சென்னை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து! களத்தில் குதித்த திமுக சட்டசபை உறுப்பினர்!

0
73

சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு கஸ்தூர்பா மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து உண்டாகியிருக்கிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து உண்டாகியிருக்கிறது.

திருவல்லிக்கேணியில் இருக்கின்ற அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, இந்த தீ விபத்து உண்டாகியிருக்கிறது சரியான சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் புகை சூழ்ந்ததன் காரணமாக, குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக, பொதுமக்கள் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திமுகவின் சபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

மேலும் அங்க ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்க ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில் தான் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி அடைந்து சட்டசபை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.