பாமகவின் பல ஆண்டு கனவு திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும்! MP அன்புமணி ராமதாஸ் முதல்வரிடம் வேண்டுகோள்!

0
231

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், அந்த கிராம மக்களின் வருவாய் தொழில் அனைத்துமே வேளாண்மை ஆகும். ஆனால் இன்றைய சூழலில் வேளாண்மையை மறந்து கொண்டு செய்கிறோம் என்பது உண்மை. அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

பாட்டாளி மக்கள் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவற்றில் அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் , மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகள் எப்படி முக்கியமோ முதன்மையாக இருக்கிறதோ, அது போல வேளாண்மை சார்ந்த பாடங்கள் கண்டிப்பாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பலர் அறிவுறுத்தலின் பேரில் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அறிவுறுத்தலின் படி 1996 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களிடம் அந்த ஆணையம் அறிக்கையை சம்ப்பித்தது. ஆனால் திமுக அந்த அறிக்கையை செயல்படுத்தாமல் காலம் கடத்தியது.

மேலும் 2001 இல் மீண்டு அதிமுக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நிலையில் வேளாண்மை குறித்த அறிக்கையை செயல் படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி 200 பள்ளிகளில் மட்டும் முதன்மையாக வேளாண்மை பாடதிட்டமாக சேர்க்கப்பட்டது. அதற்கும் தனி ஆசிரியர்களை நியமிக்க வில்லை. இதனால் சரியாக கடைபிடிக்க வில்லை.

இதனால் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக வேளாண்மை குறித்து தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறது. அந்த அறிக்கையில் வேளாண்மை குறித்த முக்கியத்துவம், வேளாண்மை தேவைகள், வேளாண்மையின் இன்றைய நிலை போன்றவற்றை கட்சியில் நிழல் நிதி அறிக்கையில் வெளியிட்டுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேளாண்மை குறித்த அறிக்கையை முதவரிடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன் எப்போ என் பேச்சை கேப்பிர்கள்? கொட்டும் மழையில் வெறிப் பேச்சு! கை கொடுத்ததா சீமான் பேச்சு?
Next article10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் பாமக! காவிரி நீர் வீணாய் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here