ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

0
130
#image_title

ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி கிராமத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆண்டிபாளையம் ஏ கே ஆர் தெய்வீக ராஜன் நினைவு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சேத்தியா தோப்பு சேவா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் ரத்த பரிசோதனை முகம் நடைபெற்றது.

இம் முகாமினை ஆண்டிப்பாளையம் ஏ கே ஆர் தெய்வீக ராஜன் நினைவு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை நிறுவனர் ஏ கே ஆர் டி சௌந்தரராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள்
பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

மேலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை நடைபெற்றது. அதில் கண்ணில் குறை நீர் அழுத்தம், கண்ணில் நீர் பை அடைப்பு, சீழ் வடிதல், மாலை கண் மாறு, கண் எரிச்சல், கிட்ட பார்வை, தூரப்பார்வை குறைபாடு, தலைவலி, ஒற்றை தலைவலி, தொடர்ச்சியாக கண் வலி, கண்ணில் பூ விழுதல், கருவி புண் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினால் வரும் பாதிப்பு கண்புரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் பிபி சுகர் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு சேவா மருத்துவமனை மருத்துவர் முத்தமிழன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வானமாதேவி ராஜா செய்திருந்தார் முகாமில் வானமாதேவி சோழதரம் மாமங்கலம் ஆண்டிபாளையம் அகர புத்தூர் அறந்தாங்கி சித்தமல்லி கொண்ட சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

author avatar
Savitha