தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!

ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களையும், விரத நாட்களையும் கொண்டாடி வருகிறோம். அதில் குறிப்பாக பெண்கள் மட்டும் வழிபடக்கூடிய விரத நாட்கள் எனவும் சில விரத நாட்கள் இருக்கின்றன. தீர்க்க சுமங்கலி என்ற வரம் பெற வேண்டும், தன்னுடைய கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் வழிபடக்கூடிய விரத நாட்களுள் மிகவும் முக்கியமான விரத நாள் தான் இந்த காரடையான் நோன்பு. சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனவும் இதனை கூறுவர். எமனோடு போராடி … Read more

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அப்போ துளசி மாடத்தை வழிபடும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

பெருமாளை வழிபடக்கூடிய முக்கியமான வழிபாட்டு பொருட்களுள் ஒன்று தான் இந்த துளசி. பெருமாள் வழிபாட்டில் துளசியை பயன்படுத்தினாலும் கூட, துளசிக்கு என தனியாக வழிபாட்டு முறைகளும் உள்ளது. துளசியை மாடத்தில் வைத்து பலரும் இன்று வழிபட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு இந்த துளசி மாடத்தை எவ்வாறு வழிபடுவது என்பது தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு துளசி மாடத்தை வழிபடுவதற்கான வழிபாட்டு முறைகளை தெரியாமல் வழிபட்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் துளசி மாடம் என்பதை அனைத்து வீடுகளிலும் வைக்க … Read more

உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்குகிறதா..? அப்போ உங்களைப் பற்றிய ரகசிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஒருவருடைய பெயர் தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அவரவர் பெயரில் உள்ள அர்த்தங்களின் வாயிலாக தான் அவர்களது வாழ்க்கை முறைகளும், முன்னேற்றமும் அமையும். இப்பொழுது N என்ற எழுத்தை பார்க்கும் பொழுதே, முதலில் ஒரு கோடு மேல் நோக்கியும், பின்பு கீழ் நோக்கியும், இறுதியாக மேல்நோக்கியும் செல்லும். இவர்களின் வாழ்க்கையை இந்த எழுத்தே காட்டிக் கொடுத்து விடும். அதாவது N என்ற எழுத்தில் ஆரம்பிக்கக் கூடிய பெயர்களை உடையவர்களின் வாழ்க்கை இறக்கத்தில் … Read more

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கனவுகளே வாழ்க்கை இல்லை என்றும், கனவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் கூறுவார்கள். பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு என்பது உருவாகும். குழந்தைகள் தூங்கும் பொழுது கனவு காண்பதன் மூலம் தான் சிரிப்பது, அழுவது போன்ற செயல்களை செய்கின்றன. தூங்கும் பொழுது கனவுகள் வருவது என்பதை தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். அதேபோன்று நாம் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு என்பதும் கூறப்பட்டு வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் … Read more

சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!

பொதுவாக பிரதோஷம் என்பது விரதம் இருந்து சிவனை வழிபடக்கூடிய ஒரு நல்ல நாள். அந்த நல்ல நாளில் கோவிலுக்கு சென்று, அபிஷேகம் பார்த்து, வழிபாடு செய்து,சுவாமி உடன் திருவீதி உலா வந்து விரதத்தை முடிப்பது என்பது வழக்கம். ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாக அல்லது சிவன் கோவில் மிகவும் தூரமாக உள்ளது, செல்ல முடியாத சூழ்நிலை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ வழிபாட்டினை செய்து கொள்ளலாம். இந்த பிரதோஷம் அன்று நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் … Read more

இறந்தவரை நினைத்து அழுதால் அவருக்கு ஆறுதல் தருமா..?!

நமது உறவுகளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அனைவரும் அழுகிறோம். அதுவே மிகவும் நெருங்கிய உறவாக இருந்தால் அவரை அனுதினமும் நினைத்து, மனம் வருந்தி அழுது கொண்டே இருப்போம். அது இயற்கையான ஒன்றுதான். ஆனால் நாம் இவ்வாறு அவரை நினைத்து அழுது கொண்டே இருப்பது, இறந்தவருக்கு ஆறுதலை தருமா? என்று கேட்டால் அது நிச்சயம் தராது என்றே கூற வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும். நம்மை நினைத்து அனைவரும் அழுகிறார்களே என்ற … Read more

உங்கள் மணி பர்ஸ் லக்கி பர்ஸ் ஆக வேண்டுமா..?! பணம் அதிகமாக சேர இதை செய்யுங்கள்..!!

பெண்கள் தங்களது பணத்தை வைக்கக்கூடிய பேக் மற்றும் மணி பர்ஸ் கிழிந்து இருந்தால் அதனை தைத்து வைத்து பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நாம் பணம் வைத்து புலங்கக்கூடிய அந்தப் பொருள் எப்பொழுதும் ஒரு நேர்மறை ஆற்றலுடன் இருக்க வேண்டும். கிழிந்து இருந்தால் அது ஒரு விதமான எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும். எனவே பெண்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் தெளிந்து இருந்தால் அவரவர் வசதிக்கு ஏற்ப புதிய பேக் அல்லது பர்ஸ் ஐ வாங்கி பயன்படுத்துவது நல்லது. … Read more

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளில் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீட்டிற்கு நாமாகவே வறுமையை தேடித் தருகிறோம். சில விஷயங்களை நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நினைத்து, தவறாக செய்து விடுவதனால் பல விதமான பாதிப்புகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது. என்னதான் 500, 1000 என நோட்டு காசுகள் வந்தாலும், நமது வீட்டின் பூஜையறையில் சில்லறை காசுகள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சில்லறை காசுகளுக்கு முன்பாக … Read more

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றால் நாம் பிறந்த ஆங்கில தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடி வருகிறோம். ஆனால் நாம் பிறந்த நாளன்று என்ன நட்சத்திரம் இருந்ததோ அந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அதாவது நாம் பிறந்த தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு தான் பிறந்தநாள் என்பதை கொண்டாட வேண்டும். நமது முன்னோர்கள் ஒருவரின் பிறப்பு என்பதை நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டும், இறப்பு என்பதை திதியை அடிப்படையாகக் கொண்டும் செயல்படுத்த வேண்டும் … Read more

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பொதுவாக நாம் வீடு கட்டும்பொழுது கடவுளுக்காக என ஒரு பூஜை அறையை ஒதுக்கி விடுவோம். பூஜை அறையில் அழுக்கு, தூசு, ஒட்டடை என படிய விடக்கூடாது. அதேபோன்று வம்சா வம்சமாக சாமி படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம் என பலவிதமான படங்களை பூஜையறையில் வைத்திருப்பர். அந்தப் படம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எங்களது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய சுவாமி புகைப்படம் என்று, புகைப்படங்கள் உடைந்து இருந்தாலும் ஒரு சிலர் அதனை பூஜை அறையில் வைத்திருப்பர். … Read more