸ் வழக்கறிஞராக சிறப்பாக நடித்துள்ளார். பதிவு திருமணம் செய்ய அவர் கூறும் சட்ட திருத்த ஆலோசனைகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நீதிமன்ற விசாரணை காட்சியில் போலி பதிவு திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தகப்பனாக வரும் மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதியின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு அனைவர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.

ஒவ்வொரு படத்திற்கும பலம் சேர்ப்பது பின்னணி இசை தான் அந்த வகையில் இசையமைப்பாளர் ஜுபின் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இரண்டு பாடல்களே இருந்தாலும் இரண்டும் காதில் ஒலித்து கொண்டே இருக்குமாறு அமைத்துள்ளார். குறிப்பாக குக்குக்குக்கூ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பல இடங்களில் குறும்படம் போன்ற உணர்வை தந்தாலும் தன்னுடைய எடிட்டிங் மூலம் அதையும் மறைத்து சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேவராஜ்.

படத்தின் பலம்:

திரைக்கதை

பின்னனி இசை மற்றும் பாடல்கள்

அதிரடி வசனங்கள்

கதாபத்திரங்கள் தேர்வு ( குறிப்பாக வில்லன் கதாபத்திரங்கள் பார்வையாளர்களுக்கு சிலரை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது)

படத்தின் பலவீனம்:

பின்னணி குரல்

சில இடங்களில் செயற்கைதனமான வசனங்கள்

பிற்பாதியில் ஆவண பட உணர்வு

ரசிகர்கள் எதிர்பார்த்த டிரைலரிலிருந்த பல அதிரடி வசனங்கள் சென்சாரால் நீக்கப் பட்டது

திரௌபதிக்கு நமது மதிப்பெண் : 75/100

இதுவரை தமிழ் சினிமாவில் விரட்டி விரட்டி காதல் செய்வது, காதலுக்கு எதிராக பெண்ணின் பெற்றோரை சித்தரிப்பது, சாதியே இல்லை என போலித்தனமான காட்சிகளை வைப்பது போன்றவை தொடர்ந்து வந்துள்ள நிலையில் சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என குறிப்பிடும் இந்த திரௌபதி திரைப்படம் அதற்கெல்லாம் சவுக்கடி கொடுப்பது போல அமைந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் திரௌபதி வெளியாகும் பல்வேறு திரையரங்குகள் முன் பிரபல ரசிகர்கள் நடித்த படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை போலவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

கேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

0

கேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

சென்னையில் வாழும் 90 சதவீத மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்கு உதவுவது கேன் குடிநீர் என்பது தெரிந்ததே. கேன் குடிநீர் வீடுகளில் மட்டுமின்றி ஹோட்டல்களிலும் டீ கடைகளிலும் கூட உபயோகப்படுத்தப்படுகிறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் இன்று மாலை 6 மணி முதலே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் சங்கங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் ஒரு சில நாட்கள் நீடித்தால் சென்னை மக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி கேன்குடிநீர் சங்கங்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?

0

தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?

சீனாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் தினமும் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் தமிழகத்திலும் சிலரை பாதித்து உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் மரபு வழி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களை, கொரோனா வைரஸை குணப்படுத்த சீன அரசின் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை அவரது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் ஒரு மனிதனை எப்படி கொல்கிறது. எந்த உறுப்பினை முதலில் தாக்குகிறது என்பதை ஆதாரங்களுடன் தமது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். கொரோனா வைரஸ் சிறுநீரகத்தை முதலில் செயலிழக்க செய்கிறது என்றும், பின்னல் கல்லீரல் செயலிழப்பதையும் கூறியுள்ளார். இந்த உடலுறுப்புகள் செயலிழப்பதை சித்த மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

என்னால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்று ஏற்கனவே ஊடகங்களில் சாவல் விடுத்துள்ளார். சீன அரசின் அழைப்பை ஏற்று விரைவில் கொரோனா வைரஸை குணப்படுத்த சீனாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் சித்தமருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும், கடந்த வருடம் தமிழகத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 500- க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மூலிகை சிகிச்சையின் மூலம் காப்பாற்றியுள்ளார். வெறும் 24 மணி நேரத்தில் டெங்கு நோயை குணப்படுத்துவது இவரது சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். பல்வேறு நோய்களுக்கு இயற்கையின் வழியில் தீர்வு காண முடியும் என்று பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.