மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!?

0
124
#image_title

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!?

மாற்றுத்திறனாளி ஒருவரின் வயிற்றில் கூல்டிரிங்ஸ் பாட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டிலை அகற்றினர். மேலும் அந்த மாற்றுத்திறனாளி சைகை மூலமாக கூல்டிரிங்ஸ் பாட்டில் எவ்வாறு வயிற்றினுள் சென்றது என்பது பற்றியும் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூரில் வசித்து வரும் 45 வயது உடைய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் ஆசனவாயில் இருந்து ரத்தம் வருவதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

சிகிச்சைக்கு சென்ற மாற்றுத்திறனாளியின் நடவடிக்கை வழக்கத்திற்கு மாறாக காணப்பட்ட நிலையில் அவரை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது மாற்றுத்திறனாளி வயிற்றினுள் பாட்டில் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பரிசோதனை மூலம் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்தது கண்ணாடியில் செய்யப்பட்ட குளிர்பான பாட்டில் என்பது தெரியவந்தது.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டீன் ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனை அளித்ததை அடுத்து அறுவைசிகிச்சை நிபுணர் நிர்மலா தேவி அவர்களின் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவானது மாற்றுத்திறனாளி வயிற்றில் இருக்கும் கண்ணாடி பாட்டிலை எப்படி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிக்கு வேறு எதாவது தொந்தரவு இருக்கின்றதா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் மாற்றுத்திறனாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் நல்லபடியாக மாற்றுத்திறனாளி வயிற்றுக்குள் இருந்த கண்ணாடி பாட்டிலை வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது பின்னர் மாற்றுத்திறனாளி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூல்டிரிங்ஸ் பாட்டில் எவ்வாறு வயிற்றுக்குள் சென்றது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் மாற்றுத்திறனாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றத்திறனாளி சைகை மூலமாக தனது ஆசனவாயில் அவரே பாட்டிலை சொருகியதாக கூறினார். இதை கேட்டு மாற்றுத்திறனாளி சைகை மூலமாக கூறியது உண்மையா அல்லது வேறு எதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தெரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.