ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog Page 5893

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

0

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து  அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிக அளவில் அ.தி.மு.க வில் சேர்ந்து வருகின்றனர். இது அமமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதால் அவருக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக அதிமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் நம்பினர். ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான  இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், இந்த தேர்தல் முடிவு அமமுகவிற்கு சோதனையாக அமைந்தது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 5 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை மேலும் இரண்டாமிடத்திற்கும் வர முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் தொகையை கூட பறி கொடுத்தது. இதைக்கண்ட  தினகரன் ஆதரவாளர்கள் இனிமேலும் அவருடன் இருந்தால் அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என முடிவெடுத்து தாய் கழகமான அ.தி.மு.க.,வில் சேர துவங்கி உள்ளனர்.

இந்த வாரத்தில் அமமுகவின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  புறநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலர், சின்னத்துரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலர், ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர்.

அவ்வாறே தர்மபுரியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி செயலர், முனுசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலர், அசோக்குமார், அரூர் பேரூராட்சி செயலர், திருவேங்கடம், மாவட்ட இலக்கிய அணி இணை செயலர், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தெற்கு மாவட்ட பேரவை செயலர், பாலசுப்ரமணியன், இணை செயலர், ராஜாராம், திருவண்ணாமலை ஒன்றிய செயலர், அப்பாதுரை, நகரச் செயலர், பாஸ்கர் மற்றும் பல நிர்வாகிகளும் அமமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இவ்வாறு தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் விரைவில் கட்சியே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

0

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பயனுள்ள பரிந்துரை ஆகும். அதேபோல், பள்ளிக்கல்வியை வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது ஆகும். இவற்றை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

அதேபோல், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும், பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். இதன் மூலம் கல்விக்கட்டணக் கொள்ளைகள் தடுக்கப்படும். அதேபோல், மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தேர்வுகளை எழுதலாம்; மதிப்பெண்களை உயர்த்த மறுதேர்வு எழுதலாம் என்ற பரிந்துரைகளும் பயனளிப்பவையாகும்.

அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. 1968-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்நடைமுறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப் பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப்பாடத்திட்ட பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையுயில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மும்மொழிக் கொள்கையை மாநில பாடத்திட்ட பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படும் என்பதற்கு அறிகுறிகள் வரைவுக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது திருப்தியளிக்கிறது.

இந்தி பேசாத மாநிலங்கள் மீது ஒருபோதும் இந்தி திணிக்கப்படாது என்று 55 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார். ஆனால், அதை மீறி பள்ளிகள் வாயிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் விரும்பி இந்தியைப் படிப்பது வரவேற்கத்தக்கது. மாறாக, இந்தியை கட்டாயப்பாடமாக்கி விருப்பமில்லாத மாணவர்கள் மீதும் திணிப்பதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; இருமொழிக் கொள்கை தான் தங்களின் நிலைப்பாடு என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது.

மத்திய அரசும் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். குறிப்பாக எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா? ரசிகர்கள் அதிர்ச்சி

0

திருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா? ரசிகர்கள் அதிர்ச்சி

இலண்டனை சேர்ந்தவரான நடிகை எமி ஜாக்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஐ, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லண்டனில் வசித்து வருகிறார். 

நடிகை எமி ஜாக்சன், திடீரென்று தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் தொடர்ந்து இவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த கட்டமாக தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக மருத்துவர் ஸ்கேன் செய்யும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய 23 வார குழந்தையை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். எமி ஜாக்சன் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

லண்டனில் இருந்து பறந்து வந்து, சென்னையின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய ‘மதராசபட்டினம்’ படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தவர் எமி ஜாக்சன்.

இவர் இந்த படத்தை தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் மட்டுமே நடித்து வந்தார். மேலும் ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் இவர் நடித்து வருகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த, பிரபல தொழிலதிபரை காதலித்து வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி தெரிவித்தார். இதை அறிவித்த சில நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த தகவல் இரண்டு மாதங்களுக்கு பின்பு தான் தெரியவந்ததாகவும் கூறி தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

https://www.instagram.com/p/ByDwfCdHryU/?igshid=kui6mwxno023

இந்நிலையில் 23 வாரங்கள் ஆன தனது குழந்தையை மருத்துவர் ஸ்கேன் செய்யும் வீடியோவை ரசிகர்களுக்காக நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

0

பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார்.

இங்கு அன்புமணி ராமதாஸ் கடந்த 5 வருடங்களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்றே பல்வேறு தரப்புகளிலும் கூறப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பல்வேறு இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள்.

