வித்தியாசமான முறையில் விநாயகர் வீற்றிருக்கும் முக்கிய தளங்கள்!

0
222

முழுமுதற் கடவுளாம் விநாயகரை அனைத்து கோவில்களிலும் காணலாம் அதாவது ஒவ்வொரு கோவிலிலும் கோவில் வாசல் படியில் அரச மரம் ஒன்றின் அடியில் அவர் வீற்றிருப்பார். அதோடு ஆலயத்தின் உள்ளேயும் இருப்பார் இப்படித்தான் விநாயகரை நாம் தரிசனம் செய்து இருப்போம்.

ஆனால் இங்கே ஒரு சில ஆலயங்களில் சில வித்தியாசமான முறைகளில் வீற்றிருக்கும் விநாயகரையும் பார்க்கலாம் வாருங்கள்.

மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புலிகளுடன் விநாயகர் இருக்கிறார்.

அதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் என்ற ஆலயத்தில் இவரை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் ஆலயத்தில் வீணை ஏந்திய கோலத்தில் விநாயகர் அருள்பாலித்து வருகின்றார்.

திருநெல்வேலியை அடுத்து இருக்கின்ற வாசுதேவநல்லூர் ஆலயத்தில் வாள், கோடரி உள்ளிட்டவற்றை தாங்கி வீட்டில் இருக்கிறார் யானை முகன்.

விருதுநகர் அருகில் இருக்கின்ற திருச்சுழி சிவன் ஆலயத்தில் தூணில் விநாயகரை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது அதேபோல ஈரோடு அடுத்து இருக்கின்ற பவானி ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் வீணையுடன் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக்! காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து!
Next articleதிருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here