சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0
77
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு!

சென்னை அயனாவரத்தில் சேர்ந்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆப்பரேட்டர் உட்பட 17 பேர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.  

முன்னதாக  குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார் மீதமுள்ள 16 பேருக்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

author avatar
CineDesk