வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2025
Home Blog Page 5870

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

0

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்தி வருகிறது.

கடந்த கால தமிழக அரசியலில் பாமக தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதிமுக,திமுக என எந்த கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைக்க போட்டி போட்டு முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் அந்த அளவிற்கு பாமகவும் செல்வாக்குடன் இருந்தது. போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு பாமகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.

பாமகவுடன் கூட்டணி அமைக்க முடியாத விரக்தியில் எதிர்கட்சியாக இருப்பவர்கள் பாமகவை மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள் என்று விமர்சனம் செய்தது மக்கள் மத்தியில் நன்றாக பதிந்து விட்டது. இது மட்டுமல்லாமல் தொகுதி மறு சீரமைப்பில் பாமக வெற்றி பெரும் வாய்ப்புள்ள பல்வேறு தொகுதிகளில் அவர்களின் வாக்குகள் பிரிந்து விட்டதும் முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. அதன் பிறகு பாமக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டது. மாற்றம் முன்னேற்றம் என அவர்கள் நடத்திய ஹைடெக் பிரச்சாரம் படித்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.அன்புமணி ராமதாஸ் மீது படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகியது. இது அப்போதைய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. பிரச்சாரத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை பாமக தான் தீர்மானித்தது. 

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்களுக்குக் குறைவாகவே உள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலுள்ள பாமக 2021 இல் நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிரடி வியூகத்துடன் களமிறங்க ஆரம்பித்து விட்டது பாமக. தற்போதுள்ள அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என ஏற்கனவே அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள நிலையில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவே வேண்டும் என தீர்மானித்து வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

அதாவது இதற்காக வகுத்துள்ள இந்த வியூகத்தின் படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றிருக்கிறது.  இந்த அமைப்பிற்கு அன்புமணியின் முப்படைகள் செயல் திட்டம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் வட மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு மருத்துவர் ராமதாஸ் கூறும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவது, அதில் குறைந்தது  60 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்த வியூகத்தின் நோக்கம் என்கிறார்கள். 

இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 பேர் கொண்ட அன்புமணி தம்பிகளின் படையையும், 1,000 பேர் கொண்ட அன்புமணி தங்கைகளின் படையையும் உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படையை உருவாக்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 200 கிராமங்கள் இருக்கும். ஒரு கிராமத்தில் 10 அன்புமணி தம்பிகளையும் 5 அன்புமணி தங்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2000 அன்புமணி தம்பிகளும், 1000 அன்புமணி தங்கைகளும் கிடைப்பார்கள். இதில் ஒவ்வொரு அன்புமணி தம்பியும் தங்களது தெருவில் 50 வாக்காளர்களை அன்புமணி மக்கள் படையில் சேர்க்க வேண்டும். 2,000 பேரும் தலா 50 பேரைச் சேர்ந்தால் நமக்கு 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை கிடைக்கும். அவர்கள் நமது வாக்கு வங்கியாக விளங்குவார்கள்.

இவர்களுக்கு வயது 17-35க்குள் இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 10ஆவது படித்திருக்க வேண்டும் எனவும், அன்புமணி தம்பியாக முக்கிய தகுதியாகக் கட்சியின் வெறிகொண்ட செயல் வீரராக இருக்க வேண்டும் என்றும், 50 வாக்காளர்களைக் கட்சியில் சேர்க்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

பாமக செயல்படும் வேகத்தை பார்க்கும் பொது குறைந்தது கடந்த காலங்களில் பெற்ற அளவிற்காவது வரும் தேர்தலில் தொகுதிகளை பிடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

0

ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தருக்கு தற்போது மாணவ மாணவியர் தற்கொலை என்ற ரூபத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாகவே சென்னையை அடுத்துள்ள மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் கல்லூரி கட்டிடங்களில் இருந்து மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  

ஆரம்பத்தில் இது மாணவர்களின் சொந்த பிரச்சனை என்று நினைத்தவர்களுக்கு தொடர்ந்து நடந்த தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரே கல்லூரி நிர்வாகத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து எப்படி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக இறந்த மாணவர்களின் உறவினர்களும்,பெற்றோர்களும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில் தான் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் இது போன்ற தற்கொலை மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி சார்பாக எஸ்.பி. மல்லிகா தலைமையில் எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகள் மற்றும் அதன் விடுதிகளில்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை தலைவர் அதாவது DGP அலுவலகத்திலிருந்து பத்திரிக்கை செய்தியும்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனுப்பிரியா 21 வயதேயான இவர் கடந்த மே மாதம் 26-ம் தேதி கல்லூரியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அதேபோன்று 27-ம் தேதி அன்று ஜார்கண்டை சேர்ந்த மாணவன் அணித் சவுத்ரி என்பவரும் கல்லூரியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15-ம் தேதி ஜூலை மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் என்ற மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தான் தமிழக சிபிசிஐடி காவல் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். 

