இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

0
77
Director Bhagyaraj admitted to hospital The screen world in shock!
Director Bhagyaraj admitted to hospital The screen world in shock!

இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா தொற்றானது முந்தைய அலையை விட,தற்போதைய 2 வது அலை தீவிரம் காட்டி வருகிறது.அந்தவகையில் அரசியல் தலைவர்கள்,திரையுலகினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தங்களை தனிமபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் பெரிய நடிகர்களின் படபிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிவகர்த்திகேயன்,விக்ரம் மற்றும் ராஜமௌலி-யின் படங்கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி கொரோனா தொற்று காரணமாக வைக்கப்பட்டுள்ளது.நகச்சுவை நடிகர் பாண்டு,ஒவ்வொரு பூக்களுமே பாடகர் மோகன்,அயன் படம் இயக்குனர் கே.வி ஆனந்த் போன்ற பல தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனையடுத்து பிக்பாஸ் பிரபலம் கேப்ரியாலாவுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி தன்னை தனிமைபடுத்தி உள்ளார்.அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி தனிமை படுத்தியுள்ளார்.அந்தவகையில் தற்போது பல படங்களில் நடித்தும் பல படங்களை இயக்கி இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் பாக்யராஜ்.அவர் முதல் முதலாக அறிமுக படுத்திய நாயகி தான் பூர்ணிமா பாக்யராஜ்.இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக  அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் தனது வலைத்தள பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.அவரது அப்பா மற்றும் அம்மா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சிகிச்சை பெற்று வந்து தனிமை படுத்து உள்ளதாகவும்,தாங்களும் 10 நாட்களுக்கு தனிமை படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி சமீபத்தில் தங்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.அவரது அப்பா அம்மாவிற்காக பிராதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.