நடிகர் விஜய் மீது புகார் மனு!! நான் ரெடி பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டு!!

0
156
Complaint against actor Vijay!! I charge against Reddy Pat!!
Complaint against actor Vijay!! I charge against Reddy Pat!!
நடிகர் விஜய் மீது புகார் மனு!! நான் ரெடி பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டு!!
நடிகர விஜய் பாடி அவருடைய பிறந்தநாளுக்கு வெளியான லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இநத திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், திரிஷா, மேத்யூ தாமஸ்,  பிரியா ஆனந்த், அர்ஜூன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்கனவே நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி லியோ திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் விஜய் அவர்கள் பாடிய “நா ரெடி தான் வரவா” பாடல் லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியானது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து டிரெண்டிங்கில் இருந்து வரும் நா ரெடி பாட்டு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் அவர்கள் தான் சென்னை காவல் ஆணையரிடம் இந்த புகாரை அளித்துள்ளார். சமூக ஆர்வலர் செல்வம் அவர்கள் ஆன்லைன் மூலமாக அளித்துள்ள புகாரில் “லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடி கடந்த ஜூன் 22ம் தேதி வெளியான நா ரெடிதான் வரவா என்ற பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளது.
அது மட்டுமில்லாமல் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் உள்ள நான் ரெடிதான் பாடலால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடலாம். எனவே நான் ரெடிதான் வரவா பாடலை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.