இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!

0
61
Do you even need U-Dope to do this thing? The man who surprised the police!
Do you even need U-Dope to do this thing? The man who surprised the police!

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!

மக்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் மீது கவனம் செலுத்தும் வண்ணம் செய்கின்றனர்.

மும்பையில் விரார் கிழக்கில் கோப்சர்பாடாவில் தனது மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார் 35 வயதான அஜய் ஹர்பஜன் சிங்.இதில் ரூபி ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர்.

அதன் பிறகு அந்த நபரை பிரிந்து அஜய் ஹர்பஜனை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையையும், பெற்று எடுத்துள்ளார்.இந்நிலையில் அஜய் ஹர்பஜன் திடீரென  ரூபியின் உறவுக்கார பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சில மாதங்களுக்கு முன் சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து ரூபி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதன் பேரில் அவர் மீண்டும் ரூபியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.மேலும் இவருக்கும் ரூபிக்கும் நாளுக்கு நாள் வாக்கு வாதங்கள், தகராறுகள் அதிகரித்து உள்ளது.

அதன் காரணமாக தனது மனைவி ரூபியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும்  என யோசித்துள்ளார்.ஆனால் எப்படி என தெரியாததால் யூ-டூபின் உதவியை நாடி உள்ளார் கணவன்.

பின் அதன்படி மனைவியை கழுத்தை நெரித்து கொலையும் செய்து விட்டார்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு ரூபியின் தங்கை அக்காவை தேடி வந்த போது ரூபி உயிர் இழந்து உள்ளதை பார்த்து அதிர்ந்த அவர், போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் அஜய் ஹர்பஜனை கைது செய்து விசாரித்த போது அவர் எப்படி கொலை செய்தார் என்பதை விவரித்தார்.கொலை செய்ததை ஒத்துக் கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் போலீசாரை வியக்க வைத்துள்ளது.