மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

0
269
#image_title

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி

1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

2.எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30 மணி, மற்றும் அதிகாலை 5.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

3.திருவள்ளூர்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுநேரமும் ரத்து செய்யப்படுகிறது.

4. திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவடி ரெயில்கள்: 

1. எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

2. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

3.ஆவடி-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

4. ஆவடி-கடற்கரை இடையே அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

5. கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

பட்டாபிராம்: 

1. எம்.ஜி.ஆர். சென்டிரல்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

2.பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

3. கடற்கரை-ஆவடி இடையே காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

4.ஆவடி-கடற்கரை இடையே அதிகாலை 4.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

5.அரக்கோணம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

6. அரக்கோணம்-கடற்கரை இடையே அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம்: 

1.பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் – எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. அரக்கோணம் – எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3.திருத்தணி – எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருத்தணி: 

1. எம்.ஜி.ஆர்.சென்டிரல் – திருத்தணி இடையே அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர்.சென்டிரல் மற்றும் ஆவடி இடையே நாளை பகுதி ரத்து செய்யப்படுகிறது.

2.எம்.ஜி.ஆர்.சென்டிரல் – திருவள்ளூர் இடையே காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் ஆவடி இடையே நாளை பகுதி ரத்து செய்யப்படுகிறது.

3. கடற்கரை – திருவள்ளூர் இடையே காலை 5.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை மற்றும் ஆவடி இடையே நாளை பகுதி ரத்து செய்யப்படுகிறது. 

4. எம்.ஜி.ஆர்.சென்டிரல் – திருவள்ளூர் இடையே காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர்.சென்டிரல் மற்றும் அரக்கோணம் இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.