18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!!

0
64
Father and son together after 18 years !! Sivakarthikeyan confused !!
Father and son together after 18 years !! Sivakarthikeyan confused !!

18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!!

திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சொந்த தயாரிப்பில் பல படங்களை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் அத்தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்பு சினிமாவில் கதாநாயகனாக தம பதித்தார். மேலும் பல இன்னல்களை சந்தித்து பின்பு தான் இந்த இடத்திற்கு வந்ததாகவும் பல விருது வழங்கும்  நிகழ்ச்சிகள் தெரிவித்திருந்தார்.

மேலும் இவரின் பெரும் இழப்பாக தனது தந்தையின் இழப்பை ஒவ்வொரு விருது நிகழ்ச்சியிலும் வருத்தத்துடன் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு ஆராதனா என்ற ஒரு அழகிய பெண் பிள்ளையும் உள்ளது. தற்போது ஆர்த்தி –சிவகார்த்திகேயன் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்து உள்ளது.

இதை சிவகார்த்திகேயன் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்து இருக்கிறார். என் மகனாக. என் பல வருட வழி போக்கத் தான் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி கூரறுகிறேன் எனவும்,  அம்மாவும் குழந்தையும் நலம், எனவும் அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவின் கீழ் அவரின் ரசிகர்கள் உங்களுக்கு மகன் பிறந்ததில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
CineDesk