மனைவியுடன் சண்டை.. மகளை கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

0
156

மனைவியுடன் நடந்த சண்டையால் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம்,மும்பையின் மலாட் பகுதியில் தந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். கணவன், மனைவிக்கிடைக்கியே மனஸ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவதன்று, வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பின்னர்,சுனிதா 13 வயது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பும் போது அவரின் மற்றொரு மகள் லக்க்ஷா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், நந்தன் தனது மகளை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவிக்கும் தனக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் அந்த மன உளைச்சலில் மகளை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

பெற்றோர்கள் சண்டையிடுவது குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். ஆனால், கணவன் மனைவி சண்டையில் ஒன்றுமே அறியாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை வரம் வேண்டி பலர் இருக்கும் இந்த காலகட்டத்தில் சாதாரண பிரச்சனைகக்கு மகளை கொலை செய்த தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.