என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?

0
98

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.


4 பேரை என்கவுண்டர் செய்த தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன இதனிடையே
குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் பாராட்டினர். மேலும், பாவ் நகர் மாவட்டம், மகுவா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்தார்.


இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நமது நாட்டின் போலீசாரை எண்ணி பெருமை அடைகிறேன். இந்த நாட்டின் பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஐதராபாத் போலீசார் மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் ஐதராபாத்துக்கு நேரில் சென்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை போலீசாருக்கு வழங்குவேன்” என கூறி உள்ளார்.

author avatar
CineDesk