இந்த விசாரணைக்கான உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி தலைவரும்,எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் தலைவராகவும் உள்ள பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை சம்பந்தமான பிரச்சனையிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்த நிலையில் இந்த கல்லுரி மாணவர்களின் தொடர் தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி சோதனை அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில்,அடுத்து திமுகவின் கூட்டணி கட்சியின் எம்.பியாக உள்ள பாரிவேந்தர் மாணவர்களின் தற்கொலை வழக்கில் சிக்குவாரோ? என்று பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழக காவல் துறை அதிகாரிகள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

0

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு தைரியமான முடிவு என்று பெரும்பாலான மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த மாநில பிரிவினைக்கு தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக டெல்லியில் கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என்றும் பாராட்டியுள்ளனர். அது போல் நடிகர் கமலஹாசன் இந்த காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கும் என்று அதிமுக அரசை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கூறுகையில் காஷ்மீரை போல் தமிழகத்தையும் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் வடதமிழகம் தென் தமிழகம் என இரண்டாக பிரித்துவிடுவார்கள். புதுவை போல் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

0

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தியுள்ளதாகவும், தலைவர்களை கைது செய்து அவர்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது.

“அமைதி திரும்புகிறது” என்று, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து – தொலைத் தொடர்புகளைத் துண்டித்து – காஷ்மீரில் “அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை” செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை 14 நாட்களுக்கு மேலாக கைது செய்து – வீட்டுக் காவலில் வைத்து – அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாத சூழலில், காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரையை ஏற்று சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்துள்ளதோடு, அடக்குமுறை, ஊரடங்கு உத்தரவு என காஷ்மீரை, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்திவிட்டு, ‘காஷ்மீரில் சாதித்துவிட்டோம்’ என கூறிவருவது ஒருவகை அரசியலே!

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து – இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பாஜக அரசு என்பதைப் பார்க்கும் போது – இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவைக் கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பது தெளிவாகிறது.

தேசத் தந்தை மகாத்மாக காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel1
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel1

எனவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்

0

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தராத வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்போதே விழா ஏற்பாடுகளில் பொதுமக்களும் இந்து அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சிவா என்பவர் மின்னணு சாதனங்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது கடைக்கு சென்ற விஷ்வ ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணர் சிலை வைத்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் சிவா 300 ரூபாய் கொடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்த அந்த அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்டோர் அந்த கடையின் உரிமையாளர் சிவாவை தாக்கியுள்ளனர்.

மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் 5 பேர்களின் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து அமைப்பினரின் இந்த அராஜக செயலை கண்டித்து #BJPரவுடிசம் என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

0

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

தற்போது தமிழக மக்களிடம் அதிக விவாத பொருளாக இருப்பது பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் உயர்வு, பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்து விட்டதால், தேனீர், ஐஸ்கிரீம் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர‌ அதிகம் வாய்ப்பு உள்ளது!

இந்நிலையில் இந்த பால் விலை உயர்வை கண்டித்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர், அதிலும் முக்கியமாக திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் பால் விலை உயர்வை கண்டித்து டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்!

மேலும் அவருடைய தங்கையான தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழியும் இந்த பால் விலையேற்றத்தை கண்டித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பால் விலை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் ஆனால் இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தாமல் இருக்குமா என்று சட்டமன்றத்திலேயே அதுவும் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே கலாய்த்தார்.

இது அவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது! திமுகவின் நிலைப்பாடும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தான் ஆனால் மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விட்டது தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டு விட்டு அறிக்கை விட்டாரா என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்த வண்ணம் இருக்கின்றனர்! இது தான் முன்னோர்கள் சொன்ன பழமொழியான ” குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதா” என்பதற்கான அர்த்தமோ?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

0

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

கடந்த முறை பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது முதல் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய ஆட்சியை ஏற்படுத்த அக்கட்சி முயற்சித்து வருகிறது.

