தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு தடை!!தமிழக அரசு உத்தரவு..!!

0
69

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் 5 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு முடக்கமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் இயங்க தடைச்செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை தளர்த்தும் விதமாக கடந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்தே மண்டல போக்குவரத்து செயல்முறையில் இருந்தபோதிலும் தற்போது தொற்றின் வீரியம் கட்டுக்கடங்காத நிலையில் செல்வதால் மீண்டும் பொது போக்குவரத்து இயக்க வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது.

author avatar
Parthipan K