Home Blog Page 5868

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

0

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் உயிர் இழந்த ஒருவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று பணியாளர் விரைவில் நியமிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான டிரான்ஸ்பர் ஆர்டர் வெளிவந்தது. இதில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றி உயிரிழந்த முத்துக்குமாரின் பெயர் முதல் பெயராக இடம்பெற்று இருந்தது. அவர் சிவகாசியில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து நகராட்சி அலுவலக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துபோன ஒருவருக்கு டிரன்ஸ்ஃபர் ஆர்டர் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

0

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் அந்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது

‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்தியை சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது

‘சில்புரோ’ என்ற பாடல் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலாக நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும், இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார் என்ற செய்தி இப்பொழுதுதான் வெளிவந்திருப்பது தனுஷ் ரசிகர்கள் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது

தனுஷ் குரலில் வெளிவரவிருக்கும் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

0

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.

மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 20 ரூபாய் அதிகரித்து 3646 ரூபாய் ஆகவும்.

ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 160 ரூபாய் அதிகரித்து ஒன்றுக்கு 29168 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3807ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 38070 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையை விட கிராம்க்கு 21 பைசா அதிகரித்து ரூபாய் 48.11க்கும் 1கிலோ 210 ரூபாய் அதிகரித்து ரூபாய் 48110 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு!

0

இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகில் விஜய் மற்றும் தனுஷ் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் அதே போல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த ஒரு மணி நேர இடைவெளியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முதலில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அந்த படத்தின் குழுவினர்களும் அதேபோல் விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளிவரும் என்றும் அந்த படத்தின் குழுவினர்களும் அறிவித்துள்ளனர்

அடுத்தடுத்து இரண்டு பெரிய மாஸ் நடிகர்களின் படங்களின் அறிவிப்புகள் இன்று வெளிவரவுள்ளதை அடுத்து இன்று மாலைக்கு மேல் டுவிட்டர் என்ன பாடுபடும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை

மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படலாம் என கருதப்படுகிறது

அதேபோல் ’தளபதி 64’ படத்தின் டைட்டில் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவதை அடுத்து அந்த செய்தி உறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி

0

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி

திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கண்டனங்கள் எழுந்தன.

இதற்கு முன்பு திமுகவினர் மீது இதை விட மோசமான விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற திமுக தலைமை நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினர். 

திமுக தலைமையின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் ராதாரவி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அனைவரின் எதிர்பார்ப்பையும் உண்மையாக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்து கொண்டார். இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அதிமுகவில் சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் தற்போது அங்கிருந்தும் விலகிய நடிகர் ராதாரவி, இன்று திடீரென தேசிய கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil
Chinmayi Questions BJP In Radharavi Joining-News4 Tamil Latest Online Political News in Tamil

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வந்த நடிகர் ராதாரவியை எந்த அடிப்படையில் பாஜக ஏற்று கொண்டது. மேலும் இதன் மூலமாக பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜக கூற விழைவது என்ன என்பது குறித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைமையிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் மூலமாக நடிகர் ராதாரவிக்கு எதிராக பாடகி சின்மயி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தரப்பு இதற்கு என்ன காரணத்தை கூறப் போகிறது என்றும் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

0

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 11-ஆம் தேதி இறுதி விசாரணை. ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுறையை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் என்ன படவில்லை என்றும்.

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் வழக்கில் அவர் கூறியிருந்தார். இதைப்போன்று தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது அதன்படி செப்டம்பர் 4 ஆம் தேதி ஐகோர்ட்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதற்கிடையே ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பத்துறை தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

பின்னர் இந்த தடை நவம்பர் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை வருகிற டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகு மீண்டும் மூல வழக்கை நடத்த ஐகோர்ட்டை அணுகக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

0

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

நம் தாத்தா பாட்டி காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தது 10 பிள்ளைகளாவது இருப்பர். இந்நிலை நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி, பின், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி, தற்போது குழந்தை வரத்திற்காக, ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோம். ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சாப்பிடும் உணவு விஷமானது தான் மூல காரணம் என்றால் மறுப்பதற்கில்லை.

குறிப்பாக பெண்கள் மகப்பேறு விஷயத்தில் சந்திக்கும் விஷயங்கள் சொல்லி மாளாது. நீர் கட்டி, ரத்தக் கட்டி, கருக்குழாய் அடைப்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் சமீப காலமாக பெண்களை ரொம்பவே அச்சுறுத்தும் ஒரு விஷயம், பிசிஓஎஸ் எனும் (பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரம்) சினைப் பை நீர் கட்டி. இதனால் குழந்தைப் பேறு கேள்விக்குறியாகிறது. ’பாலி சிஸ்ட்’ என்றால், நிறைய கட்டிகள் என்று பொருள்.

Polycystic Ovary Syndrome-News4 Tamil Latest Online Health Tips in Tamil
Polycystic Ovary Syndrome-News4 Tamil Latest Online Health Tips in Tamil

இப்பிரச்சினை, பெண்கள் பருவமடையும் போதே துவங்கி விடுகிறது. 10 ல் 5 பெண்களுக்கு பிசிஓஎஸ் பிர்ச்சினை உள்ளது. குறிப்பாக, 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அதிக உடற்பருமன் இந்த பிரச்சினைக்கு, மூல காரணம் என்ற போக்கு நிலவுகிறது.

இந்த பிசிஓஎஸ் பிரச்சினை பெண்களின் சினைப்பையை தாக்குவதால், பெண்களின் மாதவிடாய்க்கு உதவக்கூடிய முக்கிய ஹர்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டிரான் சுரப்பிலும், கரு முட்டையை உற்பத்தி செய்யக் கூடிய, FSH, LH ஹார்மோனிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், சீக்கிரமாகவே மாதவிடாய் நாட்கள் முடிவுறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. பிசிஓஎஸ் பிரச்சினையாது, சினைப்பையில் சிறிய அளவில் ஆண்களின் ஹர்மோன்களான ஆண்ட்ரோஜனை சுரக்க வைக்கிறது.

நாளடைவில், பெண்களுக்கான ஹார்மோன் உற்பத்தி குறைந்து, ஆண்களுக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் பிசிஓஎஸ் உள்ள பெண்களின் முகத்திலும், மார்பிலும் முடி வளர்ச்சி காணப்படுகிறது. இப்பிரச்சினை வருவதற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும் உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்கும் போது, இது போன்ற பிரச்சினைகளைக் களையலாம்.

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

0

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் சதமடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் முதலில் இரட்டை சதத்தை அடித்து, அதன் பின் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்தார். அவர் 39 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 335 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்காமல் இருந்தார்

அதேபோல் லாபிசாஞ்சே 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 589 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களும், வேட் 38 ரன்களும் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் ஆப்ரிடி மட்டுமே 3 விக்கெட்டுகளை எடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்பது மட்டுமன்றி யாசீர் ஷா என்பவர் 32 ஓவர்களில் 190 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்

இதனை அடுத்து தற்போது ஷான் மசூத் 8 ரன்களுடனும் அசார் அலி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தற்போது பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது

இன்னும் மூன்று நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ககுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் யார்?

0

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் யார்?

வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகளுக்கு இடையேயான 3 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் 8ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 16ம் தேதியும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் 18ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 28ஆம் தேதி நடக்கிறது.

இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பொல்லார்ட் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் யார்?


அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஏற்கனவே இந்த ஆண்டின் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்று தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

0

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது டிசம்பர் 20ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் என்றும்

டிசம்பர் 23ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் தற்போது அமைச்சர்களாக உள்ள ராமச்சந்திரா வன்சி காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் ஊரான் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.