திமுக சார்பாக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. மேலும் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் நகைகளையெல்லாம் இலவசமாக மீட்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தது. இது பெண்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வாக்குகளாக மாறியது.

இந்நிலையில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் படு தோல்வியை தழுவி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டது. தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே ஆட்சியே மீண்டும் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு வழக்கு தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் சட்டப்படி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மனுதாரரான என்னை கேட்காமல் இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்துள்ளார்.

தருமபுரியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் எட்டு அந்த தொகுதி மக்கள் வழிச்சாலையால் பாதிக்கபட கூடாது என்று செயல்பட்டு வரும் நிலையில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் செந்தில்குமார் சமீபத்தில் இணையத்தில் பிரபலமாக்கப்பட்ட நேசமணியை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதைக்கண்ட தொகுதி மக்களும் பாமகவினரும் சமூக வலைத்தளங்களில் அவரை கேள்விகளை கேட்டு விமர்சித்து வருகிறார்கள்.அவரும் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி வருகிறார். இது மட்டுமில்லாமல் தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக MP செந்தில்குமார் நன்றி தெரிவிக்க பதிவிட்டத்தில் கூட அந்த தொகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டது மேலும் சர்சைக்குள்ளானது. எது எப்படியோ பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் திமுக MP செந்தில்குமாருக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் யாராவது சரியாக செயல்பட ஆலோசனை கூறினால் நல்லது.

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி

0

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி

இலண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாட்டிங்காமில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகிறது. 

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அனுமதித்தார். பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் கூட பேட்டிங்கில் சிறப்பாக ஆடியிருந்தாலும், அந்த அணி கடைசியில் கலந்து கொண்ட 11 போட்டிகளில் எதிலும் வெற்றி பெறவில்லை. 

எனவே தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்நிலையில் ஒரு வெற்றி நிச்சயமாக அவசியம் என்ற நிலையில், ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் களத்திற்கு வந்தனர். ஃபகார் ஜமான் அதிரடியாக தொடங்க, தொடக்கம் முதலே திணறிய இமாம் உல் ஹக், 11 பந்துகளில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து கோட்ரெலின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதன் பிறகு ஃபகார் ஜமானுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இந்த இணையில் ஃபகார் ஜமான் விக்கெட்டை 6வது ஓவரில் ரசல் வீழ்த்தினார். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை அடித்த ஃபகார் ஜமான், ஆண்ட்ரே ரசலின் எக்ஸ்ட்ரா பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். ஃபகார் ஜமான் அந்த பந்தை புல் ஷாட் அடிக்க நினைத்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பியதால் ஹெல்மெட்டில் பட்டு அப்படியே ஸ்டம்பில் அடித்து ஆட்டமிழக்க செய்தது.

இவரையடுத்து களத்திற்கு வந்த ஹாரிஸ் சொஹைலையும் ரசலே வீழ்த்தினார். இதுவும் ஒரு அபாரமான பவுன்ஸர். சொஹைல் வெறும்  8 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவரில் வெறும் 45 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்ததை அடுத்து கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த ஜோடியும் அதை செய்ய முடியவில்லை. 

Cricket-world-cup-2019-opening-ceremony-to-begin-at-London-today-News4-Tamil-Online-Tamil-News-Sports-News-Cricket-News-Live-Updates-Today2
Cricket-world-cup-2019-opening-ceremony-to-begin-at-London-today-News4-Tamil-Online-Tamil-News-Sports-News-Cricket-News-Live-Updates-Today2

14 வது ஓவரை தனது இரண்டாவது ஓவராக வீசிய ஒஷேன் தாமஸ், அந்த ஓவரில் பாபர் அசாமை 22 ரன்களில் வீழ்த்தினார். 62 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸும் சேர்ந்து அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் சர்ஃபராஸ் அகமதுவும் அவரை தொடர்ந்து இமாத் வாசிமும் ஹோல்டரின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் கோல்டன் டக் அவுட்டானார். இதையடுத்து வெறும் 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. எனவே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கப்போவது உறுதியாகிவிட்டது. 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

0

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் தற்கொலையானது பெற்றோர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலை சம்பந்தமாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்தக் கல்லூரியானது திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பாரி வேந்தருக்கு சொந்தமானது. இந்த கல்லூரிக்கான விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இங்கு கல்லூரியின் விடுதியில் 10-வது மற்றும் 2-வது மாடியிலிருந்து இரண்டு மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

இதில் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் செளத்ரி (வயது 19) என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. இவர் விடுதியில் தங்கி முதலாமாண்டு மின்னணு பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார்.

