விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

0
225
#image_title

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே ஹரியானாவில் சிறைகளை அமைப்பதற்கும் சாலையில் தடுப்புகளை உருவாக்குவதற்கும் விவசாயிகள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை என மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் மகளும் பொருளாதார வல்லுநருமான மதுரா ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் முன்னணி விஞ்ஞானிகள் விவசாயிகளை பற்றி பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு திமுக எம்பி கனிமொழி விவசாயிகளுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Preethi