வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

0
140
#image_title

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

செம்பட்டி அருகே, இயற்கை வழியில் குழந்தை பெற்றவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு, காவல்துறையினர் அனுமதி மறுப்பு. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த திண்டுக்கல்-செம்பட்டி நெடுஞ்சாலை வீரக்கல் பிரிவு தனியார் கல்லூரிக்கிடையே தோட்டத்தில், மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் ஒன்று கூடும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை, மதுரை, கோவை, பொள்ளாட்சி, உடுமலைப்பேட்டை, பெங்களூர், கேரளா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட மருத்துவ அலுவலர் பரிந்துரையின்பேரில், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி சின்னாளபட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளதை அடுத்து புகாரின் பேரில், நிகழ்ச்சிக்கு சின்னாளபட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனால், சுமார் 3 மணி நேரம் குழந்தைகளுடன் கடும் வெயிலில் காத்திருந்த பெண்கள், காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை அனுமதி மறுத்ததால், போலீசாரை கண்டித்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகள் குடும்பத்தினருடன் செம்பட்டி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து, சின்னாளப்பட்டி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, அப்பெண்கள் கூறுவையில், வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் சங்கம விழா ஏற்கனவே கோயமுத்தூர், வடலூரில்நடத்தியுள்ளோம்.அதேபோல இன்று செம்பட்டி அருகே வாழ்க வளமுடன் என்ற தனியார் தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.

அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மரபு வழியில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது சட்ட விரோதம் போல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்த வந்த தங்களை காவல்துறையினர் விரட்டியடித்து

சாலையோரத்தில் சுமார் மூன்று மணி நேரம் பச்சிளம் குழந்தைகளுடன் வெயிலில் நிற்கவைத்து அலைக்கழித்தனர். பொறுமை இழந்த நாங்கள் தங்களின் தனிமனித உரிமைக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.