அனில் சௌத்ரியின் தற்கொலை குறித்து மறைமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அனில் சௌத்ரியின் பெற்றோர்கள் படிப்பிற்காக நிறைய கட்டுபாடுகள் விதித்துள்ளதாகவும். குறிப்பாக டி.வி கூட பார்க்கக் கூடாது எனவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு அவரது பெற்றோர்கள் அனைத்து விஷயங்களுக்கும் மிகுந்த கட்டுப்பாடு விதித்ததால் அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அனில் செளத்ரியுடன் தங்கியிருந்த மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பதற்கே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இவரது தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமா என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள்.

SRM University Students Suicide Death Trending
SRM University Students Suicide Death Trending

இதே போல கல்லுரி விடுதியின் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் சொண்ட மாணவி அனுப்ரியா பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட இந்த அனு பிரியாவும் கல்லூரி விடுதியில் தான் தங்கி படித்து வந்துள்ளார்.

இவர் சனிக்கிழமை நடைபெற்ற கடைசி தேர்வை முடித்து விட்டு விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்த அனு பிரியாவை அழைத்துச் செல்ல அவரது அம்மா  செல்வியும், சகோதரர் ராஜூ சுந்தரமும் வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து கொண்டிருந்த இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்திருக்கிறார் இந்த மாணவி அனுப்ரியா.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் இந்த மாணவர்களின் தற்கொலை குறித்து வெளியிட்ட அறிக்கையில், மன அழுத்தம் காரணமாக இரு மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பல்கலைக்கழக உளவியல் துறை உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் ஆன்லைன் இணையதள வசதியின் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க மாணவர்களுடன் எப்போதுமே அவர்களது பெற்றோர் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும். மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்களும் இதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அதில் கூறியிருக்கிறார்.

கல்லூரியில் தொடர்ந்து நடைபெறும் மாணவ மாணவிகளின் தற்கொலைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் முறையான விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொள்ளாத பொது மக்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் பதிவிட்ட விமர்சனங்கள் #SRMcollegesuicudes என்ற ஹேஷ் டேக்கில் தேசிய அளவில் டிரென்ட் ஆகி வருகிறது. பொதுமக்கள் வெளியிட்ட விமர்சன பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக

SRM University Students Suicide Death Trending

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

0

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

சென்னை கட்டாங்களத்தூரில் செயல்பட்டு வரும் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆம் ஆண்டு படித்த வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா என்பவர் 9-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த கல்லூரி மாணவர்களிடையேயும்,பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனஅழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று கல்லூரி நிர்வாகத்தால் கூறப்பட்டது. இதையடுத்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் தற்கொலை செய்து கொண்ட அனுப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  அனிரூத் என்ற மாணவரும் நேற்று தற்கோலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிரூத் மின்னணு பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படித்து வந்த அவர் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார். அனிருத் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் கல்லூரி விடுதியில் மாணவியும், மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் SRM கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?

0

அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் தேசிய அளவில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை தொடரவுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சிகள் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மூலம் அமைச்சர் ஆகும் வாய்ப்பை பற்றி ஒவ்வொரு கட்சியும் சிந்தித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியை தராமல் விட்டால் அதிமுக கட்சியை உடைப்பேன் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்து உள்ளார். இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக பாமக,பாஜக மற்றும் தேமுதிக உடன் அமைந்த கூட்டணியை வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்களை கொண்ட நால்வர் அணியை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியின் முக்கியமான நடவடிக்கைகளை கவனித்து வந்தார். இவர்களும், கட்சி சம்பந்தமான முக்கிய முடிவைகளை எடுத்து செயல்படுத்தி வந்தனர். இந்த நால்வரும் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்தனர். ஜெயலலிதாவின் அறிவுரைப்படி கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவை எம்பி பொறுப்பையும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் வழங்கினார். அந்த அளவுக்கு ஜெயலலிதா, வைத்திலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா காலமானார். அதன்பிறகு, அதிமுக சசிகலா, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. அந்த நேரத்தில் கூட சசிகலா அணியில் தான் இருந்தார். இந்த நிலையில் சசிகலா சிறை சென்ற பிறகு, ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அப்போதும் கூட இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

மேலும் படிக்க :
தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி மீண்டும் இணைந்தது. அதன்பிறகு கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில் முடிவெடுக்குக்கும் குழுவிலும் முக்கிய நபராக உள்ளார். இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் ஆலோசனையின் படி தான் டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தமிழக அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் இம்முறை தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒன்று அல்லது 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.

