திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

0
164
DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?
DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் வயிற்று வலி அதிகமாகி இருந்தது.

இதனால் மனமுடைந்த அருண்  கடந்த வாரம் விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலனளிக்காமல் மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு  அவருக்கு பலன் அளிக்காமல் அருண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண் தற்கொலைக்கு வயிற்று வலி தான் காரணமா என்று கூறப்பட்டாலும், வேறு காரணம் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K