ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் முதல் திருநங்கை என்ற அந்தஸ்தை பெரும் நபர்!

0
121
Great person with the status of the first transgender to set foot in the Olympics!
Great person with the status of the first transgender to set foot in the Olympics!

ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் முதல் திருநங்கை என்ற அந்தஸ்தை பெரும் நபர்!

43 வயதான ஹப்பார்ட் 2012 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்று வந்தார். இவரின் தந்தை ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர் ஆவார். இளம் வயதிலேயே பளு தூக்குதல் போட்டியில் கவனம் செலுத்தியவர் ஹப்பார்ட் ஆவார்.  அதன் பிறகு அவரது உடலில் பல மாற்றங்களை உணர்ந்த அவர் மூன்றாம் பாலினத்தவர் அதாவது திருநங்கையாக மாறி உள்ளார். எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும், சலசலப்புக்கும் மத்தியில் பெண்களுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பளு தூக்குதல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். 2019 ம் ஆண்டு பசிபிக் விளையாட்டிலும், 2020 ரோமில் நடந்த ரோமா உலக கோப்பையிலும் மகுடம் சூடினார். திருநங்கைகள் பெண்களோடு மோதுவதை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவர்களுக்கு என்று பிரத்யேக விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக அவர்களின் டெஸ்டோஸ்டிரோனின் அதாவது ஆண்களுக்கான ஹார்மோன் எண்ணிக்கை ஒரு லிட்டருக்கு 10க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி ஆகும். அதன் அடிப்படையில் கடந்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான நியூசிலாந்து அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் விஷயத்தில் வீராங்கனைகள் தரப்பில் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது. திருநங்கைகளை பெண்களுக்கான போட்டியில் விளையாட வைப்பது நியாயமற்றது என்று பெல்ஜியம் பளுதூக்குதல் வீராங்கனை அன்ன வான் பெலிங்கன் பகிரங்க எதிர்ப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இத்தகைய நபர்கள் பெண்களை விட கூடுதல் வலுவுடன் இருப்பார்கள் என்பது அவர்களது எண்ணம்.

நாங்கள் ஹப்பார்ட் உடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். ஏனெனில் அவர் மீது இப்போது பெரிய அளவில் கவனம் திரும்பியுள்ளது. அவருக்கு எல்லா வகையிலும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் பெண்களுக்கான சூப்பர் ஹெவிவெயிட் 87 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் களம் காண்கிறார் ஹப்பார்ட்.

எதிர்ப்பு குரல் ஒலிப்பதை அறிந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச், இப்போதைக்கு அவர் விதிமுறைக்கு உட்பட்டு தான் தேர்வாகியுள்ளார். போட்டி நடக்கும்போது விதிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஆலோசித்து வருங்காலத்தில், இது தொடர்பாக புதிய விதிமுறை உருவாக்குவது குறித்து முடிவு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.