ADMK Will Devide Due to Minister Post Issue-News4 Tamil Online Tamil News Today
ADMK Will Devide Due to Minister Post Issue-News4 Tamil Online Tamil News Today

இதற்கிடையே ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாநிலங்களவை எம்பியாக வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் வைத்திலிங்கம் சீனியர். அவருக்கு அமைச்சர் பதவி கேட்டும், ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என ஓபிஎஸ், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்று வைத்திலிங்கம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,இதற்காக வைத்திலிங்கமும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் சீனியர் எம்பியான எனக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வைத்திலிங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :
ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் கட்சியை உடைத்தால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக காணாமல் போகும் நிலை ஏற்படும். இது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :
சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

0

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார்.

இங்கு அன்புமணி ராமதாஸ் கடந்த 5 வருடங்களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்றே பல்வேறு தரப்புகளிலும் கூறப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பல்வேறு இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள்.

திமுக சார்பாக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. மேலும் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் நகைகளையெல்லாம் இலவசமாக மீட்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தது. இது பெண்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வாக்குகளாக மாறியது.

இந்நிலையில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் படு தோல்வியை தழுவி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டது. தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே ஆட்சியே மீண்டும் தொடர்கிறது.

இதையும் படிக்கலாம்

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

இவ்வாறு உள்ள சூழ்நிலையில் தருமபுரி தொகுதியில் அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் செந்தில்குமாரிடம் திமுக அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் அல்லது நிறைவேற்ற முடியாது என்று நேரிடையாக பதில் கூறாமல் ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினராக வாய்ப்புள்ளதாகவும் அவரும் இந்த தொகுதியில் மக்கள் பணியற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது திமுக உறுப்பினர் செந்தில்குமார் தான் ஆனால் அவரோ அந்த தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகி தருமபுரி தொகுதிக்கு சேவை செய்வார் என்று கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவர் கூறுவது போல அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் தமிழகம் முழுவதற்குமாக தான் செயல்படுவாரே தவிர குறிப்பிட்ட தொகுதிக்காக செயல்பட முடியாது.

இவ்வாறு திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாக்குகளை கவர மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தருமபுரி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்றபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இதையும் படிக்கலாம்

ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

0

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதி இடங்களில் அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் அனைத்துமே தோல்வியை தழுவின.

தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த காலங்களில் தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது தான் என்றாலும், அதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு பெரிதாக எதையும் செய்ததில்லை.மேலும் இலங்கை தமிழர் படுகொலையில் கண்டும் காணாமல் இருந்து தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த நினைத்த எட்டு வழி சாலை, தூத்துக்குடி கலவரம் மற்றும் தேசிய அளவில் செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை,GST வரி விதிப்பு போன்றவை தமிழக மக்களின் மனதில் பாஜகவிற்கு எதிராக பதிந்து விட்டது. இது போன்ற திட்டங்களுக்கு ஆளும் அதிமுக அரசும் துணை போனது மேலும் தமிழக மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பொதுவான காரணங்கள் நிறைய இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரது தனிபட்ட செல்வாக்கின் மூலம் வெற்றி பெற்று விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் திமுகவின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அடைந்த இந்த தோல்வி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கட்சிக்குள் இருந்த உட்கட்சி பிரச்சனைகளும்,கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த போது பாதிக்கப்பட்டவர்களும் சமயம் பார்த்து இந்த தேர்தலில் துரோகம் செய்துள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள்.

மேலும் படிக்க

ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

மேலும் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரை தவிர வேறு யாரையும் சேலம் மாவட்டத்தில் வளர விடவில்லை என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வன்னியர்கள் பெரும்பான்மையினர் வாழும் சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அவர்களை இவர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எல்லா சமூக மக்களையும் பகைத்து கொண்டு தன்னுடைய சொந்த சமூகமான கொங்கு வெள்ளாள மக்களுக்கு பெரும்பான்மையான உதவிகளை இவர் செய்திருந்தும் இந்த தேர்தலில் அந்த சமுதாய மக்களும் இவரை காலை வாரி விட்டுள்ளனர்.மேலும் தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தை பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

ஜெயலலிதா இல்லாத,கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கும் நிலையில் தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் தேமுதிக வாக்குகள் ஓரளவு கை கொடுத்து வாக்கு சதவீதத்தை ஓரளவு உயர்த்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட சசிகலா மற்றும் தினகரன் அணியினருக்கு எங்கும் செல்வாக்கில்லை என்பது இந்த தேர்தலில் உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இவ்வாறு ஆட்சியை ஓரளவு தக்கவைத்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இனி தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை கண்டறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.