இவ்வாறு பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும், அக்கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பாஜக தலைமையிலான அரசு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்திலும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த சாதகமான சூழ்நிலையில் பாஜக தங்களை தமிழகத்தில் வளர்த்து கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து போட்டியிட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தாலும் தமிழகத்தில் படு தோல்வியை தழுவியது. இதற்கு பாஜக மீதான தமிழக மக்களின் எதிர்ப்பு தான் என்று காரணமாக கூறப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை கணிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக எடுத்த பிரச்சார யுக்தி தமிழக மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளது. மேலும் திமுக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில அளிக்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கடைசியாக நடந்து முடிந்த வேலூர் தேர்தல் முடிவே இதனை உண்மை என்று உறுதி செய்யும்.

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தாலும், இந்த வேலூர் தேர்தல் முடிவு அவர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணியை அமித் ஷா துவக்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், ரஜினி கலந்து கொண்டார். அதன் பின்னர் அவரிடம் பேசிய அமித் ஷா பாஜகவில் ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். அதற்காக உங்களை, தமிழக பாஜக தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியிடம் பேசிய அமித்ஷா தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிதாக கட்சி தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து விடலாம் என தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

0

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது தான் புகைப்பட கலை. அந்த வகையில் அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதியை, “உலக புகைப்பட தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடம் புகைப்படத்திற்கு 175 வது ஆண்டு. புகைப்படம் என்பது வெறும் ஒரு படம் அல்ல. அது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கலை. பல கருத்துக்களை ஒரே படத்தில் வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. மேலும் உலகளவில் இந்த புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இந்த புகைப்படத்தின் பயன்பாடு இருக்கிறது.

வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், அரசியல் மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, எதிர்காலத்தில் பின்வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான்.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்டு 19 இல் பிரான்ஸ் அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “ப்ரீ டூ தி வேர்ல்டு’ என்று உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த புகைப்பட கலையின் சிறப்புகளில் சில:

மனிதர்கள் ஆயிரம் வார்த்தைகள் பயன்படுத்தி சொல்வதை ஒரு புகைப்படம் சுலபமாக உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்போடு கூடிய ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட புகைப்படக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.

உலகிலேயே
சிறந்த நிழல் படம்…
காலம் தின்ற
கண்ணாடிக்குள் கரையான் அரித்த
அட்டையில்
ஒட்டியிருக்கும்
என் அம்மாவின்
சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை வரலாறு

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்

1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.
புகைப்படம்: மதன்

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

0

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல சோதனைகளுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் புறக்கணிப்பு, மக்கள் நலக் கூட்டணி என அரசியலில் ஒரு சுற்று பயணமே செய்து விட்டு தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தான் தீவிரமாக எதிர்த்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். தற்போது, இந்த கூட்டணியின் ஒப்பந்தத்தின்படி 25 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்  மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நியூட்ரினோ, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், அரசியலில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருப்பதாலும், மேலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திடீரென்ற இந்த உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுகவின் அறிக்கையில் தெரிவித்தள்ளது. 

மேலும், மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்த வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் சரி என்று பேசிய திமுக எம்.பி கனிமொழியின் கருத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காகவும், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் திமுகவின் அத்தொகுதியின் எம்.பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றார்.

தூத்துக்குடிக்கு சென்ற திமுகவின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “அதிமுக ஆட்சியை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. எந்தக் காலத்திலும் இது செயல்படக் கூடிய ஆட்சியாக இருக்காது. தப்பித் தவறி நல்ல விஷயங்கள் நடந்தால் கூட, அது தனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று அமைச்சர் கூறக்கூடிய அளவிற்கு மோசமாக உள்ளது. ஆகவே ஆட்சி மாற்றம் மட்டும் தான் இதற்கு விடையாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதற்கு பதிலளித்த அவர், “ஆட்சி மாற்றம் வரும்போது தான் அனைத்திற்கும் தீர்வு வரும் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி சொல்லி ஓய்ந்து போய், தற்போது அவருடைய சகோதரி கனிமொழி சொல்ல ஆரம்பித்துவிட்டார். தற்போது அவர்களுடைய குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினை நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

நடந்து முடிந்த வேலூர் தேர்தலின் பிரச்சாரத்திற்கு ஏன் தங்களை அழைக்கவில்லை என்று கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சினை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை தான் தற்போது உள்ளது. கனிமொழி சொல்லும் மாற்றம் என்பது திமுக கட்சியில் வரப்போகும் மாற்றத்தைத் தான் சொல்கிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்