அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
120

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

author avatar
Pavithra